ஹம்துன் அஷ்ரப்

19 ஜன., 2009

பொது சொத்துக்கு சேதம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜனவரி 19, 2009 No comments

ஈழ தமிழர் பிரச்சனைக்காக விடுதலைசிறுத்தை கட்சி தலைவர் திரு.தொல் திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் தலைநகர் சென்னன அருகே மறைமலைநகரில் இருந்துவருகிறார் தமிழர்க்காக குரல் கொடுக்கும் அவரின் அறவழிப்போராட்டம் பாராட்டதக்கது அதேநேரத்தில் தொல் .திருமாவின் தொண்டர்களால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது பஸ்மீது கல் வீசுவது பேருந்து ஓட்டுனர்களை தாக்குவது பஸ்சை தீ வைத்து கொளுத்துவது போன்ற அராஜகவழியில் தங்களின் போராட்டங்களை அமைத்துக்கொண்டனர்.
பொதுசொத்துக்கு சேதம்விளைவித்தால் மட்டுமே "ஈழத்தில்" தமிழர்களின் இன்னல் நீங்கிவிடும்மென இந்ததொண்டர்களுக்கு யார்உத்திரவாதம் கொடுத்தார்கள்??
அன்பு தொண்டனே,
இன்று நீ அவேசத்தில் பேருந்து மற்றும் பொதுசொத்துக்களுக்கு சேதாரம் விளைவித்துவிட்டாய் நாளைய வாழ்க்கையில் உன் அவசரதேவைகளுக்கு நீ கொளுத்திய அந்த பேருந்தும் ஒரு ஏணியாக இருக்கலாம் என்பதை ஏன் மறந்துபோனாய்?

கடைசியாக ஒரு வார்த்தை;
விசிலடிச்சான் குஞ்சாக இருக்காதே
விசயமறிந்த குஞ்சாக இரு
இப்படிக்கு;
அப்பாவிதமிழன்.

0 கருத்துகள்: