ஹம்துன் அஷ்ரப்

10 ஜூலை, 2012

கணவரை கொன்று நாடகமாடிய மனைவி கைது

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், ஜூலை 10, 2012 No comments

சிகரெட் சூடு மற்றும் கடித்து கொடுமைப்படுத்திய கணவரை, மனைவியே கொன்ற சம்பவம் மதுரையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பீ.பீ. குளத்தை அடுத்த ஜீவா ந‌கரை சேர்ந்தவர் அன்பழகன்(63) இவரது மனைவி உமாமகேஸ்வரி (45). இவர்களுக்கு கார்த்திக் (28) என்ற மகனும், அமலா என்ற மகளும் உள்ளனர். கொத்தனார் ‌வேலை பார்த்து வரும் அன்பழகன், மனைவியை சிகரெட் சூடு வைத்தும், வாயில் கடித்தும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு இவர்கள் இருவருக்கும தகராறு முற்றியது. உமாமகேஸ்வரி, அன்பழகனை கொன்றார். போதையில் தள்ளாடி விழுந்து இறந்ததாக, உறவினர்களிடம் தகவல் தெரிவித்து உடலை அடக்கம் செய்ய முயன்றனர். அன்பழகன் கொலை செய்யப்பட்டு இறந்ததாக போலீசுக்கு தகவல் வரவே, அவர்கள் சம்பவ இடத்திற்கு விசாரணை செய்தனர். விசாரணையில், தான் தான் கொலை செய்ததாக உமாமகேஸ்வரி ஒப்புக்கொண்டதன் பேரில் போலீசார் உமாமகேஸ்வரியை கைது செய்தனர். இக்கொலையில், மகன் கார்த்திக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


நன்றி; தினமலர்

0 கருத்துகள்: