ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

27 ஜூன், 2012

ஜாக்கிரதை.....

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூன் 27, 2012 No comments


நன்றி,www.adiraipost.blogspot.com

25 ஜூன், 2012

வளைகுடா சபுராலிகளுக்கு ஒரு அறியத்தகவல்.

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜூன் 25, 2012 No comments

சவூதி அரேபியா வாழ் வெளிநாட்டினர்கள் அவர்களின் அரசாங்கம் சார்ந்த கீழ்க்கண்ட தகவல்களை அறிய சவூதி அரேபிய அரசின் உள்விவகாரதுறை அமைச்சகம் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்

உங்கள் குடும்பத்தினர்களின் விசா வரவு மற்றும் வெளியேற்றம் அறிய வேண்டுமா?

உங்களுக்கு இந்த வருடம் ஹஜ் செய்வதற்கு அனுமதியுள்ளதா / தகுதிபெற்றவரா?

உங்களின் சுகாதார அட்டை புதுப்பிக்கப் பட்டுள்ளதா?

உங்களுடைய ஆதரவில் வேலை செய்பவர்களின் குடியரசு அட்டை நிலை என்ன?

உங்களின் குடியரசு அட்டை (இக்காமா) நிலை என்ன?

உங்களின் விசா நிலை என்ன? (Exit / Re-Entry)

உங்களின் கைரேகை எடுக்கப்பட்டு அது அங்கீகரிக்கப் பட்டுவிட்டதா?

உங்களுக்கு போக்குவரத்து துறையின் அபராதம் உள்ளதா?

உங்கள் வாகனத்திற்கு எதுவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா?

இதுபோன்ற தகவல்களையும், மேலும் தகவல்களையும் பெற...

http://www.moi. gov.sa/wps/ portal
என்ற மேலேயுள்ள சுட்டியை அழுத்தி, E-Services Tab என்ற பகுதியை அழுத்தி ”Passports" என்ற தலைப்பை அழுத்துங்கள்.

நாம் எதிர்பாராமல் திடீரென்று பயணம் செல்ல நேரலாம், மேலேயுள்ள எதாவது ஒன்றின் தடங்கலால் உங்கள் பயணம் செல்லமுடியால் ஆகலாம். எனவே இன்றே இவைகளை சரிபார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களின் கடவுச்சீட்டு (Passport) கலாவதியாகியிருந்து நீங்கள் அவசரமாக பெறவேண்டியிருந்தால் “தட்கல்” என்ற அவசரமுறையில் இந்தியத் தூதரகத்தை அனுகினால் தருவார்கள் அவர்களின் இணையதள முகவரி

http://www.indianembassy.org. sa
(Tatkal service for issue of passport is also available)

”பிரச்னைகள் வருமுன் காப்போம்”.

உங்களுக்கு தெரிந்த சவூதிவாழ் அன்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
நன்றி:லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜூன் 25, 2012 No comments


  1. பெரியத் தெரு மர்ஹூம் அலி முஹம்மது கவுஸ் அவர்களின் மகளாரும், மர்ஹூம் ஜெயினுல்லாபிதீன் அவர்களின் மனைவியும், காஜா சாபு அவர்களின் தாயாரும், அரபி, அப்துல் லதீப், முஹம்மது ரபிக், பாரூக், மலிக் பைசல், முஹம்மது யாசிர், சல்மான் ஆகியோரின் பாட்டியாருமாகிய சரீபுன்னிசா பீவி அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 
இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் மீராபள்ளியில்


2




பெரியத் தெரு மர்ஹூம் ஹாஜி முஹம்மது யாசின் அவர்களின் மகளாரும், கடலூர் O.T மர்ஹூம் காதர் உசேன் அவர்களின் மனைவியும், வாத்தியாபள்ளி தெரு ஜக்கரியா மரைக்காயர், இசாக், நவாஜ் ஆகியோரின் சகோதரியும், லியாகத் அலி, ரபி, ஆசிக் ஆகியோரின் தாயாருமாகிய கைருன்னிசா அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 
இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராபள்ளியில்.

இணைந்த கரங்கள்...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜூன் 25, 2012 No comments


வரலாற்றுச் சிறப்புமிக்க பரங்கிப்பேட்டையின் வரலாற்றுக் குறிப்பில் இடம்பிடித்த 'இந்நாள் பொன்னாள்'என்ற வரிசையில் கடந்த வெள்ளிக்கிழமை (22 ஜூன் 2012) அமைந்தது என்றால் மிகையில்லை. ஆம், அன்றுதான் நமதூரின் இக்கால ஆளுமைகளான மதிப்பிற்குரிய ஜமாஅத் தலைவர் டாக்டர். நூர் முஹம்மது அவர்களும், ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் மதிப்பிற்குரிய முஹம்மது யூனூஸ் அவர்களும் தமக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளி வைத்துவிட்டு, அல்லாஹ்விற்காக, சமுதாய நலனையும்,  ஐக்கிய ஜமாஅத்தின் கட்டுமான நலனையும் கருதி ஒன்றுபட்டனர். அல்ஹம்துலில்லாஹ்
 
ஊர்நலனே பிரதானம் என்று கருத்துவேறுபாடுகளைக் களைந்து விட்ட இந்தத் தலைவர்களைச் சந்தித்து,  ஒற்றுமைக்கு வழிகோலிய ஒருவர் கூறுகையில், "தொடக்கத்தில் பெரிதும் யோசனையாக இருந்தாலும், அல்லாஹ் இத்தகைய முயற்சிகளை வழிநடத்தவும் வெற்றியளிக்கவும் வல்லவன் என்கிற உறுதியான நம்பிக்கையில் இரு தலைவர்களையும் சந்தித்தோம். அல்ஹம்துலில்லாஹ், எதிர்பார்த்தவற்றுக்கும் மேலாக இரு தலைவர்களுமே தத்தம் தான்மை(Ego) கருதாது, ஊர் நலனை முன்னிறுத்தி நல்லிணக்கம் காண்பதில் காட்டிய ஆர்வமே இதில் மிகவும் உற்சாகமளித்தது" என்றார் கண்கள் பனிக்க. "இருவருமே ஒருவருக்கொருவர் மதிப்பு வைத்திருந்தார்கள்; தம் நலனைக் காட்டிலும் ஊர் நலமே உயர்ந்தது என்பதை உணர்ந்திருந்தார்கள், முகமலர்ந்து முயற்சிகளுக்கு முன்னுரிமையும் முற்போக்கும் காண்பித்தார்கள். ஆகவே அல்லாஹ்வின் அருளால் எல்லாமே எளிதாயிற்று".
 
ஆம். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை, கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை.
 
இந்த நல்லிணக்க முயற்சியில் பெயர் குறிப்பிடப்பட்டோர் மட்டுமின்றி மேலும் சில நல்லெண்ணச் சகோதரர்களும் தங்களின் சிறப்பான ஆலோசனைகளையும், கருத்துகளையும் எடுத்து வைத்தார்கள். அவர்களும் மிகுந்த நன்றிக்குரியவர்கள்.
 
அதே சமயம் ஊரே எதிர்பார்த்த நல்லிணக்கம் ஏற்பட்ட பின்னரும், இந்த ஒற்றுமையை, சமுதாய நலனை, இணக்கத்தை விரும்பாதோரும் ஊரில் இருக்கக் கூடும். எதிரிகளாகப் பார்க்கப்படத் தேவையில்லாத அளவுக்கு உதிரிகளே அவர்கள் என்பதால் ஊர் நலனுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது இன்ஷா அல்லாஹ். 
 
இறைதிருப்தியையே நோக்கமாகக் கொண்டு ஊர்நலனை முன்னிட்டு இணைந்த இதயங்களை தான்மை(Ego)யும், அகங்காரமும், அவதூறுகளும் என்ன தான் செய்துவிட முடியும்?
 
எந்நேரத்திலும் முளைக்கும் வல்லமையுள்ள மரணத்தின் மாயக்கரம் கலைத்துப்போடும் பெருங்கனவே,  அதிலும் தன்னையே மையமாகக் கொண்டு ஆடும் மாயைதான் இந்த வாழ்க்கை என்பது புரிந்துவிடும்போது குதர்க்கங்களும், குழப்பங்களும், குற்றங்காணும் மனப்போக்குகளும் குப்புறத் தள்ளப்பட்டு விடும் என்பதையே குறிப்பிட வேண்டியதாகிறது.
 
ஊர்நலன் கருதி இணைந்த உயர்ந்த உள்ளங்களை உங்கள் MYPNO உளமாற வாழ்த்துகிறது.
 
மதிப்பிற்குரியவர்களே!
 
உங்களின் இந்த இதய இணைப்பால், உள்ளப் பிணைப்பால், நமதூரும், சமுதாயமும் அழகிய நற்பலன்களை அறுவடை செய்ய அல்லாஹ் அருள்வானாக.
 
நன்றி,mypno.com

திருமண வரவேற்பு நிகழ்ச்சி பாதியில் நின்றது.

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜூன் 25, 2012 No comments


சென்னை: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட பந்தியில், கூடுதலாக "குலோப்ஜாமுன்' கேட்டதில் வாய் தகராறு ஏற்பட்டு, திருமண வரவேற்பு நிகழ்ச்சி பாதியில் நின்றது.

பெரம்பூர் அருகே செம்பியம், சிறுவள்ளூர் ரோட்டில் உள்ளது யுனைடெட் காலனி திருமண மண்டபம். இங்கு நேற்று திருமணம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர் மணமக்களுக்கு வாழ்த்து சொல்லி விட்டு, விருந்து பரிமாறும் பந்திக்கு சென்றார். விருந்து பொறுப்பு ஒப்பந்த முறையில் விடப்பட்டிருந்தது.

"குலோப்ஜாமுன்' கலாட்டா: அங்கு பரிமாறப்பட்ட இலையில், "குலோப்ஜாமுன்' வைக்கப்பட்டது. அதை சாப்பிட்ட அவர், மேலும் ஒரு "குலோப்ஜாமுன்' வேண்டும் என்று கேட்டார். மேலும், ஒன்று வைக்கப்பட்டது. மீண்டும் ஒன்று கேட்டார். ஆனால், பந்தி பரிமாறிய உலகநாதன், இதற்கு மேல் வைத்தால் கட்டுபடியாகாது எனத் தெரிவித்தார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. அருகிலிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கி விட்டனர்.

உணவு பாழ்: சிறிது நேரம் கழித்து, திருமண மண்டபத்தில் பந்தி பரிமாறும் அறையில் புகுந்த சிலர், அங்கிருந்த பொருட்களையும், உணவுப் பொருட்களையும் சூறையாடினர். இதனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. வரவேற்புக்காக செய்யப்பட்ட விருந்து உணவுகள் அனைத்தும் பாழானது. செம்பியம் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். தாக்குதல் தொடர்பாக, திருமண வீட்டாரிடமிருந்து புகார் பெறப்பட்டது. பந்தி பிரச்னையால் திருமணம் நிற்கக்கூடாது என்று போலீசார் அறிவுரை கூறினர். இதனால் நேற்று காலை திருமணம் தடையின்றி நடந்து முடிந்தது. தொடர்ந்து மதியம் காவல் நிலையத்திற்கு சென்ற இருதரப்பினரும் புகார் கொடுத்தனர். தன்னை தாக்கி, பொருட்களை அபகரித்த உலகநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காதிரேசன் கோரியுள்ளார். செம்பியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நன்றி ;தினமலர் நாளிதழ்