ஹம்துன் அஷ்ரப்

13 ஜூன், 2011

"கிரிக்கெட்'' வெற்றிப்பெற்றது பரங்கிப்பேட்டை அணி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜூன் 13, 2011 No comments

 சி.முட்லூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பரங்கிப்பேட்டை RCC, அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது. சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் சேலஞ்சர் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது.சிவசங்கரன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முனுசாமி,ராமநாதன்ராமச்சந்திரன்,  நம்மாழ்வார்,  முன்னிலை வகித்தனர். வரதராஜன் போட்டியை துவக்கி வைக்க பாபு சீருடை வழங்கினார். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த நூற்றுஐம்பத்துக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.இந்தபோட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சி.முட்லூர் விளையாட்டுத் திடலில் நடந்தது. அணித் தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முன்னாள் கிரிக்கெட் வீரர் பானுச்சந்தர் முன்னிலை வகித்தார். முதல் பரிசு 6,666 ரூபாய் பரங்கிப்பேட்டை ஆர்.சி.சி., அணியும், இரண்டாம் பரிசு 5,555 ரூபாய் ஒரத்தூர் நாட் ரீச்சபிள் அணியும், மூன்று மற்றும் நான்காம் பரிசுகளாக 7,777 ரூபாயை சி.முட்லூர் சேலஞ்சர் இரு அணிகளும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கினர். தமிழ் நன்றி கூறினார்.

0 கருத்துகள்: