ஹம்துன் அஷ்ரப்

20 பிப்., 2011

பிரபாகரனின் தாயார் மரணம்.

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, பிப்ரவரி 20, 2011 No comments


 பிரபாகரனின் தாயார் பார்வதிஅம்மாள். 81 வயதான இவர் இலங்கையில் வசித்து வந்தார். முதுமை காரணமாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சர்க்கரை நோயாலும், இருதய கோளாறாலும் அவதிப்பட்டு வந்தார். பக்கவாதமும் தாக்கியது. அவரை இந்தியாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
இதற்கு உரிய அனுமதி கிடைக்காததால் பார்வதிஅம்மாள் வந்த விமானம் சென்னையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் மலேசியாவில் சில மாதங்கள் சிகிச்சை பெற்றார்.   அதன்பிறகு இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள வல்வெட்டித் துறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு அங்கு சிலமாதங்களாக அவர் மருத்துவசிகிச்சை பெற்றுவந்தார்.சமீபகாலமாக உடல்நிலை அதிகம் பாதிக்கப்பட்டு சுயநினைவு இழந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.10 மணிக்கு பார்வதிஅம்மாள் காலமானார்.

0 கருத்துகள்: