ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

18 ஜூலை, 2012

பெரம்பலூர் நகரையே தினரடித்த கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூலை 18, 2012 No comments


ஷரியத் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டுவரும் பெரம்பலூர் கலெக்டர் தரேஷ் அஹமது, ஆர்டிஓ ரேவதி மற்றும் சமூக நலத்துறை அலுவலர் பேச்சியம்மாள் ஆகியோரை கன்டித்து அனைத்து  கட்சி மற்றும் அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 17.07.12 அன்று மதியம் 3.00 அளவில் பெரம்பலூர் பேருந்து நிலையம் எதிரிலுள்ள நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஹைதர் அலி - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், இஸ்மாயில் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, பாக்கர் - இந்திய தவ்ஹீத் ஜமாத் ஆகியோர் உள்பட பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம் பாக்கர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஷரியத் சட்டத்தை காக்க முஸ்லிம்கள் எதையும் செய்வார்கள், தேவையென்றால் ராணுவத்தினர் போன்றும் செயல்படுவார்கள் என்று அரசு அதிகாரிகளை எச்சரித்தார். தமுமுக தலைவர் ஹைதர் அலி பேசும்போது சுப்ரீம் கோர்டே கூறிவிட்டது முஸ்லிம்களின் திருமண வயது 15 என்று அதனால் முஸ்லிம்கள் யாரும் 15 வயதிற்கு மேற்பட்டோர்களின் திருமணத்திற்காக பயப்படவேண்டாம். உங்களுக்கு பயமிருந்தால் இந்த கூட்டமைப்பை அழையுங்கள் எங்கள் சார்பாக 15வயது முதல் 18வயது வரை உள்ள முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்றார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலமாக விடுக்கப்பட்ட கோரிக்கைகள் :

1.ஷரியத் சட்டத்திற்கு எதிராக எந்த அதிகாரிகள் செயல்பட்டாலும் இந்த கூட்டமைப்பு அந்த அநீதிக்கு எதிராக போர்க்குரல் கொடுக்கும்.

2.முஸ்லிம்களுக்கான தணிஇடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.

3.காப்பத்திலுள்ள மணப்பெண் யுரேஷா பேகம் மற்றும் சிறையிலுள்ள மணமகன் சாகுல் ஹமீது ஆகியோரை உடணடியாக விடுவிக்க வேண்டும்.

4. 15-18 வயது வரை யாருக்கேனும் திருமணம் செய்யவேண்டுமானால் இந்த கூட்டமைப்பின் தலைமையிலேயே திருமணம் நடத்தி வைக்கிறோம்.

ஆகிய கோரிக்கைகள் விடுக்கபட்டன.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர்,அரியலூர்,திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை,மதுரை,திருச்சி,சேலம்,கடலூர்-பன்ருட்டி, வேலூர், லால்பேட்டை மாவட்ட இஸ்லாமியர்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கூடினார்கள். பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கூடி ஆர்ப்பாட்டம் செய்வது பெரம்பலூருக்கு இதுவே முதல்முறை என்பதால் பெரம்பலூர் பேருந்து நிலைய பகுதியே பரபரப்பாகவும் போர்க்களம் போன்றும் காட்சியளித்தது. சுமார் மாலை 5.30 அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த அனைத்து பகுதி மக்களுக்கும் குறிப்பாக கட்சி மற்றும் அமைப்பை சார்ந்தவர்களுக்கும் கூட்டமைப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.



நன்றி:http://www.vkalathur.net/

ஷாருக்கானும் அடையாள அரசியல் வேட்டையும்

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூலை 18, 2012 No comments



1968ல் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகம் Chubb Fellowshipஐ முதல் முதலாக அமெரிக்கர் அல்லாத ஒருவருக்குக் கொடுத்தது. அவர்தான் அறிஞர் அண்ணாதுரை. சில வாரங்கள் முன்பு  அதே  யேல் பல்கலைக்கழகத்தின் Chubb Fellowshipஐப் பெற்றுக் கொண்டு உரை நிகழ்த்த புறப்பட்டார் ஹிந்தி நடிகர் ஷாருக்கான். தனியார் விமானம் ஒன்றில் அவர் அமெரிக்காவின் வைட் பிளையின்ஸ் விமான நிலையத்தில் இறங்கினார். அவருடன் நீதா அம்பானி உள்பட பல தொழில் அதிபர்கள் பயணித்தனர். அந்த விமான நிலையத்தின் சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் உடனே சோதனைகளை முடித்து அனுப்பினார்கள். ஷாருக்கான் என்கிற இஸ்லாமியப் பெயரை இவர் கொண்டிருப்பதால் இவரை மட்டும் இரண்டு மணி நேரம் விசாரித்தார்கள், இந்தியத் தூதரகம் தலையிட்ட பின்புதான் அனுப்பினார்கள். உடனே இந்திய ஊடகங்கள் எங்கும் நெருப்பு கொப்பளிக்கத் தொடங்கியது.

அடுத்த நாள் அதிகாலை பல நாளிதழ்களில் இதுதான் தலைப்புச் செய்தி. ‘ஆபத்து ஆபத்து’ என்று, எங்கும் கூப்பாடுகள். அமெரிக்காவே மன்னிப்பு கேள் என்றும், மறுபுறம் மன்னிப்பு மட்டும் கேட்டால் போதாது என்றும் அரசு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களில் இருந்து அறிக்கைகள் பறந்தன. எஸ்.எம்.கிருஷ்ணா மாஸ்கோவில் இருந்தபடி வாளைச் சுழற்றினார். ஷாருக்கானை நடத்தியது போல் நாம் இனி அமெரிக்க அதிகாரிகளை இங்கு நடத்த வேண்டும் எனக் கண்டனக் குரல்கள் கிளம்பின. இதனைக் கண்டித்து ‘அப்படி அமெரிக்கர்களை நடத்த வேண்டும் என்பது தவறு., அபிஷ்டு அபிஷ்டு’ என்றது தி ஹிந்து தலையங்கம். அமெரிக்காவை, அமெரிக்க அரசை இப்படி செய்ய வேண்டும் என்று நினைப்பதுவே மகாபாவம் என்று தலையங்கம் கண்ணீர் வடித்தது. வாசிக்கும் இந்திய நகர அதிகாரவர்க்க முட்டாள்கள் அனைவரின் மூளையும் பற்றி எரிந்தது. தீ தீ தீ எட்டுத் திக்கும் தீ.
இது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்காவில் ஷாருக்கான் உள்பட பல ஹிந்தி நடிகர்கள் பல முறை இப்படி நடத்தப்பட்டிருக்கிறார்கள். ‘எனக்குத் தலைக்கனம் ஏற்படும்போது எல்லாம் நான் அமெரிக்கா செல்வேன். அவர்கள் நான் ஒரு பெரும் நட்சத்திரம் அல்ல, ஒரு சாதாரண மனிதர்தான் என்பதை நிரூபித்து எனக்குப் பாடம் புகட்டுவார்கள், என்று ஷாருக்கானே இந்த சம்பவத்திற்கு மாணவர்கள் மத்தியில் உரையாடுகையில் விளக்கமளித்தார். சினிமா நடிகர்கள்தான் அப்படி நடத்தப்படுகிறார்களா என்றால் இல்லை, பலரும் இப்படி அமெரிக்க விமான நிலையங்களில் நடத்தப்படுகிறார்கள் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த விஷயமே. ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்தியப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது நிர்வாணப்படுத்தி பரிசோதிக்கப்பட்ட போதும் நமக்குப் புத்திவரவில்லை. அதன் பிறகு அப்துல் கலாம் ஒருமுறை எல்லா சோதனைகளையும் முடித்து விமானத்தில் ஏறிய பிறகு அவரது ஷூவைக் கழட்டிக் காண்பிக்கச் சொல்லி சில அதிகாரிகள் பணித்தனர். இப்படி நம் ஊரில் பல பில்டப்புகளுடன் வலம் வருபவர்களின் டவுசர்கள் அமெரிக்காவில் கழற்றப்படுவதும் அவர்கள் வடிவேல் போல அப்படியே அதை மெயின்டெய்ன் செய்து வண்டியை ஓட்டுவதும் நமக்கும் சகஜமாகிப் போச்சு.
இது போல் சினிமா நடிகர்கள், பாடகர்கள், கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டும்தான் நடத்தப்படுகிறார்களா? இல்லை, இந்தியாவுக்கு வெளியே பல்வேறு காரணங்களுக்காகப் பயணம் செய்யும் அனைவரையும் சொல்லொணா துயரத்திற்கு ஆளாக்கி பீதியுறச் செய்வதுதான் பல வளர்ந்த நாடுகளின் மோஸ்தராகவே உள்ளது. சமீபத்தில் வளைகுடா நாடுகளில் அங்கு கூலி வேலை, வீட்டு வேலை செய்ய இந்தியாவில் இருந்தும், தெற்காசிய நாடுகளில் இருந்தும் செல்லும் நூற்றுக்கணக்கானவர்களுடன் பல மணி நேரம் விமான நிலையத்தில் பேச, அவர்கள் நடத்தப்படும் விதத்தை நெருங்கி இருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஒவ்வொரு கணமும் அவர்கள் கேவலப்படுத்தப்படுகிறார்கள். அதுவும் வளைகுடா நாடுகளில் விமான நிலையத்தில் பணி புரியும் இந்தியர்களாலேயே துன்புறுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு விமானமும் தரையிறங்கிய சில நிமிடங்களில் எங்கு செல்வது என்று கூட அறியாது கண்ணீருடன் திசைகள் தொலைத்து நிற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் முளைத்தவண்ணம் இருக்கிறார்கள்.
ஆனால் சினிமா நடிகர்கள், பாடகர்கள், கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டும் இப்படி நடத்தப்படும்போது அறிக்கை போர் நடத்திவிட்டு, சில வார்த்தைகள் மன்னிப்பைப் பெற்றுவிட்டு அதன் பின் அமைதியாக இருந்து விடுவது சரிதானா என்கிற கேள்வி அழுத்தமாக எழுகிறது. உலகம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த Racial Profilingஐத் தொடங்கியவர்கள், இப்படி சில வெற்று வார்த்தைகளில் மன்னிப்பு கேட்பது போதுமானதா? இந்த சம்பவத்தில் ஷாருக்கான் சோதிக்கப்பட்டதற்குக் காரணம் அவரது இஸ்லாமியப் பெயர்தான் என்பது உலகம் அறிந்த விஷயம். என் நோக்கம் இஸ்லாமியப் பெயர் உடையவர்களை நாம் இந்தியாவில் எப்படி நடத்துகிறோம் என்பதைப் பற்றி விவாதிப்பது மட்டுமே.
1990கள் முதல் பொடா சட்டம், 1999கள் முதல் தடா சட்டம் இந்தியாவில் யாருக்கு எதிராகப் பெரும்பாலும் பயன்படுத்தப் பட்டது? அந்த சட்டங்களை அதிகாரத்தில் இருந்தவர்கள் நியாயமாகத்தான் பயன்படுத்தினார்களா? இந்த இரு சட்டங்களிலும் நீங்கள் யாரையும் கைது செய்யலாம், எத்தனை ஆண்டுகளும் சிறையில் அடைக்கலாம், அவர்களின் வாக்கு மூலங்களைச் சாட்சியங்களாக ஏற்கலாம்... இப்படி இன்னும் இந்த சட்டத்தின் சிறப்புகளைப் பல புத்தகங்கள் நமக்கு விளக்குகிறது. குஜராத்தில் நரேந்திர மோடி இந்த சட்டத்தை வைத்து என்ன என்ன செய்தார்? நரோடா பாட்டியாவில் 95 பேர் உயிருடன் கொல்லப்பட்டனர். இவர்களைக் கொன்றவர்கள் மீது ஏன் எந்த சட்டமும் பாயவில்லை? உயிருடன் வெட்டிக் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்பி இஷான் ஜாப்ரியை எப்படிக் கொன்றோம் என்று அவர்களே விவரித்தும் இன்று வரை ஏன் எந்த சட்டமும் பாய மறுக்கிறது?
1970களில் அமெரிக்கா தொடங்கி வைத்த இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை இந்தியாவில் 1980களில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சங் பரிவாரங்கள் மிக வெளிப்படையாகவும், காங்கிரஸ் அதனை அப்படியே கைகளில் மதசார்பற்ற உறையை மாட்டிக் கொண்டும் இந்திய சூழலில் உள்வாங்கிக் கொண்டன. இந்தியப் பெரும் ஊடகங்களும் முழுக்க அரசின் ஊதுகுழலாக, அமெரிக்க அடிவருடிகளாக, மேற்கில் இருந்து வரும் அனைத்தையும் அப்படியே ரகம் பிரிக்காமல் பிரச்சாரம் செய்யும் நிறுவனங்களாக மாறின. 1970களின் இறுதியில் பனிப்போரின் பொழுது சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீன்களை யார் உருவாக்கியது? ஆப்கானில் எல்லைப் பகுதியில் இருந்த மதரசாக்களின் பாடத் திட்டங்களில் மாற்றம் கொணர்ந்தது யார்? 1989 வரை நீடித்த இந்தப் போரின்பொழுது ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு யார் நிதி உதவி, ராணுவ தளவாட உதவிகள் அளித்தது? இந்தப் போரில் அமெரிக்கா, பிரித்தானியா, சவூதி அரேபியா, பாகிஸ்தான், இஸ்ரேல், இந்தோனேசியா, சீனா மற்றும் இந்திரா காந்தியின் தலைமையிலான இந்திய அரசின் பங்கு என்ன? யார் இந்த ஒசாமா பின்லேடன்? ஒசாமா எந்தக் காலகட்டத்தில்  ஒரு நாட்டின் தலைவர் போல் அமெரிக்காவின் பெண்டகன் படைகள் பாதுகாக்க அமெரிக்கா முழுவதும் உலா வந்தார்? இப்படி அடுக் கடுக்கான கேள்விகளை உருவாக்குவதும் அதன் விடைகளைக் கண்டடைவதும்தான் அறிவார்ந்த மக்கள் ஊடகங்கள் நாட்டுக்குச் செய்யும் தொண்டாக இருக்க இயலும்.
1990களில் பெர்னார் லூயிஸ் எழுதிய The Roots of Muslim Rage என்கிற புத்தகத்தில் தான் இந்த நாகரீகங்களின் மோதல் சொல்லாடல் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. 1992களில் அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவேல் ஹண்டிங்டன் முன்வைத்த நாகரீகங்களின் மோதல் சித்தாந்தத்தின் பின்னணி என்ன? அவர் 1992ல் நிகழ்த்திய ஒரு கல்லூரிப் பேச்சை எப்படி 1993ல் அமெரிக்க வெளியுறவு துறை தத்தெடுத்தது. அது எப்படி 1996ல் The Clash of Civilisations and the Remaking of the World Order - Samuel P. Huntington என்கிற பெரும் நூலாக விரிவாக்கப்பட்டு வெளிவந்ததன் பின்னணி என்ன?
இந்த சித்தாந்தங்களின் பின்னணியில் அமெரிக்கப் பிரச்சார ஊடகங்களும், ரூபர்ட் முர்டாக் வசம் உள்ள உலக ஊடகங்களும் மேற்குலக மூளைகளைச் சலவை செய்யத் தொடங்கின. இந்தியாவில் சங் பரிவாரங்கள் ஏற்கனவே ஹிந்து அபிமான உணர்வை விதைத்து அதில் இஸ்லாமிய எதிர்ப்பை பல தளங்களில் விதைத்து கச்சிதமாக இங்குள்ள பெரும்பான்மை ஹிந்துக்களை மூளை சலவை செய்துகொண்டிருந்தது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு அல்ல, அது ஒரு ஹிந்து நாடு என்கிற விஷமும் சமமாக இங்கு விதைக்கப்பட்டே வந்தது. இஸ்லாமியர்கள் இங்கு இரண்டாம் பிரஜைகளே என்கிற உணர்வை மூர்க்கத்துடன் முன்வைத்தார்கள். அவர்கள் விரும்பிய இஸ்லாமியராக இருந்ததால்தான் அப்துல் கலாமுக்கு ஜனாதிபதி பதவியைச் சூட்டி மகிழ்ந்தார்கள். கீதை வாசிப்பவராக, சங்கராச்சாரியார் காலில் விழுபவராக சாட்ஷாத் அப்துல் கலாம்  விளங்கினார்.  ஆயிரக்கணக்கில் இஸ்லாமியர்களை  வேட்டையாடிய பொழுது அவர் தனது கண்களை மூடிக்கொண்டார். அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் பகுதி மீனவ சகோதரர்கள் நூற்றுக்கணக்கில் இலங்கை ராணுவத்தால் வேட்டையாடப்பட்டபோது அந்தத் துயர ஓலம் கேட்காது அவர் தனது காதுகளை மூடிக்கொண்டார்.
ஹிந்து அபிமானிகள் தொடர்ந்து இந்த தேசம் இஸ்லாமியர்களால் துண்டாடப்படவிருக்கிறது என ஒரு பயத்தை சதா விதைத்துக் கொண்டு அதில் தங்களின் அரசியல் அறுவடைகளைச் செய்தவண்ணம் இருந்தனர். இந்தியா உடைபடும் என்ற ஓலத்திற்கும் இந்தியாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாறாக, இதை எழுதுபவர்கள் இந்தப் பயத்தைக் காட்டி வெளி நாட்டுவாழ் இந்தியர்களிடம் (NRI) பணத்தைக் கறந்த வண்ணம் உள்ளனர். இவர் களைப் பொறுத்தவரை உடையும் இந்தியா ஒரு பணம் காய்க்கும் மரம்; தங்க முட்டையிடும் வாத்து.
ஜெருசலேத்தில் உள்ள அல் அக்சா மசூதியை இடிக்க இஸ்ரேல் தொடர்ந்து முனைந்து வரும் நிலையில் அவர்களின் முன்னோடிகளான ஆர்.எஸ்.எஸ். இங்கு பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது. யூதவெறியும் ஹிந்து மதவெறியும் தங்களின் பொது எதிரியாக இஸ்லாத்தைக் கருதித்தான் கைகோர்க்கிறது. இந்தக் கூட்டுதான் அணிசேரா நாடுகளின் தலைமையில் இருந்த இந்தியாவை அமெரிக்காவின் ஒரு மாகாணம் அளவிற்கு வெளியுறவுக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்க வழிவகுத்தது. 1992 தொடங்கி இந்தியாவின் பல நகரங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் மாண்டனர். இந்தக் கூட்டணியின் இஸ்லாமிய எதிர்ப்பிரச்சாரத்திற்கு இவை எல்லாம் நல்ல தீனியாக  அமைந்தது.
இந்தியா முழுவதும் உள்ள எல்லா மொழிகளிலும் வெளிவரும் திரைப்படங்களிலும் இஸ்லாமிய எதிர்ப்பு, தீவிரவாதம் என்கிற பெயரில் நம் மீது பிம்பங்கள் தொடர்ந்து வீசப்பட்டன. பாகிஸ்தான் முழுவதும் இஸ்லாமியர்களின் தெருக்களில் ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ளனர் என்பதான சித்திரங்கள் ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் பதிக்கப்பட்டது. நான் லாகூர் நகரத்தில் தெருத் தெருவாக சில தினங்கள் திரிந்தேன். ஆயுதம் ஏந்திய காவல்துறை அல்லது ராணுவ வீரர்களைக் கூட காண இயலவில்லை. பாகிஸ்தானில் உள்ள வறுமையை சொற்களால் சித்தரிக்க இயலாது. அதை விட அங்கும் தினசரி குண்டுவெடிப்புகள் நிகழ்கிறது. பாகிஸ்தான் முழுதும் தீவிரவாதிகள் என்றால் அங்கே யார் குண்டு வைப்பது என்பதை அறிய அங்குள்ள நாளிதழ்களைத் திறந்து பார்த்தால் அது முழுவதும் இந்திய உளவுத் துறை, RAW என்றுதான் விரிவாகக் கூறுகிறது. இங்கு நம் நாளிதழ்களில் ISI புராணம். இரு நாடுகளும்  அப்பாவி மக்களைப் பிணையமாக வைத்து ஆடும் ஒரு சதுரங்க விளையாட்டில் ஈடுபடுகின்றன.
மிக சாதாரணமாக ஆட்டோ ஓட்டும் ஒருவர், மீன் கடை வைத்திருப்பவர், கறிக்கடை வைத்திருக்கும் பாய், ஜவுளிக்கடை வைத்திருக்கும் ஒரு அத்தா என நமக்கு அறிமுகம் இல்லாத இஸ்லாமியர்கள் அனைவரையும் நகரங்கள் தீவிரவாதிகளாகப் பார்க்க பழக்கி வருகிறது. நல்லவேளை, எங்கள் கிராமங்கள் இந்தக் கிருமியால் இன்னும் பீடிக்கப்படவில்லை. இருப்பினும் இந்தியர்களின் மூளையைச் சலவை செய்ய காஷ்மீர், தீவிரவாதம் என்று படம் எடுக்கும் இயக்குநர்களுக்குப் பல இடங்களில் இருந்து பணம் பெட்டிகளில் கைமாறியது. உளவுத்துறை, உள்துறை அமைச்சகம், இந்திய முதலாளிகள் என ஒரு பெரும் கூட்டு நிதி மூலதனம் இஸ்லாமிய வன்முறை பிம்ப உருவாக்கத்திற்குப் பின்னணியில் இயங்குகிறது.
2004 முதல் 2009 வரை நடந்த பல குண்டு வெடிப்புகள் இதே மனநிலையை இன்னும் இறுக்கமாக்கவே உதவியது. இந்தியாவில் ஒரு நவீன மோஸ்தர் உருவாக்கப்பட்டது. ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தால் அதன் செய்தி வெளியாகும் போதே அது இஸ்லாமியர்களின் கைவரிசை என எல்லா செய்தி ஊடகங்களும் எந்த ஆதாரமும் இல்லாமல் அறிவிக்கும். அத்துடன் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் அறிவித்து சில இளைஞர்களை வரிசையாக உட்காரவைத்துக் காட்டுவார்கள். இதில் இரட்டை ஆதாயம். ஒன்று, இப்படி நடந்தாலே அது இஸ்லாமியர்கள் என்று பொதுமக்களுக்கு அடையாளம் காட்டுவது, அடுத்து, பாருங்கள், நாங்கள் நொடிப் பொழுதில் கயவர்களைப் பிடித்துவிட்டோம் என மக்களின் நம்பிக்கையைப் பெறுவது. இந்த நடை முறைகள் எதையாவது நீங்கள் கேள்வி கேட்க முயன்றால் நீங்களும் தீவிரவாதிகள்தான் என எழுத சில ஹிந்துத்துவ கைக்கூலி எழுத்தாளர்கள் தயார் நிலையில் இங்கே.
நாந்தேடு குண்டு வெடிப்புகள், தானே குண்டு வெடிப்புகள், மேலாகாவ் குண்டுவெடிப்புகள், மெக்கா மசூதி வெடிப்புகள் என தொடர் வெடிப்புகள் இந்தியாவை உலுக்கியது. எல்லா வெடிப்புகளிலும் ஒரே நடைமுறைதான். உடனே 20 - 25 இஸ்லாமிய இளைஞர்களைக் கைது செய்வதும் அவர்களை சித்திரவதை செய்வதும்,  குற்றவாளிகளைப் பிடித்துவிட்டோம் என காவல் துறை பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பதும் அச்சு பிசகாமல் நிகழ்ந்தது. இவை எல்லாவற்றுக்கும் பெரும் திருப்பமாக அமைந்தது. இந்தியாவில் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியின் செயல்பாடு. அவர்தான் ஹேமந்த் கர்கரே. அவர் மாலேகாவ் குண்டிவெடிப்பு முழுவதும் ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் சதிவேலை என்பதைக் கச்சிதமாக நிறுவினார். அவர் தாக்கல் செய்த 4000 பக்க அறிக்கை அபிநவ் பாரத், சாத்வி பிரக்ஞயா தாக்கூர், பிரசாத புரோஹித் ஆகியோரின் வரலாற்றை விவரித்தது. கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதைப் போலவே நாந்தேட்டில் ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவருக்குச் சொந்தமான  கிட்டங்கி ஒன்றில் சங் பரிவார் ஊழியர்களுக்கு வெடிகுண்டு செய்யும் பயிற்சி நடந்தபோது ஏற்பட்ட விபத்தால் குண்டு வெடித்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் போலவே தானே குண்டு வெடிப்பின் முடிச்சுகளும் அவிழ்ந்தது. ஹிந்துத்துவ தீவிரவாதத்தை அம்பலப்படுத்திய காரணத்தால்தான் மும்பை தாக்குதல்களின் பின்னணியில் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டார். Who killed Hemant Karkare என்கிற நூலை மகாராஷ்டிராவின் முன்னாள் ஐ.ஜி.முஷ்ரில் எழுதியுள்ளார். அதில் அவர் எவ்வாறு ஹேமந்த் கர்கரேயின் மீது சங் பரிவார் ஒரு கண் வைத்திருந்தது என்பதை விளக்கியுள்ளார்.
அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பிலும் முதலில் பழி பாகிஸ்தானின் லஷ்கர் ஏ தொய்பா அமைப்பின் மீதுதான் போடப்பட்டது. ஆனால் விசாரணையில் மெல்ல ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் உள்ள ஹிந்துத்துவ தீவிரவாதக் குழுக்களின்  செயல் இதில் இருப்பது தெரியவந்தது. அதன்பின் இந்தக் குண்டு வெடிப்பு எப்படி எல்லாம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என்பதை சுவாமி அசீமானந்தா விரிவாக நாட்டிற்கு எடுத்துரைத்தார்.
அடுத்துப் பெரிய அளவில் பேசப்பட்டது சம்ஜவுத்தா எக்ஸ்பிரஸ் வெடிப்புகள். 2008 நவம்பரில் இந்த வெடிப்புகள் நிகழ்ந்தவுடன் லஷ்கர் ஏ தொய்பா, ஜைஷ் ஏ முகமத் குழுக்கள்தான் இதன் பின்னே உள்ளது என அரசு வாய்கிழிய அறிக்கைகள் விட்டு நம் மூளைகளைச் சலவை செய்தது. ஆனால் விசாரணையில் மெல்ல அபிநவ் பாரத் என்கிற அமைப்பும் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி பிரசாத் சிரிகாந்த் புரோஹித் இருப் பதும் தெரியவந்தது. இதே பிரசாத் புரோஹித் தான் மாலேகாவ் குண்டு வெடிப்புகளுக்கு வெடி மருந்து உள்பட தொழில்நுட்ப உதவிகளையும் சாத்வி பிரக்ஞயா தாக்கூருக்கு வழங்கியவர்.
இதே அபிநவ் பாரத் இந்தியாவின் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியைக் கொலை செய்ய தீட்டிய திட்டத்தை ஹெட்லைன்ஸ் டுடே செய்தி ஊடகம் ஆதாரங்களுடன் வெளியிட்டது. ராணுவத்தின் உளவுப் பிரிவுக்கும் அபிநவ் பாரத் அமைப்பிற்கும் நிகழ்ந்த உரையாடல்களின் எழுத்து வடிவை தெகல்கா இதழ் வெளியிட்டது. செப்டம்பர் 16, 2011ல் புதுதில்லியில் நடைபெற்ற அனைத்து மாநில காவல்துறை தலைவர்கள் கூட்டத்தில் உளவுப் பிரிவின் சிறப்பு அதிகாரி ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் துணையுடன் நடத்தப்பட்ட 16 குண்டு வெடிப்புகள் பற்றிய விசாரணைகளின் பட்டியலை வெளியிட்டார்.
ஹிந்துத்துவ தீவிரவாதம் என்கிற சொல் ஊடகங்களில் புழக்கத்திற்கு வந்தவுடன் சங் பரிவார் மற்றும் அதன் வெகுஜனத் தலைவர்கள் அத்வானி உட்பட தீவிரவாதம் என்று ஒன்றுதான் உள்ளது, அதில் ஹிந்து தீவிரவாதம் இஸ்லாமிய தீவிரவாதம் என்று பிரிக்க இயலாது என்றார்கள். அமெரிக்கா தனது எண்ணெய்க்கான யுத்தத்தில் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் 20 ஆண்டுகளாக அப்பட்டமாக ஒரு போரை நிகழ்த்தி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதிகள் பலர் பல நேரங்களில் இதனை சிலுவைப் போர் (crusade) என்றே வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். இருப்பினும் இதனை கிறிஸ்தவ தீவிரவாதம் (christion terrorism) என்று ஒருமுறை கூட எந்த ஊடகமும் அறிவிக்கத் துணிந்ததில்லை. இதுவரை இஸ்லாமியத் தீவிரவாதம், கிறிஸ்துவ தீவிரவாதம் என்ற சொல்லை மிக சகஜமாகப் புழங்கியவர்களுக்கு ஹிந்து தீவிரவாதம் என்ற சொல் தொண்டையில் சிக்கிக் கொண்டது. எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் பொத்தாம் பொதுவாக இஸ்லாமிய தீவிரவாதம் என்கிற போர்வையில் சாமானியர்களைத் தான் இதுவரை பலியாடுகளாக மாற்றியுள்ளோம். தீவிரவாதிகளைப் பிடிக்க இயலாதபோது நாம் அப்பாவிகளை பிடித்து வழக்கை முடிப்பதை வாடிக்கையாக மாற்றியுள்ளோம். மாவோயிஸ்டுகளைப் பிடிக்க முடியவில்லை என்றால் பழங்குடிகளைப் பிடித்து சித்திரவதை செய்து வழக்கை முடிக்கிறோம். ஆனால் இந்தக் காலகட்டங்களில் சுவாமி அசீமானந்தா, சாத்வி பிரக்ஞயா தாக்கூர், புரோஹித் ஆகியோர் நரேந்திர மோடி முதல் அனைத்து பி.ஜே.பி. தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாயின.
ஹைதராபாத்தில் இருக்கும் இந்தியாவின் முன்னணி நகைக் கடை ஒன்றில் வேலை செய்து வந்த முகமத் ரயீசித்தின், மெக்கா மசூதி வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாளன்றே அவனது வேலை பறிபோனது. சில தினங்கள் சித்திரவதை, அதன் பின் சில ஆண்டுகள் சிறைச்சாலை, அதன் பின் வழக்கு விசாரிக்கப்பட்டு விடுதலை. இந்திய நீதிமன்றமே இவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தும் ஹைதராபாத்தில் உள்ள எந்த நிறுவனமும் அவருக்கு வேலை கொடுக்கத் தயாராக இல்லை. நீங்கள் இன்றும் ஹைதராபாத் சென்றால் முகமத் ரயீசித்தினை சந்திக்கலாம். அவர் பிளாட்பாரத்தில் வெயிலுக்குத் தண்ணீர் பழம் விற்றுக் கொண்டிருக்கிறார். இவரைப் போல் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 20 பேரின் கண்ணீர் கதைகள் உள்ளிட்ட அறிக்கையை ஆந்திர சிறுபான்மையினர் ஆணையர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்துள்ளார்.
முகமத் ரயீசித்தின்னைப் போல் ஆயிரக் கணக்கானவர்களின் கதைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களின் கதைகள் எல்லாமே ஏறக்குறைய ஒரே கதையாகவே உள்ளது. எல்லா கதைகளின் நீதி ஒன்றே: இஸ்லாமியப் பெயர் ஒன்றே இவர்களின் இந்தக் கதிக்குக் காரணம். ஷாருக்கானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்டால் என்ன, கேட்காவிட்டால் என்ன? இஸ்லாமியப் பெயர்களைத் தாங்கி வாழ்வது தவிர வேறு ஏதும் செய்யாத இந்த இந்திய இளைஞர்களில் யாரிடமேனும் இந்திய அரசு என்றாவது மன்னிப்பு கோருமா?
- அ. முத்துக்கிருஷ்ணன் (நன்றி: உயிர்மை)

11 ஜூலை, 2012

ஐக்கிய அரபு எமிரேட்: விசா இல்லாத குழந்தையை பையில் மறைத்து எடுத்து வந்த தம்பதி கைது.

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூலை 11, 2012 No comments

 குழந்தைக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாத காரணத்தால் பையில் மறைத்து எடுத்து வந்த தம்பதியரை, ஐக்கிய அரபு எமிரேட் விமானத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
எகிப்து நாட்டிலிருந்து, ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஷார்ஜாவுக்கு ஒரு தம்பதியர் விமானத்தில் வந்திறங்கினர். இவர்களது விசா மற்றும் பாஸ்போர்ட்டை சோதித்த அதிகாரிகள் அடுத்த கட்டமாக இவர்களது உடைமைகளை சோதித்தனர்.


அப்போது அவர்கள் வைத்திருந்த பையை ஸ்கேன் செய்து பார்த்த போது, அதில் ஒரு குழந்தை இருப்பதை கண்டு பிடித்தனர். இதையடுத்து, அவர்களை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர்.
குழந்தைக்கு பாஸ்போர்ட், விசா இல்லாததால் பையில் மறைத்து எடுத்து வந்ததாக அவர்கள் கூறினர். அவர்களிடம் மேலும் விசாரணை நடக்கிறது.

நன்றி:http://www.thedipaar.com

மோடியின் கேடித்தனத்திற்கு கிடுக்கி பிடிபோட்ட உச்ச நீதிமன்றம்?

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூலை 11, 2012 No comments



 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது சேதப்படுத்தப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட வழிப்பாட்டுத் தலங்கள் குறித்த விபரங்களை தாக்கல் செய்ய குஜராத் மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று(திங்கள் கிழமை) உத்தரவிட்டுள்ளது. மேலும் இனப் படுகொலையின் போது சேதப்படுத்தப்பட்ட வழிபாட்டு தலங்களை சீரமைக்கவும் மீண்டும் கட்டவும் எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதையும் மாநில அரசு மதிப்பிட வேண்டும் என்று நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.
கடந்த 2002ம் ஆண்டு நடந்த வன்முறைச் சம்பவங்களில் வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து இஸ்லாமிய நிவாரணக் கமிட்டி தாக்கல் செய்த மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கத் தவறியதற்காக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.
மேலும் சேதப்படுத்தப்பட்ட 500 வழிபாட்டுத் தலங்களுக்கும் இழப்பீடு தருமாறும் குஜராத் அரசுக்கு கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து குஜராத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நரேந்திர மோடி அரசு மனுத் தாக்கல் செய்திருந்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், குஜராத் கலவரத்தின் போது இடித்து தரை மட்டமாக்கப்பட்ட மற்றும் சேதப்படுத்தப்படட வழிபாட்டு தலங்கள் பற்றிய விவரங்களை நீதிமன்றத்திடம் அரசு தெரிவிக்க வேண்டும்.
கலவரங்கள் அல்லது இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமா என்பதை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யும்.
இந்த வழக்கு விசாரணை நடந்தபோது குஜராத் அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழிபாட்டுத் தலங்களை சீரமைக்க அரசின் நிதியை செலவிட முடியாது என்றார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வெள்ளத்தாலோ அல்லது நிலநடுக்கத்தாலே ஒரு வீடு சேதமடைந்தால் அதற்கு நீங்கள் நிவாரணம் தருகிறீர்கள். அப்படி இருக்கையில் வழிபாட்டுத் தலத்துக்கு ஏன் தர முடியாது என்று கேட்ட நீதிபதிகள், கலவரங்கள் அல்லது இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து நாங்கள் ஆய்வுசெய்வோம் என்று அறிவித்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை வருகிற ஜூலை மாதம் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

10 ஜூலை, 2012

பாரபட்சம் பார்க்கும் தலை நகர் டெல்லி! ஹிந்து நாளிதழ்!!

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், ஜூலை 10, 2012 No comments


டெல்லி, இந்தியாவின் தலைநகரமாம் டெல்லியில் வீடு வாடகைக்கு கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் வேளையில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடுகள் கிடைப்பதில்லை என்று ஹிந்து நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டெல்லியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மற்றும் தரகர்கள் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வீடு தர மறுக்கின்ற அவலம் தொடர்கிறது என்று ஹிந்து பத்திரிக்கை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற அவலங்கள் படித்தவர்கள் அதிகம் வசிக்கக் கூடிய நியூ பிரண்ட்ஸ் காலனி, வசந்த் கன்ஜ், ஜன்க்புரா மற்றும் ரோகினி ஆகிய பகுதிகளில் நடந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நியூ பிரண்ட்ஸ் காலனியிலுள்ள குடியிருப்புகளின் ஏஜென்ட் ஒருவரோ இங்கு “இந்தியர்களுக்கு மட்டுமே இடமுண்டு முஸ்லிம்களுக்கு அல்ல” என்று கூறியுள்ளார். இதே காலனியில் இன்னொரு முஸ்லிம் நபருக்கும் இதேப்போன்று அனுபவம் ஏற்பட்டுள்ளது. அவர் முஸ்லிம் என்பதால் அவரிடம் வீடு வாடகைக்கு எடுக்க அனைத்து வசதிகள் இருந்தும் வீட்டின் உரிமையாளர்கள் வீடு தர மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்து நிருபர்கள் புதுமணத் தம்பதிகள் போன்று வேடமிட்டு ரோஹினியின் செக்டார் 8-ல் வீடு வாடகைக்கு கேட்டனர். ஆனால் அதன் உரிமையாளர்களோ இங்கு ஹிந்துக்கள் வசிப்பதால் முஸ்லிம்களுக்கு தர முடியாது என்றதுடன். இந்தப் பகுதியில் எங்கும் முஸ்லிம்களுக்கு வீடு கிடைக்காது என்று கூறியுள்ளனர்.
அதுவும் தனியாக வாழும் பெண்கள் என்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஹிந்து நாளிதழின் நிரூபர் கணவன் இல்லாத பெண்ணாக வீடு கேட்டபோது கணவன் இல்லாதவள் என்று முதலில் கரிசனம் காட்டிய தரகர்கள் பின்னர் முஸ்லிம் என்றவுடன் வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டு சொல்கிறேன் என்று மழுப்பியுள்ளனர்.
இதனை உற்று கவனிக்கும் போது மத ரீதியாக பிளவுகளை ஏற்படுத்த அதிகாரமற்ற குழு ஒன்று டெல்லியில் இயங்கி வருவதை அறியமுடிகிறது. மேலும் முஸ்லிம்களுக்கு கஷ்மீரிகள் மற்றும் ஆஃப்கானிஸ்தானின் அகதிகள் தங்கும் இடத்தின் அருகில் வீடுகளை கட்டுவது டெல்லியில் வழக்கமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகத்தின் பேராசிரியரான ரிஸ்வான், கைசர் சகட் மற்றும் முனிர்கா ஆகிய பகுதிகளில் வீடு கிடைப்பதில் தமது பெயர் பெரிய இடைஞ்சலாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.
இதுபோன்ற செயல்கள் குறித்து வழக்கறிஞர் அசோக் அகர்வால் கூறுகையில்; இதுபோன்ற செயல்கள் சட்டப்படி தவறு என்றாலும் சமூகத்தில் இதுபோன்ற செயல்களை அடையாளம் காணுவது கடினம் என்று கூறினார். மேலும் அரசு இதனை சரி செய்வது இயலாத காரியம் என்றும் கூறினார்.
மேலும் வீட்டு விவகாரங்களில் மலாய், சைனீஸ் மற்றும் இந்திய மக்களிடையே பொது ஒதுக்கீடை அமுல்படுத்தியிருக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளை உதாரணமாகக் கொண்டு இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் தலித்துகளே இது போன்ற பிரச்சனைகளுக்கு ஆளானார்கள். ஆனால் அவர்களின் பெயரின் மூலம் உடனடியாக அவர்களின் ஜாதி தெரியவராது என்பதால் அவர்களுக்கு பிரச்சனைகள் குறைவு என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கணவரை கொன்று நாடகமாடிய மனைவி கைது

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், ஜூலை 10, 2012 No comments

சிகரெட் சூடு மற்றும் கடித்து கொடுமைப்படுத்திய கணவரை, மனைவியே கொன்ற சம்பவம் மதுரையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பீ.பீ. குளத்தை அடுத்த ஜீவா ந‌கரை சேர்ந்தவர் அன்பழகன்(63) இவரது மனைவி உமாமகேஸ்வரி (45). இவர்களுக்கு கார்த்திக் (28) என்ற மகனும், அமலா என்ற மகளும் உள்ளனர். கொத்தனார் ‌வேலை பார்த்து வரும் அன்பழகன், மனைவியை சிகரெட் சூடு வைத்தும், வாயில் கடித்தும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு இவர்கள் இருவருக்கும தகராறு முற்றியது. உமாமகேஸ்வரி, அன்பழகனை கொன்றார். போதையில் தள்ளாடி விழுந்து இறந்ததாக, உறவினர்களிடம் தகவல் தெரிவித்து உடலை அடக்கம் செய்ய முயன்றனர். அன்பழகன் கொலை செய்யப்பட்டு இறந்ததாக போலீசுக்கு தகவல் வரவே, அவர்கள் சம்பவ இடத்திற்கு விசாரணை செய்தனர். விசாரணையில், தான் தான் கொலை செய்ததாக உமாமகேஸ்வரி ஒப்புக்கொண்டதன் பேரில் போலீசார் உமாமகேஸ்வரியை கைது செய்தனர். இக்கொலையில், மகன் கார்த்திக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


நன்றி; தினமலர்

7 ஜூலை, 2012

சிறுபான்மை இன மக்களின் மறுவாழ்வுக்காக நிதியுதவி அளிக்கப்படுகிறது.

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜூலை 07, 2012 No comments

இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட, சிறு குற்றங்களுக்காகத் தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவந்த சிறுபான்மை இன மக்களின் மறுவாழ்வுக்காக நிதியுதவி அளிக்கப்படுகிறது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தெரிவித்தது:
 
சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்து, இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டோர், சிறு குற்றங்களுக்காகத் தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவந்தோர், உடல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் கண்ணியத்துடன் வாழ வழிவகை செய்வதற்காகவும், சிறு வணிகம் செய்து, மறுவாழ்வு பெறுவதற்காகவும் நிதியுதவியாக அதிகபட்சம் ரூ. 10,000 வரை வழங்கப்படுகிறது.
 
இனக் கலவரங்களால் உடல் உழைப்பு செய்ய இயலாத வகையில், ஊனமுற்றிருந்தால் அல்லது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவராக அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பெருங் குற்றங்களாகக் கருதப்படும் எந்தவொரு செயலிலும் ஈடுபடாதவராகவும், முதல் முறையாக சிறு குற்றத்துக்காகத் தண்டனை அனுபவித்து மீண்டவராகவும் இருக்க வேண்டும்.
 
உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவராக இருந்தால், மாவட்ட அரசு மருத்துவரிடம் பரிசோதித்து, சான்றை அளிக்க வேண்டும். பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தால், வட்டாட்சியரிடமிருந்து பொருள் இழப்பீட்டுச் சான்று பெற்று அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கக் கூடாது. தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
 
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரிடம் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை உரிய சான்று ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 

நன்றி, தினமணி

தீவிரவாத பி ஜே பி கட்சிக்குள் குடும்பி பிடி சண்டையால் நிம்மதியில் காங்கிரஸ்.

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜூலை 07, 2012 No comments


பெங்களூர்:  கர்நாடக முதல்வரை மாற்ற வேண்டும் என்று எடியூரப்பா ஆதரவாளர்கள்  கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அங்கு சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தலை  நடத்த பரிந்துரை செய்யலாம் என்று பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி  தெரிவித்துள்ளார்.
சதானந்த கவுடாவை மாற்றிவிட்டு ஜகதீஷ் ஷெட்டரை முதல்வராக்க வேண்டும் என்று  முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்து  வருகின்றனர். இதற்கு பா.ஜனதா மேலிடமும் சம்மதித்துவிட்டதாகவும், ஜனாதிபதி  தேர்தலுக்குப் பின்னர் ஜகதீஷ் ஷெட்டர் முதலமைச்சர் ஆக்கப்படலாம் என்றும்  கூறப்படுகிறது.
இந்நிலையில் எடியூரப்பாவும், அவரது ஆதரவாளர்களும் விடுக்கும் மிரட்டல் மற்றும்  நெருக்கடியால் எரிச்சலடைந்துள்ள அத்வானி, சட்டசபையைக் கலைத்துவிட்டு  முன்னதாகவே தேர்தலை நடத்த பரிந்துரை செய்யுமாறு கர்நாடக பா.ஜனதாவினரை  கேட்டுக் கொண்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

100 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜூலை 07, 2012 No comments


தமிழகத்தில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டு அப் பள்ளிகளுக்கு 900 ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
 
இதுகுறித்து அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வி பயிலும் வயதிலுள்ள அனைத்து குழந்தைகளும் இடையில் நில்லாமல் கல்வி கற்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறார். அந்த வகையில், மாணவ-மாணவியர் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்துக்கு அருகிலேயே மேல்நிலைக் கல்வி பயில வழிவகை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்கெனவே சென்ற ஆண்டு 65 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் என மொத்தம் 875 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன.
 
அந்த வகையில் இந்த ஆண்டிலும் 100 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
 
தரம் உயர்த்தப்பட்ட ஒவ்வொரு பள்ளிக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல், வணிகவியல் ஆகிய பாடங்களுக்கென 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் மொத்தம் 900 ஆசிரியர் பணியிடங்களைத் தோற்றுவிக்கவும், 100 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாகத் தரம் உயர்த்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.40.26 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
 
அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகள், ஊரகப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் எந்தவிதச் சிரமமும் இல்லாமல் கல்வி பயில வழி ஏற்படும் என அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானத்தில் உண்மையாகி வரும் உண்மை!

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜூலை 07, 2012 No comments


 விஞ்ஞான உலகம் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பிரபஞ்சரகசியங்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் ‘தெய்வீக அணுத்துகளை(Godparticle)’ கண்டுபிடித்துள்ளதாக ஸேர்ன்(CERN – The EuropeanOrganisation for Nuclear Research) ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
அணு இயற்பியலின் புதிய ஆய்வு முடிவுகளை குறித்து விவாதிக்கும் சர்வதேச மாநாட்டிற்கு ICHEP (International conference for high energy Physics) முன்னோடியாக நடந்த சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் ஸேர்ன் ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டுபிடித்தவற்றைக் குறித்து அறிவித்தனர்.
தாங்கள் தேடிக்கொண்டிருந்த ‘ஹிக்ஸ் போஸான்’ துகள்தாம் கண்டுபிடித்தது என்பது விஞ்ஞானிகளின் ஆரம்பக்கட்ட முடிவாகும்.
Big Bang எனப்படும் பெருவெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் உருவானது என்கிறது இக்கோட்பாடு.
பெருவெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும்(mass) இல்லை.
ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் ‘சக்தியோடு’ அவை தொடர்புகொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.
இந்த கோட்பாட்டின்படி  இந்த பிரபஞ்சம் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத்துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன.
ஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத துகள்தாம் ஹிக்ஸ் போஸான். இதனை கண்டுபிடிக்காமல் விட்டுவிட்டால் அனைத்து கோட்பாடுகளும் தகர்ந்துவிடும்.
இதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின.
பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்(CERN) அமைத்த மாபெரும் வட்டச் சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.
அணுத்துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத்துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.
ஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத்துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே.
பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி. அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத்தான் CERN நடத்தியது.
இதற்காகத்தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணு துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) தேடினர்.
ஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ்(GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
CERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
நோபல் பரிசுப் பெற்ற விஞ்ஞானியான லியோன் மார்க்ஸ் லெடர்மன்(leon marx lederman) ஹிக்ஸ் போஸானுக்கு ‘தெய்வீகத் துகள்(god  particle)’ என பெயரிட்டார்.
அறிவியல் உலகில் புரியாத புதிராக திகழ்ந்ததால் அவர் இப்பெயரை சூட்டினார். தனது புத்தகத்தில் லெடர்மன் ஹிக்ஸ் போஸானை ‘தெய்வீகத் துகள்’ என அழைக்கிறார். அணு இயற்பியல் விஞ்ஞானத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாக ஹிக்ஸ் போஸானின் கண்டுபிடிப்பு கருதப்படுகிறது.
பிரபஞ்சத்தைக் குறித்த ஸ்டாண்டர்ட் மாடல் கோட்பாட்டின் பல வெற்றிடங்களை நிரப்ப ஹிக்ஸ் போஸானைக் குறித்த இனி வரும் நாட்களில் நடத்தப்படும் ஆய்வுகள் உதவும் என கருதப்படுகிறது.

4 ஜூலை, 2012

திருப்பூரில் ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியர்கள் 4 பேர் கைது

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூலை 04, 2012 No comments

உரிய ஆவணங்கள் இல்லாமல், திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரியர்கள் நான்கு பேர், கைது செய்யப்பட்டனர்.திருப்பூரில், பனியன் ஏற்றுமதி தொடர்பாக, வெளிநாட்டு வர்த்தகர்கள், அதிகளவு வந்து செல்கின்றனர். நைஜீரியா, சோமாலியா நாட்டை சேர்ந்தவர்கள், சுற்றுலா விசாவில் திருப்பூருக்கு வந்து, முறைகேடாக பனியன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் காதர்பேட்டை, ராயபுரம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில், நைஜீரியர்கள் அதிகளவு தங்கியுள்ளனர். பனியனை விலைக்கு வாங்கி, அங்குள்ள நண்பர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி, ஏற்றுமதி வரியிலும், முறைகேடு செய்து வருவதோடு, "செகண்ட்ஸ்' துணிகளையும் வாங்கி, விற்று வருகின்றனர்.சட்ட விரோதமாக தங்கியுள்ள நைஜீரியர்கள் குறித்து, ஏ.எஸ்.பி., தலைமையிலான போலீசார், ஆய்வு நடத்தினர். பல பகுதிகளில் தங்கியிருந்த, 70 நைஜீரியர்களிடம், பாஸ்போர்ட், விசா ஆகியவை, சரி பார்க்கப்பட்டன. இதில், எம்.ஜி.ஆர்., சிலை எதிரே, யுனிவர்சல் ரோடு வீட்டில் தங்கியிருந்த நான்கு பேரிடம், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாதது தெரிய வந்தது.நைஜீரியாவின் அனப்பரா கேட் பகுதியை சேர்ந்த, எபிகா மைக்கேல் நவ்யூ, 38, இக்னா கிறிஸ்டோபர் ஒக்கோசோ, 24, நவீனே விக்டர், 37, சின்னோடம் ஹால்டோனேட்டர் 30, ஆகியோரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.




நன்றி; தினமலர்

1 ஜூலை, 2012

மஹராஷ்ட்ரா சிறைச்சாலையின் அதிர்ச்சி தகவல்!! TISS!!

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, ஜூலை 01, 2012 No comments


புதுடெல்லி: மஹராஷ்ட்ரா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளின் சமூக சூழல்களை குறித்து ஆய்வு செய்த டாட்டா இன்ஸ்ட்யூட் ஆஃப் சோசியல் சயன்ஸஸ்(Tata Institute of Social Sciences (TISS)) வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் அடங்கியுள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் நிரபராதிகள் என்றும், க்ரிமினல் கும்பல்களுடன் அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் TISS அறிக்கை கூறுகிறது.
சில வழக்குகளில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே போலீஸ் கைது செய்கிறது என்று TISS அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
15 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் முஸ்லிம் கைதிகளில் 70 சதவீதம் பேர் விசாரணை கைதிகள் ஆவர். தடா, மோக்கா போன்ற தீவிரவாத தடுப்புச் சட்டங்களின் கீழும், அஃபிஸியல் சீக்ரெட் சட்டத்தின் கீழ் உளவாளிகள் என முத்திரைக் குத்தப்பட்டும் இவர்களில் பெரும்பாலோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்கள் கடுமையான குற்றங்கள் எதுவும் செய்யவில்லை என்று TISS ஆய்வறிக்கை கூறுகிறது.
25.4 சதவீதம் பேருக்கு வழக்குகளை வாதிட வழக்கறிஞர்கள் இல்லை.
TISS க்காக க்ரிமினாலஜி அண்ட் ஜஸ்டிஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் வர்கில் டாக்டர்.விஜய் ராகவனும், ரோஷ்னி நாயரும் ‘மஹராஷ்ட்ரா சிறைகளில் முஸ்லிம் சமூகத்தின் சமூக பொருளாதார சூழல் மற்றும் மறுவாழ்வுக்கான தேவைகள்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

12-ம் ஆண்டு பரிசளிப்பு விழா

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, ஜூலை 01, 2012 No comments

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் நடைபெற்ற 12-ம் ஆண்டு பரிசளிப்பு விழாவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் அதிகப் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தங்கம் - வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள், சுமார் 1000 மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா நேற்று மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற்றது. 

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவர் டாக்டர் நு◌ார் முஹம்மது தலைமையில் நடைபெற்ற இப்பரிசளிப்பு விழாவினை  Z.ஃபஜ்லுர் ரஹ்மான் தொகுத்து வழங்கினார். அப்துல் காதிர் உமரி கிராஅத்துடன் துவங்கிய விழாவிற்கு ஜமாஅத்தின் செயலாளர் ஹெச். ஷாஜகான் வரவேற்புரையாற்றினார். கேப்டன் ஹமீது அப்துல் காதர், ஜமாஅத் து. தலைவர் M.S.அலி அக்பர் , செயலாளர் சுல்தான் அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அண்ணமலைப் பல்கலைகழக கடல்வாழ் உயர் ஆராய்சி நிலையத்தின் பேராசிரியரும் விரிவுரையாளருமான டாக்டர் S. அஜ்மல் கான் வாழ்த்துரை வழங்கி பரிசுகளையும் வழங்கினார். முன்னதாக ஜமாஅத்தின் து. செயலாளர் S. O. செய்யது ஆரிப் மற்றும் பரங்கிப்பேட்டை அரசு மகளிர் பள்ளியின் முன்னால் தலைமை ஆசிரியர் சீனுவாச ராகவன், தட்சிணா மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ட. ஹமீது மரைக்காயர் நன்றியுரை வழங்கினார்.
 

சான்றிதழ்களுடன் பதக்கங்கள் மற்றம் பரிசுகள் வழங்கப்பட்டு விழா முடிவுக்குப் பின் மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. 
 நன்றி,mypon.com