ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

28 பிப்., 2011

இறப்புச் செய்தி

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், பிப்ரவரி 28, 2011 No comments


ஆத்தாங்கரை தெருவை சேர்ந்த, மர்ஹும் செய்யது நூர் அவர்களின் மகளாரும்,மர்ஹும் S.சேக் முஹம்மது அவர்களின் மனைவியும், S.M.ஜலீல் அவர்களின் தாயாருமாகிய ஹாஜியா.செய்யது நிஷா பீவி அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் சிங்கப்பூரில்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

27 பிப்., 2011

போலியோ ‌சொட்டு மருந்து வழங்கப்படுகிறது

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 27, 2011 No comments

தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் கட்ட போலியோ ‌சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் செட்டு மருந்து வழங்கப்படுகிறது. 

26 பிப்., 2011

கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்..

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, பிப்ரவரி 26, 2011 No comments

பரங்கிப்பேட்டை அப்பா பள்ளி சமுதாய கூட கமிட்டி சார்பாக, கல்வியில் பின் தங்கியுள்ள மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாக நாளை மஹ்முதியா ஷாதி மஹாலில் "கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்" நடைப்பெறுகிறது
இதில் M.S. முஹம்மது யூனுஸ் (தலைவர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்,பேரூராட்சி மன்றம்) தலைமையேற்கிறார், முஸ்லிம்களின் எதிர்காலம் என்கிற தலைப்பில் C.M.N. சலிம் M.A. அவர்களும், முஸ்லிம் பெண்களின் சமுதாய முன்னேற்றம் என்கிற தலைப்பில் செய்தா பானு அவர்களும் உரையாற்றுகிறார்கள்


திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு 3 தொகுதிகள்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, பிப்ரவரி 26, 2011 No comments

திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் விரைவில் வருவதையொட்டி, அதிமுக, திமுக உள்ளிட் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டு வருகி்ன்றன. இந்நிலையில், சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை, முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீனை சந்தித்துப் பேசினார். சந்தி்ப்பிற்கு பிறகு, பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்த காதர் மொய்தீன் கூறியதாவது, வெற்றிக்கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கூ்டடணி வெற்றிக்கு பாடுபட உள்ளதாக அவர் தெரிவித்தார். 

விருப்ப மனு தாக்கல்

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, பிப்ரவரி 26, 2011 No comments


தமிழகத்தின் 14-வது சட்டமன்ற தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சிகளும், கூட்டணி தொடர்பாக முனைப்பாக பணியாற்றி வருகின்றன.இந்நிலையில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சியினரிடமிருந்து விருப்ப மனுவினை நேற்று முதல் மார்ச் 7-வரை பெற திட்டமிட்டுள்ளது.

முதல் நாளான நேற்று சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்காக பரங்கிப்பேட்டையிலிருந்து கடலூர் மாவட்ட தி.மு,க பிரதிநிதியும், பரங்கிப்பேட்டை நகர இளைஞரணி அமைப்பாளருமான A.R.முனவர் ஹுசேன், பரங்கிப்பேட்டை ஒன்றிய பிரதிநிதியும், 10-வது வார்டு செயலாளருமான M.K. பைசல் யூசுப் அலி ஆகியோர் விருப்ப மனுவினை தி.மு.க தலைமைக்கழகமான அண்ணா அறிவாலயத்தில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஹஸன் முஹம்மது ஜின்னா உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளிடம் சமர்ப்பித்தனர்.  A.R.முனவர் ஹுசேன் கடந்த முறை புவனகிரி தொகுதிக்காக விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியின் போது நகர தி.மு.க செயலாளர் பாண்டியன், ஒன்றிய பிரதிநிதி கோமு, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் வேலவன், சேக் அப்துல் ரஹ்மான், ஹாஜா, நெய்னா, யாசீன், சலீம், அப்துல் காதர், ஆரிப், பக்ருதின், சாஹுல் ஹமீது உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர். 


நன்றி: mypno.com

25 பிப்., 2011

அ.தி.மு.க.+தே.மு.தி.க. பேச்சுவார்த்தை தொடங்கியது..

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 25, 2011 No comments


வரஇருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என்று முடிவு செய்த தேமுதிக, பிப்ரவரி 24ஆம் தேதி மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பில் பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர். தேமுதிக தரப்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், சுந்தரராஜன், சுதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அதிமுகவுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. பேச்சுவார்த்தை குறித்த விபரங்கள் கட்சித் தலைவர் விஜயகாந்த்திடம் தெரிவிக்கப்படும்.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று தெரிவித்த அவர், ஆட்சியில் பங்கு கேட்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார். 
மேலும் தொகுதி பங்கீடு உறுதியான பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்திப்பார் என்றும் தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

23 பிப்., 2011

மன்னர் அப்துல்லாவின் சலுகைகள்..!

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், பிப்ரவரி 23, 2011 No comments


சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளார். உடல் நலம் குன்றியிருந்து மன்னர் மொராக்கோவில் சிகிச்சை பெற்ற பின்னர் இன்று (23.02.2011) சவுதி திரும்பினார்.
நாடு திரும்பியதும் அவர் அரசு ஊழியர்களுக்குச் சம்பளத்தில் 15 சதவிகிதம் உயர்வு வழங்குவதாக அறிவித்தார். இது தவிர வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டண உதவி, வேலையில்லாமல் இருக்கும் சவுதி பிரஜைகளுக்கு உதவித் தொகை, கடன் வாங்கி செலுத்த முடியாமல் சிறையில் இருப்பவர்களின் கடனை அரசு வழங்கும் என பல சலுகைகளை அளித்துள்ளார். இவ்வாறு ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உதவித் திட்டங்களை அப்துல்லா அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் மக்கள் பொருளாதார நெருக்கடியால் ஆளுகின்ற அரசுக்கெதிராக கிளர்ந்தெழுவது தொடர்ந்து நடைபெற்று வருகையில் சவுதி மன்னரின் இந்த அறிவிப்பு மக்களை அமைதிப்படுத்தும் முயற்சியாக தெரிகிறது.
நன்றி:

வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், பிப்ரவரி 23, 2011 No comments


நேற்று பெய்த திடீர் மழையின் காரணமாக தடைப்பட்டிருந்த வாத்தியாப்பள்ளி தெரு தார் 

சாலை அமைக்கும் பணி இன்று காலை முதல் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.







பரங்கிப்பேட்டையில் மார்க்கக் கல்வி பயிலும் பெண்களுக்கு உதவித் தொகை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், பிப்ரவரி 23, 2011 No comments

இரத்த கொடையாளர்களே வருக....

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், பிப்ரவரி 23, 2011 No comments

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பரங்கிப்பேட்டை லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்தும் இரத்ததான முகாம் நாளை (24-02-11)ல் B.M.ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நினைவு ஷாதி மஹாலில் நடைப்பெருகிறது.
Ln. Agri.M.இராதாகிருஷ்ணன் விழாவுக்கு தலைமைதாங்குகிறார்
,Ln.ஹாஜி.M.S.முஹம்மது யூனுஸ் (தலைவர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்,மற்றும் பேரூராட்ச்சி மன்றம்) அவர்கள் முகாமை துவக்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.மற்றும் ஹாஜி. கலிமா.K.சேக் அப்துல் காதர் மரைக்காயர், Dr.P.சரவணகுமார், Ln.காதர் அலி மரைக்காயர், Ln.G.வெங்கடேசன், Ln. புருஷோத்த்மன். அகியோர் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பிக்கிறார்கள். 

22 பிப்., 2011

பள..பளக்கும் சிமெண்ட் சாலைகள்..!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், பிப்ரவரி 22, 2011 No comments



பரங்கிப்பேட்டை நகரில் பல்வேறு இடங்களில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைப்பெற்று முடிவடைந்து வருகிறது. காஜியார் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை ஜமாஅத் - பேருராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் நேற்று பகல் பார்வையிட்டார். இதனிடையே வாத்தியாப்பள்ளி தெரு தார் சாலை பராமரிப்பு பணிகளுக்காக சாலையின் ஓரங்களில் இருந்த மணல் அள்ளப்பட்டு பணி துவங்க இருந்த நிலையில் இன்று காலை முதல் பெய்து வரும் மழையின் காரணமாக அப்பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது

இறப்புச் செய்தி

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், பிப்ரவரி 22, 2011 No comments


  1. கோட்டாத்தாங்கரை சந்தில், மர்ஹும் நூர்தீன் மரைக்காயருடைய மகளாரும், 
மர்ஹும் ஹாஜா,   முஹம்மது சுல்தான், முஹம்மது கவுஸ் இவர்களின் தாயாரும்,  மர்ஹும் அமீர் வாத்தியாருடைய மனைவியுமான ஹலிமா பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷh அல்லாஹ் இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்


     2.    பரங்கிப்பேட்டை பாரக் வீடு மர்ஹும் ஹனீபா அவர்களின் மருமகனும், செய்யது அமீன் அவர்களின் தகப்பனாருமாகிய செய்யது உமர் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்சா அல்லாஹ் இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம் சிதம்பரம் வண்டிகேட்டில்.






20 பிப்., 2011

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, பிப்ரவரி 20, 2011 No comments


அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்
 
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலளார் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, அதிமுக தலைமை நிலையச் செயலாளர்  கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி  தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது என இரு கட்சிகளுக்கு இடையே கையெழுத்தானது.

மேலும் புதுவை சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் அளிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா உறுதி அளித்தார்.
--
 

நிலவு ஆராய்ச்சி....?!

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, பிப்ரவரி 20, 2011 No comments

நேற்று இரவு 8 மணி முதல் பரங்கிப்பேட்டை முழுதும் பரபரப்பான செய்தி பரவ, அனைவரும் வானத்தை நோக்கி முழுநிலவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள். சிலர், 'அட! ஆமாங்க, தெரியுதுங்க!' என்கின்றனர். சிலர், 'எனக்கு ஒன்னுமே தெரியலயே...!' என்கிறன்றனர். 'அட நல்லா உத்து பாருங்க... கிளியரா தெரியுது' என்று வேறு சிலர்.

ஆண்களைவிட பெண்கள் முந்திக்கொண்டு, வீட்டு வாசல்களுக்கும் - மொட்டை மாடிக்கும் சென்று நிலாவுக்கு செல்லாமலேயே தங்கள் ஆராய்ச்சியை துவங்கிவிட்டனர்.

அவர்கள் நோக்கும் விசயம் தெரிகிறதோ இல்லையோ செய்தி மட்டும் மொபைல் போன் மூலமாக காட்டுத்தீ போல பரவுகிறது. இரவு 10 மணியை கடந்தும் சுமார் 11 மணிவரை இந்த நிலாவில் படம் பார்க்கும் படலம் நீடித்தது.

அப்படி என்னதான் என்று கேட்கின்றீர்களா? ஒன்னுமில்ல! 'இத்தனை காலமாக நிலாவில் பாட்டி வடை சுட்ட விசயத்தை விட்டு விட்டு நேற்று அந்த நிலாவில் அல்லாஹ்வின் பெயர் தெரிகிறது என்று யாரோ ஒரு வதந்தியை பரப்பி, பீதிய கௌப்பிட்டாங்க!

நன்றி:
mypno

பிரபாகரனின் தாயார் மரணம்.

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, பிப்ரவரி 20, 2011 No comments


 பிரபாகரனின் தாயார் பார்வதிஅம்மாள். 81 வயதான இவர் இலங்கையில் வசித்து வந்தார். முதுமை காரணமாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சர்க்கரை நோயாலும், இருதய கோளாறாலும் அவதிப்பட்டு வந்தார். பக்கவாதமும் தாக்கியது. அவரை இந்தியாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
இதற்கு உரிய அனுமதி கிடைக்காததால் பார்வதிஅம்மாள் வந்த விமானம் சென்னையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் மலேசியாவில் சில மாதங்கள் சிகிச்சை பெற்றார்.   அதன்பிறகு இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள வல்வெட்டித் துறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு அங்கு சிலமாதங்களாக அவர் மருத்துவசிகிச்சை பெற்றுவந்தார்.சமீபகாலமாக உடல்நிலை அதிகம் பாதிக்கப்பட்டு சுயநினைவு இழந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.10 மணிக்கு பார்வதிஅம்மாள் காலமானார்.

19 பிப்., 2011

கடலூர் அருகே மாசிமக ஊர்வலத்தில் மோதல், ஒருவர் இறந்தார்.

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, பிப்ரவரி 19, 2011 No comments


 கடலூர் அருகே ஊர்வலத்தில் இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் இறந்தார். பலர் படுகாயமடைந்தனர். வீடுகள் சூறையாடப்பட்டன. போலீசார், கண்ணீர் புகை குண்டு வீசி வன்முறை கும்பலை விரட்டியடித்தனர். 
கடலூர் அருகே உள்ளது கம்பிளிமேடு காலனி. அதன் அருகே உள்ளது தியாகவல்லி. இரு கிராமத்தினருக்கும் முன்விரோதம் உள்ளது. நேற்று காலை மாசிமகத்தை முன்னிட்டு, கம்பிளிமேடு காலனியிலிருந்து இளைஞர்கள் ஆடிப் பாடி சுவாமியை தீர்த்தவாரிக்காக, பெரியக்குப்பம் கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.


திருச்சோபுரம் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த தியாகவல்லி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களைத் தாக்கினர். இதனால், கிராமத்தினர் ஆத்திரமடைந்தனர். மாலை 5 மணிக்கு பெரியகுப்பம் கடற்கரையிலிருந்து சுவாமியுடன் திரும்பி வந்த கம்பிளிமேடு காலனி தரப்பினரை, தியாகவல்லி கிராமத்தினர் வழிமறித்துத் தாக்கினர். இருதரப்பினரும் தடி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், இருதரப்பிலும் பலர் படுகாயமடைந்தனர். கம்பிளிமேடு காலனி தரப்பினர் திருச்சோபுரத்தில் வீடுகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். திருசங்கு என்பவரின் கூரை வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது.


சம்பவ இடத்திற்கு அதிரடிப் படையுடன் விரைந்து வந்த எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் வன்முறை கும்பலை தடியடி நடத்தி கலைக்க முயன்றார். இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபடவே போலீசார், கண்ணீர் புகைகுண்டு வீசி கும்பலை கலைத்தனர்.இதற்கிடையே, கம்பிளிமேடு காலனியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய தியாகவல்லி கிராமத்தினரை கைது செய்யக் கோரி, மோதலில் படுகாயமடைந்த அமாவாசை மகன் சுப்ரமணி (30), சத்தியசீலன், செல்வம், ராஜலிங்கம் உள்ளிட்ட 10 பேரை ரோட்டில் படுக்க வைத்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். அதில், பஸ் டிரைவர் படுகாயமடைந்தார். மறியலில் ஈடுபட்ட கம்பிளிமேடு காலனி தரப்பினரை ஆர்.டி.ஓ., முருகேசன் மற்றும் அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். பின்னர், மோதலில் காயமடைந்தவர்களை, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுப்ரமணி (30) சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருதரப்பு மோதலில் ஒருவர் கொலையானதையொட்டி பதட்டம் நிலவி வருவதால், கம்பிளிமேடு மற்றும் தியாகவல்லி, திருச்சோபுரம் கிராமங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

18 பிப்., 2011

சாலைமறியல்...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 18, 2011 No comments








பரங்கிப்பேட்டை அருகே இன்று நடைப்பெற்ற சாலைவிபத்தின் காரணமாக சஞ்சிவிராயர் கோயில் அருகே இன்று மாலை விடுதலைசிறுத்தைக்கட்சி சார்பாக சாலைமறியல் நடைப்பெற்றது.

அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல்இருப்பதை கண்டித்தும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்ககோரியும்,மருத்துவமனையில்,ஓன்றுக்கு மேற்பட்ட மருத்துவர்களை நியமிக்கசொல்லியும், விடுதலைசிறுத்தைக்கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.இதன்காரணமாக போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது.காவல்துறையினர் சமாதானம் செய்ததை அடுத்து மறியல்கைவிடப்பட்டது.

பரங்கிப்பேட்டையில் விபத்து: இருவர் பலி; 25 பேர் காயம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, பிப்ரவரி 18, 2011 No comments


மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு புவனகிரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களை C.புதுப்பேட்டை கடற்கரைக்கு அழைத்துசென்ற தனியார் வாகனம் பரங்கிப்பேட்டை கடலூர் சாலையில் (குட்டியாண்டவர் கோயில்) அருகே விபத்துக்குள்ளானது. புதுப்பேட்டை கடற்கரையிலிருந்து ஊருக்கு திரும்பிசென்ற வேன் சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் போது சாலையை கடக்கமுயன்ற ஆட்டின் மீது மோதாமலிருக்க திருப்பும்போது அருகிலிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.








இந்தவாகனத்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளைஏற்றியும்,வேகத்துடனும் சென்றதாக சம்பவஇடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தார்கள். இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.25க்கும்,மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.அவர்கள் அனைவரும் பரங்கிப்பேட்டை அரசுமருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டனர்.காயமடைந்தவர்களை கடலூர்க்கு கொண்டுச்செல்ல "இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர், பேரூராட்சி தலைவர். M.S.முஹம்மது யூனுஸ் தனது வாகனத்தை தந்து உதவியதோடு ஜமாஅத் ஆம்புலன்ஸ், மற்றும் தனியார் வாகனங்களையும். ஏற்பாடுசெய்தார்.இந்த விபத்தின்போது காயமடைந்தவர்களை கடலூர் மருத்துவமனைக்குகொண்டுச்செல்லும் பணிகளில் நமது சமுதாய இயக்கங்கள் எப்போதும்போல் பாடுப்பட்டன. 

15 பிப்., 2011

ஹோஸ்னி முபாரக்கின் , சொத்துகள் வளைக்குடா நாடுகளுக்கு மாற்றம்?!

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், பிப்ரவரி 15, 2011 No comments


மக்கள் புரட்சியால் பதவி இழந்த முன்னாள் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை முடக்க சுவிஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததையடுத்து அவர் தனது சொத்துகள் அனைத்தையும் அரபு நாட்டு வங்கிகளுக்கு மாற்றியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
                     
சேர்த்துவைத்துள்ள சொத்துக்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து முபாரக்கின் குடும்ப உறுப்பினர்களிடையே நடைபெற்ற சில அவசர உரையாடல்கள் மூலம் இது தெரியவந்ததாக புலனாய்வு உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஈரான் தொலைக்காட்சியான பிரஸ் டிவி தெரிவித்துள்ளது.


சவூதி அரேபியா, யுஏஈ உள்ளிட்ட நட்பு அரபு நாடுகளுக்கு முபாரக் சொத்துக்களை மாற்றியுள்ளதாக நம்பப்படுகிறது என அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.



முபாரக்கின் சொத்து மதிப்பு 70 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று அல்ஜசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. எனினும் 2 பில்லியன் டாலர் முதல் 3 பில்லியன் டாலர் வரை தான் முபாரக்கின் சொத்து மதிப்பு இருக்கும் என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியுயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

இந்திய தேசிய லீக், அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், பிப்ரவரி 15, 2011 No comments


இந்திய தேசிய லீக் கட்சியின் புதிய தலைவராக அப்துல்லா சுலைமான் சேட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது.
 
இதில் தேசிய தலைவராக இருந்த முகமது சுலைமான் சாகிப் நீக்கப்பட்டு, ஜனாப் அப்துல்லா சுலைமான் சேட் ஏகமனதாக புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இதுகுறித்து இந்திய தேசிய லீக் மாநில பொதுச் செயலாளர் ஜகிருத்தீன் அகமது விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
புதிய தலைவர் அப்துல்லா சுலைமான்சேட், பொதுச் செயலாளர் சிராஜ் இப்ராகிம் சேட் அறிவுறுத்தலின்படி இந்திய தேசிய லீக்கின் தமிழக கிளை, அ.தி.மு.க. கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு தருவது என்றும் இக்கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவது என்றும் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

12 பிப்., 2011

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, பிப்ரவரி 12, 2011 2 comments





- ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.


- கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே


- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.


சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.


நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.

- கேரி பேக்குகள்
- காய்கறி கேரி பேக்குகள்
- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்
- வீட்டு குப்பை பைகள்
- வணிக குப்பை பைகள்
- தொழிற்சாலை லைனர்கள்
- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்
பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்
வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
காகிதம் - 2-5 மாதங்கள்
கயிறு - 3-14 மாதங்கள்
ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்
உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
தகர கேன் - 50-100 ஆண்டுகள்
அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்
பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்


பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.


பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?


சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை


அனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன.



(நன்றி- பயோடெக் பேக்ஸ் வெளியிட்ட அறிக்கை) 

10 பிப்., 2011

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், பிப்ரவரி 10, 2011 No comments


மக்கள் தொகை கணக்கெடுக்கும் அதிகாரிகளிடம், மக்கள் தயக்கமின்றி விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
 ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள், 5 நகராட்சி ஆணையர்கள், நெய்வேலி என்.எல்.சி. துணைப் பொதுமேலாளர் (கல்வி) ஆகியோர் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு, பொறுப்பு அலுவலர்களாக உள்ளனர். 4,037 கணக்கெடுப்பாளர்கள், 659 மேற்பார்வையாளர்கள் இப்பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.
 கணக்கெடுப்பின்போது பெயர், குடும்பத் தலைவரின் உறவு முறை, இனம், பிறந்த தேதி, மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 29 கேள்விகளுக்கு விவரங்கள் சேகரிக்கப்படும். இவ்விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அதனால் அனைத்து விவரங்களையும் தயக்கமில்லாமல் தெரிவிக்கலாம்.
 கணக்கு எடுக்க வருவோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் மட்டுமே தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். கணக்கெடுப்புப் பணிக்கு வரும் அலுவலர்களுக்கு பொதுமக்கள் முழுஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு வீடுகளுக்கு அலுவலர்கள் வீடுகளுக்கு வரவில்லை என்றால் கீழ்காணும் தொலைபேசிகளில் புகார் தெரிவிக்கலாம்.

 மாவட்ட ஆட்சியர் அலுவலகம்:   04142- 220029.
 கடலூர் கோட்டாட்சியர் அலுவலகம்,04142- 231284.
 சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம், 04144- 222256.
 விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம், 04143- 260248. 
கடலூர் வட்டாட்சியர் அலுவலகம், 04142- 295189.
 பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம், 04142- 242174. 
குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகம், 04142- 258901.
 சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம்,04144- 222322
காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகம், 04144- 262053.
 விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம், 04143- 238289.
 திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம், 04143- 255249.
 கடலூர் நகராட்சி ஆணையர், 04142- 230021.
 பண்ருட்டி நகராட்சி ஆணையர், 04142- 242110
நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர்,04142- 272249.
 சிதம்பரம் நகராட்சி ஆணையர்,04144-222231.
 விருத்தாசலம் நகராட்சி ஆணையர், 04143- 230240.
 

பெண் பயணிகள் மீது தொடரும் பாலியல் தொந்தரவுகள் -

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், பிப்ரவரி 10, 2011 No comments


பெண் பயணிகள் மீது    தொடரும் பாலியியல் தொந்தரவுகளால் கேரள மாநிலத்தில் கொந்தளிப்பு  உருவாகி உள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து சோரனூர்  நோக்கிச் சென்ற பயணிகள் தொடர்வண்டியில்  சவுமியா (23) என்ற பெண்ணை தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி (33) என்பவர் கீழே தள்ளி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும்,வண்டியில்  இருந்து கீழே தள்ளப்பட்ட அப்பெண் நான்கு நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார் என்பதும் முன்னர் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது அறிந்ததே.

இதே வரிசையில் மேலும் ஒரு இழிசம்பவமாக,

காசர்கோடு மாவட்டத்தில், அரசு தொழில் நுட்ப பள்ளியில் இளநிலை ஆசிரியையாக பணியாற்றி வரும்  செல்ஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மேலும் சில ஆசிரியர்களுடன் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற டிரேட்ஸ்மேன் பயிற்சிக்காக சென்றிருந்தார். பயிற்சி முடிந்து சக ஆசிரியர்களுடன் ஊருக்குத் திரும்ப திருவனந்தபுரம் - மங்களூர் மாவேலி அதிவேக தொடர் வண்டியில்  ஏறினர். அவர்கள் வண்டியில் எஸ்.2. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணித்தனர். அதில் செல்ஜா மேற்படுக்கையில்  படுத்துறங்கினார். இரவு 11.30 மணியளவில் அவரிடம் மர்ம நபர் சில்மிஷம் செய்வதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்து அலறினார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட சக பயணிகளும், பிற பகுதிகளில் படுத்திருந்த ஆசிரியர்களும் ஓடி வந்து விசாரித்தனர்.

பயணிகள் ஓடி வருவதைக் கண்ட அந்த மர்ம நபர்  பெட்டியில் இருந்து தப்பியோடினார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இருப்பினும், பயணிகள் இதுகுறித்து உடன்  பயணித்த காவலரிடம் தெரிவித்தனர். காவலரும், பயணிகளும் அனைத்து பெட்டிகளிலும் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டி கழிவறைக்குள் பதுங்கியிருந்த மர்ம நபரை அவர்கள் பிடித்து விசாரித்தனர். பெண் பயணியும் அவரை அடையாளம் காட்டினார்.அதற்குள் தொடர் வண்டி  எர்ணாகுளம் நகர  நிலையத்தை வந்தடைந்தது. அங்கு மர்ம நபரை பயணிகள் காவலரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்  கன்னியாகுமரி மாவட்டம் கீழக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய ஆன்டனி சுரேஷ் (23) என்பது தெரிந்தது. அவர் கோழிக்கோடு அருகே வடகரா பகுதியில் மீன்பிடிக்கும் தொழிலாளியாகப்  பணியாற்றி வருகிறார் என்பதும்,  வடகராவுக்குச் சென்று கொண்டிருந்தார் என்பதும், முன்பதிவு செய்யப்படாத பயணச் சீட்டு  வாங்கி, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறி, பெண் பயணியைத் தொந்தரவு  செய்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.
நன்றி:

6 பிப்., 2011

சிறுநீரக நோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, பிப்ரவரி 06, 2011 1 comment


சிறுநீரக நோய்களைத் தீர்ப்பதற்கு மாதுளம் பழச்சாறு சிறந்தது என ஆய்விலிருந்து தெரியவருகிறது,
இஸ்ரேலில் டயாலிஸிஸ் செய்வதற்கு முன்பாக சில சிறுநீரக நோயாளிகளுக்கு மாதுளம் பழச்சாறு அல்லது புரதச்சத்து அதிகம் உள்ள பிளாஸ்போ பானம் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மாதுளம்பழச்சாறு சிறுநீரக பாதிப்பையும், பக்கவிளைவான இதயநோயையும், சாவு விகிதத்தையும் குறைப்பது தெரியவந்தது. ஏனெனில்,
மாதுளம்பழச்சாறு அருந்தியவர்கள் உடலில் இருந்த தீங்குவிளைவிக்கும் பொருள்களை மாதுளம் பழச்சாறில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் செயல் இழக்கச் செய்ததால் அவர்கள் நோயின் பாதிப்பு மட்டுப்பட்டதாக உணர்ந்தனர்.
இருப்பினும், இந்த சோதனையை இன்னும் பலரிடம் செய்துபார்ப்பது நல்லது என வெஸ்டன் கலிலி மருத்துவமனையில் இந்த ஆய்வை நடத்திய தலைமை மருத்துவ நிபுணர் பட்யா கிறிஸ்டல் தெரிவித்தார்.
இந்த செய்தியை டெய்லி எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது.
மாதுளம் பழம் சாப்பிட்டால் ரத்தக்கொதிப்பு, கொழுப்புச்சத்து குறையும், ஆண்மை பெருகும், வெயிலால் ஏற்படும் தோல் சம்பந்தமான நோய்கள் கட்டுக்குள் இருக்கும் என ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது.
புராஸ்ட்ரேட் புற்று நோயை மாதுளம் பழம் குறைக்கும் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்விலிருந்து கண்டறியப்பட்டது நினைவுகூரத்தக்கது.
ந்ன்றி:

5 பிப்., 2011

பொறாமைத் தீயில் பொசுங்கும் நல்லறங்கள்..

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, பிப்ரவரி 05, 2011 No comments


வழக்குத் தமிழில், “பொறாமை” என்றும் இலக்கியமாய் “அழுக்காறு” என்றும் கூறப்படும் கெட்ட எண்ணத்திற்கு அரபுமொழியில் “ஹஸது” (Jealousy and Envy) என்று சொல்வார்கள்.
சகமனிதருக்குக் கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகள், திறமை ஆகியவற்றின்மீது ஆசை கொண்டு சகமனிதருடைய வீழ்ச்சியை விரும்புதல்; அவ்வீழ்ச்சியில் மகிழ்ந்திருத்தல், அதற்கான செயல்களில் ஈடுபடல் போன்ற இழிவான மனப்பான்மைக்குத்தான் பொறாமை என்று சொல்லப்படும்.
இதில் நேரடிப் பொறாமை, மறைமுகப் பொறாமை என்று இரு வகைகள் உண்டு. நேரடிப் பொறாமையாளர்கள் வெளிப்படையாக ஒருவனை வீழ்த்தும் எண்ணத்தை/பேச்சை/செயலை மேற்கொள்கிறார்கள் என்றால் மறைமுகப் பொறாமையாளர்களோ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, நயவஞ்சகராகவும் (முனாஃபிக்) செயற்படுகிறார்கள்.
இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் இந்தப் பொறாமைநோய் குறித்துக் கடும் எச்சரிக்கையை நமக்கு அளித்துள்ளார்கள்.
விறகை நெருப்புத் தின்று விடுவதைப்போலப் பொறாமை உங்களின் நற்செயல்களைஅழித்துவிடுகிறதுஎனவே எச்சரிக்கையாக இருங்கள்” என்கிற நபிமொழி (நூல்அபூதாவூத்)பொறாமையின் பொல்லாத் தீங்கை உணர்(ந்)/த்/திடப் போதுமானதாகும்.
மற்றவருக்குக் கிடைத்திருக்கும் கல்வி(அறிவு), செல்வம், மக்கட்பேறு, பதவி, சமூகநிலை, வலிமை, திறமை போன்ற உலகியல் ஆபரணங்களில் ஒருவன் பொறாமை அடையும்போது அவன் அறிந்தோ, அறியாமலோ, அவை, அந்த மற்றவருக்கு, தம் இறைவனாலேயே வழங்கப்பட்டன என்பதை மறந்து, அல்லது மறுத்து விடுவதாகவே பொறாமை அமைகின்றது.
தன்னைவிட மற்றோரை மேன்மையாகக் காணும்போது, இறைவன் தனக்கு நீதி செய்யவில்லை என்பதுபோலக் கருதி, மனிதன் பொறாமைச் சேற்றில் வீழ்கிறான். அதுமட்டுமா? இறைவன் தனக்கு வழங்கியுள்ள நற்பேறுகளையும் பாக்கியங்களையும்கூட, அவன் மறக்கவும் துறக்கவும் தலைப்படுகிறான். “எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை…..” என்கிற மனநிலை.
ஒருமுறை இறைத்தூதர் நபி(ஸல்அவர்கள் தமது தோழர்களிடத்தில், “அவர்கள் இறை அருளுக்குவிரோதிகள்” என்று மொழிந்தார்கள்தோழர்கள், “யாரைச் சொல்கிறீர்கள் நபியே?” என்று கேட்க,நபி(ஸல்)அவர்கள், “இறைவன் தனக்கு(ம்வழங்கியிருக்கமற்றவரைப் பார்த்துப்பொறாமைப்படுகிறார்களேஅவர்கள்தாம்” என்று கூறினார்கள் (நூல்அத்-தப்ரானி).
யாருக்கு எங்கே, எவற்றை, எவ்வளவு, எவ்விதம் வழங்குவது என்பதை இறைவனே தன் தூய அறிவால் தீர்மானிக்கிறான். இந்தப் பேருண்மையை அறியாமல், பொறாமை கொள்பவன், தன் இறைவனை அறியாதவனாகிறான்.
நிறைவடையா மனநிலை மனிதனைப் பொறாமையில் தள்ளுகிறது. பொறாமை பழிபாவத்திற்கும்,  வன்மம், பொல்லாங்கு இறைமறுப்பு ஆகியவற்றுக்கும் இட்டுச் செல்கிறது. முதல் பாவமாகக் கூறப்படுவதும் பொறாமைதான். ஆதம்(அலை) என்கிற மனிதப் படைப்பைப் பார்த்து  ஷைத்தான் கொண்ட பொறாமை!
இன்று நம்மிடையே தனியாளாயினும், இயக்கங்களாயினும், ஏன் தேசங்களாயினுங்கூட இந்தப் பொறாமைதானே, வம்பு வழக்குகளுக்குக் காரணமாக அமைகிறது! சக மனிதர்கள்/இயக்கங்கள்/அமைப்புகள் செய்த நற்செயல்களை எளிதாகப் புறக்கணிக்கிறோம். அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த, தீய செயல்களை அம்பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் அவமானப்படுத்துகிறோம்.
இறைநம்பிக்கையுள்ள ஒருவன், தன் நம்பிக்கையாலும் முயற்சிகளாலும் மன நிறைவுடன், மனந்தளராமல், நிலைகுலையாமல் (தானறியாத, தனக்குக் கிடைக்கவிருக்கும் நலவளங்களுக்காகப்) பாடுபட வேண்டுமேயல்லாது மற்றவர்மீது பொறாமை கொள்ளலாகாது. இறைவன் தனக்கு அளித்தவற்றில், மனநிறைவு அடைபவனாக, ஒரு நம்பிக்கையாளன் இருப்பான். இதையே அறிஞர் இப்னு கைய்யூம் இப்படிக் குறிப்பிடுகிறார்: “(மனநிறைவு) அது நிம்மதியின் வாசலைத் திறக்கிறது. அடியானுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது”.
மேலும்அல்லாஹ் உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிடவாழ்க்கை வசதியில் மேன்மைஅளித்துள்ளான் ...” (16:71) என்பது இறைமறை குர்ஆன் காட்டும் உண்மை.
அதுமட்டுமின்றி இறைமறைவேறொரு வசனத்தில், “... உலகவாழ்வில் இவர்களுக்குத் தேவையானவாழ்க்கை வசதிகளை நாம்தானே இவர்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கிறோம்மேலும்நாம்இவர்களில் சிலருக்குவேறு சிலரைவிடஉயர்பதவிகளை அளித்தோம்;
 இவர்களில்சிலர்வேறுசிலருடைய ஊழியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக! ...”(43:32) என்றும் குறிப்பிடுகிறது.
“இவ்வுலக நலவளங்களைக் காட்டிலும் இறையருளே உயர்மதிப்புடையது” என்பதே இதிலிருந்து நாம் உணரவேண்டுவது. ஏனெனில், உயர்வு என்பது உலக ஆபரணங்களில் அல்ல; மாறாக நேர்மையான இறையச்ச உணர்(தக்வா)வில்தான் இருக்கிறது.]
... உங்களில்இறைவனின் கண்ணியத்துக்கு உரித்தானவர்இறையச்சமுடையவரே ...” என்கிறதுஇறைமறை (49:13).
மேலும் “... மறுமையோஇறைவனை அஞ்சி வாழ்பவர்களுக்கு உரித்தானதாகும்” (43:35) என்றும்கூறுகிறது.
இறைநம்பிக்கையாளனின் இருபெரும் வலிமையாக, இறைமீதான அவனது ஆதரவும் அச்சமும் அமைகின்றன.
மற்றவர் அழிந்துபோக எண்ணும் தீய பொறாமைக்குத் தடை சொல்லும் இஸ்லாம், ஒருவருக்கொருவர் நற்செயல்களில் போட்டியிடுவதை நன்கு ஊக்குவிக்கிறது; உற்சாகப்படுத்துகிறது.
தான-தர்மங்களில் தலைசிறந்து விளங்கும் ஒருவரைப் பார்த்து “இறைவா! எனக்கும் நீ செல்வ வளங்களை; ஆரோக்கியத்தை வழங்கினால், இன்னாரைப் போன்றே நானும் தர்மம் செய்வேன்; வாரி வழங்குவேன், நற்காரியங்கள் புரிவேன்” என்று பிரார்த்திக்கத் தடையேதுமில்லை.
இந்த, தீய எண்ணமில்லாத போட்டி மனப்பான்மைக்கு அரபுமொழியில் ‘Ghibtah’ ‘கிப்தாஹ்’ (ஆக்கப்பூர்வமான போட்டியுணர்வு) என்று சொல்லப்படுகிறது.
சுருங்கக் கூறின்,
    • ஹஸது எனப்படும் (தீய எண்ணப் பொறாமை) நற்செயல்களை அழித்துவிடும்.
    • பொறாமை நயவஞ்சகத்துக்கும் இறைமறுப்புக்கும் வழிகோலுகிறது.
    • இறையை நம்பிடும் மனநிறைவு நிம்மதியும் பாதுகாப்பும் அளிக்கவல்லது.
    • ஏற்றம்-தாழ்வு, இரண்டுமே இறைநியதி.
    • தளராமல் பாடுபடுவது நம்பிக்கையாளரின் பண்பு.
    • உலக வளங்களை வைத்தல்ல, உள்ளத்தூய்மை, இறையச்சத்தைப் பொருத்தே இறைவனிடம் நற்சிறப்பும் கண்ணியமும் கிடைக்கும்
    • மறுமை இறையச்சமுடையவர்களுக்கே உரியது.
    • தீய எண்ணமில்லாத, போட்டி மனப்பான்மை (Ghibtah) தவறன்று.
    • பொறாமைக்காரர்களின் தீமையிலிருந்து, இறைவா! உன்னிடம்பாதுகாவல் தேடுகின்றேன்....என்று பிரார்த்திப்போமாக!
    நன்றி:

    ஆக்கம்இப்னு ஹம்துன்