ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

31 ஜன., 2009

கவிதை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, ஜனவரி 31, 2009 No comments

மீதமிருக்கும் சொற்கள்



பொங்கித் தணியும்

பூக்கள் நிரம்பிய
கடல்பரப்பில்
நாசிக்கேங்கும் மணம்.
நழுவிக்கொண்டிருக்கிறது இன்று!

முறுக்கப்பட்ட உடல்களிலிருந்து

சொட்டுகிறது நீர்

பாலையிலும் பூக்கின்றன
வெண் மல்லிகைகள்.

வசிக்கும் கனவுகளிலிருந்து

வம்படியாக வெளியேற்றுகிறது

கடன் தீர்க்கக் கோரும் கடிதம்

தூரத்தைக் குறைத்து

பாரத்தைக் கூட்டுகிற

தொலைபேசிகள் அறிவதில்லை

இன்னும் மீதமிருக்கின்றன

பேசப்படாத சொற்கள்.




இப்னு ஹம்துன்.

நன்றி: கீற்று

29 ஜன., 2009

மழையிடம் தான் கேட்கவேண்டும்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், ஜனவரி 29, 2009 No comments

பெரிய தெரு முனையிலிருந்து-பி.முட்லூர் வரை வாகனங்களில் செல்வோரிலிருந்து நடைப்பயணம் செல்பவர்வரை அனைவரையும் பாடாய் படுத்திவந்த சாலை பல மாதங்களாக கண்டுக்கொள்ளப்படாமல் உற்றார்-உறவினர்கள் இல்லாதவர் போன்று தான் காட்சியளித்தது இதனையடுத்து இந்த சாலைகளின் அவல நிலையைப்பற்றி

சமீபத்தில் ஒரு நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதன் எதிரொலியாக விழித்துக்கொண்ட நெடுஞ்சாலைத்துறை அவசர அவசரமாக சாலைப்போடும் பணியை துவக்கி இரண்டொரு தினங்களில் சாலை போடும் பணியை முடிவுக்கு கொண்டுவந்தது


பார்பதற்க்கு நன்றாக காட்சியளிக்கும் சாலைகளின் தரம் எப்படி ? மழையிடம் தான் கேட்கவேண்டும்.
ரோடுதான் போட்டாச்சே என பைக்குகளில் மின்னலாய் பறக்கும் ரேஸ் பிரியர்கள் அதி வேகத்துடன் செல்லாமல் தேவையான வேகத்துடன் சேர்ந்து விவேகத்துடன் செல்வது அனைவருக்கும் நல்லது.


27 ஜன., 2009

60-வது குடியரசு தின விழா

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், ஜனவரி 27, 2009 No comments


பரங்கிப்பேட்டை "கிரசண்ட் நல்வாழ்வு சங்கத்தில்"நடைப்பெற்றது
இவ்விழாவில் சங்க தலைவர்A.h இர்ஃபான் அஹமது அனைவரையும் வரவேற்றார்
கலிமா மேல்நிலைப்பள்ளி தாளாளர், ஜனாப்.I இஸ்மாயில் மரைக்காயர்
அவர்கள் தலமைதாங்க
தலைவர் (இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்,பேரூராட்சி மன்றம்) ஜனாப் MS.முஹம்மது யூனுஸ் அவர்கள் தேசியகொடியை ஏற்றிவைத்தார்கள்
விழாவில் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்
சங்கத்தின் செயலாளர்.K.N ஜாபர் அல் அஹ்மூது நன்றியுரையாற்ற
நிகழ்ச்சி நல்லமுறையில் நடந்து முடிந்தது.

26 ஜன., 2009

உலகத்தை பாதுகாக்க ஒட்டகங்களையும் கங்காருகளையும் உண்ண விஞ்ஞானிகள் சிபாரிசு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜனவரி 26, 2009 No comments


பூகோள வெப்பமாதலிலிருந்து உலகத்தைப் பாதுகாக்க கங்காருகளையும் ஒட்டகங்களையும் உண்ணும்படி விஞ்ஞானிகள் சிபாரிசு செய்துள்ளனர்.இதன் காரணமாக கடந்த 600,000 வருடங்களாக கங்காரு இறைச்சியை உண்ணும் அவுஸ்திரேலியர்களுக்கு, மேற்படி இறைச்சியை உண்பதற்கு விஞ்ஞான பூர்வமான அங்கீகாரத்தை அளிப்பதாக இது உள்ளதென தெரிவிக்கப்படுகிறது.ஏனைய அவுஸ்திரேலிய பண்ணை விலங்குகளுடன் ஒப்பிடுகையில் கங்காருகள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய மெதேன் வாயுவை வெளியிடுவதாக முன்னணி காலநிலை மாற்ற ஆலோசகர் பேராசிரியர் ரோஸ் கார் நோட், பூகோள வெப்பமாதல் தொடர்பான தனது பிரதான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒட்டகங்களானது பாலைவன சூழல், நீர் வளங்கள் மற்றும் அரிய தாவர வகைகள் என்பனவற்றுக்கு அச்சுறுத்தலாகவும், பரவலாகவும் உள்ளதாக சூழலியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.



http://www.mrishan.blogspot.com/
நன்றி; எம்.ரிஷான் ஷெரீப்

23 ஜன., 2009

காகிதப் புலிகளின் புதிய ஒப்பாரி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, ஜனவரி 23, 2009 No comments

பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள காஸாவின் ஓலம் கேட்ட முஸ்லீம் சகோதரர்களுக்கு 100 மைல்களுக்கப்பால் உள்ள வன்னித்தமிழனின் ஓலம் கேட்கவில்லை. !! – நிதர்சனம்.கொம் 16.1.2009ஆமை சுடுவது மல்லாத்தி.அதை நாம சொன்னாப் பொல்லாப்பு. என்று எங்கட உம்மம்மா ஓரு கதை சொல்லுவா.அப்படி இருக்கிறது சாணக்கியர்களின் ஓலம்.ஆம். 3500 மைல்களுக்கு அப்பால் இருக்கும் காஸாவுக்காக கூக்குரல் இடுகின்றீர்களே ! 100மைல்களுக்கப்பால் இருக்கும்; எங்களுக்காகவும் கொஞ்சம் அழுவுங்களேன் ! ? என்கின்றனர் எமது ஜாம்பவான்கள்.. என்னத்தை சொல்வது.எப்படி சொல்வது.எங்கிருந்து ஆரம்பிப்பது.எப்படி ஆரம்பிப்பது.அழுதழுது எழுதுவதா ?வெம்பி வெடித்து எழுதுவதா ?1991இல் மன்னார் முருங்கன் பள்ளிவாசலில் இறந்த முஸ்லீம்களின்; உறவினர்களும், எரிக்கப்பட்ட கடைகளின் சொந்தக்காறர்களும் இன்னும் அக்குறணை, மாத்தளை, மடவளையில் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பதைச் சொல்வதா ? அல்லது அப்போது சிறிலங்காவின் முதலாவது முஸ்லீம் உதவி அரசாங்க அதிபராக இருந்த “மகுறுப்”; உங்களால் சுட்டுக் கொல்லப்பட்டும் இதுவரை விட்டத்தை பார்த்துக்கொண்டிருக்கும் அக்குடும்பத்தின் அவலத்தைச் சொல்வதா ?காத்தான்குடி பள்ளிவாசலுக்குள் நுழைந்து தொழுது கொண்டிருந்தவர்களைச் சுட்டுக்கொன்று சப்பாத்துக்கால்களால் குரான்களை எட்டி உதைத்து எள்ளி நகையாடியதைச் சொல்வதா ? அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலுக்குள் நுழைந்து அப்பாவி முஸ்லீம்களைக் கொன்று வீதியில் சென்று கொண்டிருந்த 16 முஸ்லீம்களை கைகளை கட்டி சுட்டும் , பசியடங்காமல் வெட்டியும் கொன்றஅந்த சூரசம்ஹாரத்தைச் சொல்வதா ??பொத்துவில் பாணமை முதல் மூதுர்,கிண்ணியா,தோப்புர் வரை உள்ள முஸ்லீம்களை அவர்களது வயல்நிலங்களைவிட்டு விரட்டியடித்து அவர்களை சோத்துக்கு வழியில்லாதவர்களா க்கி வெறும் வயிற்றுக்காறர்களாக்கிய அந்த சோகத்தைச் சொல்வதா ?கடந்த 15 வருடங்களாக உங்களிடம் வயல்நிலங்களை இழந்த அந்த ஏழை முஸ்லீம் விவசாயிகள் வயிற்றுப்பசியைப் போக்குவதற்காக வளைகுடா நாடுகளில் “அரபிக்களின் கக்கூசுகளைக்” கழுவிக்கொண்டிருக்கும் அகோரத்தைச் சொல்வதா ?
யாழ் மாவட்டத்தில் இருந்த 91ஆயிரம் முஸ்லீம் குடும்பங்களை உடுத்த துணியுடன் வெளியேற்றி அந்த அப்பாவி மக்களை புத்தளம் முதல் கொழும்பு ,வேருவளை வரை பிச்சை எடுக்க வைத்து சிறிலங்கா வாழ் மொத்த சோனியையும் பைத்தியக்காறர்களாக்கிய அந்ததான்தோன்றித்தனத்தைச் சொல்வதா ?எதைச் சொல்வது ! எதை விடுவது !!“அயல்வீட்டாரையும் உன்குடும்பத்தார் போல் நேசி” என்று சொல்கின்ற மதம் இஸ்லாம்.அடுத்த வீட்டுக்காறன் பசித்திருக்கும் போது நீ உன்னிடம் உள்ள உணவில் ஒரு பகுதியை அடுத்த வீட்டுக்காறனுக்கு கொடு என அறுதியிட்டு சொன்ன மதம் இஸ்லாம்.
நீ எந்த அரசின் கீழ் வாழ்கின்றாயோ, அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நட என உறுதிபட சொன்ன மதம் இஸ்லாம்.அதற்காக கொத்தடிமையாக வாழச்சொல்லவில்லை. உனது தொழில்,உனது மார்க்கக் கடமையைச் செய்ய ஒரு இடம் (பள்ளிவாசல் ) இருந்தால் போதும் என்று உறுதிபடவும் சொன்ன மதம் இஸ்லாம்.அந்த புண்ணிய மதத்தை தழுவிய முஸ்லீம்கள்தான் சிறிலங்காவில் வாழ்கின்றனர். நாம் சிறிலங்காவில் எந்தப்பகுதியில் வாழ்கின்றோமோ அந்தப் பகுதி மக்களுடன் கைகோர்த்து சகஜமாகத்தான் வாழ்கின்றோம்.வாழ்ந்தோம்.காலியில் உள்ள முஸ்லீம்கள் சிங்கள “பெரஹர” காலத்தில் எப்படி சிங்கள மக்களுடன் சேர்ந்து பெரஹர கொண்டாடினார்களோ அதே போல்தான் வடகிழக்கில் உள்ள முஸ்லீம்கள் பொங்கல்,தீபாவழி,சித்திரை காலங்களில் தமிழ் மக்களுடன் சேர்ந்து மோதகம்,அவல்,சக்கரைப்பொங்கல் என உண்டு,உறங்கி வாழ்ந்தோம்.இப்போதும் வாழ்கின்றோம்.அதுமட்டுமா ?தமிழ் இளைஞர் பேரவை காலத்திலிருந்தே வடகிழக்கில் உள்ள முஸ்லீம்கள் இலைமறை காய்களாக இளைஞர்களும், வியாபாரிகளும் சகல விடுதலை அமைப்புக்களுக்கும் உதவி செய்தார்கள்,அப்போது நீங்கள் ஆயுதங்கள் வாங்க அல்லாடிய போதும், இந்தியாவுக்கு உங்களை பைபர்கிளாஸ் போட்டுகளில் ஏற்றி இறக்கவும், உங்கள் பொருட்களை இந்தியாவுக்கு கடத்தவும் ,உங்கள் உறுப்பினர்கள் பிடிபட்டால் பாதுகாப்பு படையினரிடம் பேரம் பேசி அவர்களை மீட்கவும் உதவினார்கள்.இப்போது கொழும்புக்கு தமிழர்கள் வர பாஸ் வேண்டும் என அரசு அறிவித்த போதும் கூட வவுனியாவில் உள்ள இராணுவ அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து பாஸ_ம் எடுத்து கருவாடு, புகையிலை லொறிகளில் கூட்டி வருபவர்களும் அதே முஸ்லீம்கள்தான்.ஐரோப்பிய, அவுஸ்திரேலிய,அமெரிக்க நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள 99வீதமான தமிழ் பெண்கள் முஸ்லீம்களின் பாரம்பரிய உடையான பர்தா அணிந்து , முஸ்லீம்களின் துணையுடன்தான் கவுரவமாக வந்து சேர்ந்தனர். வந்துகொண்டும் இருக்கின்றனர்.
இப்போது புதுசாக நாம் வன்னித்தமிழர்களுக்கு குரல்கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் எமக்கு இல்லை. அந்த அப்பாவி மக்களுக்கு தெரியும் எம்மைப்பற்றி.சிறிலங்காவில் ஒவ்வொரு கிராமத்திலும் சுருட்டுக்கடை, புகையிலைக்கடை ,சில்லறைக்கடை வைத்திருந்த அந்த மக்களுக்கும், எங்களுக்கு எழுத்தறிவித்த அந்த வடமாகாண ஆசிரியர்களுக்கும், கதிர்காமத்திற்கு நடை பயணம் போகும் போது முஸ்லீம் கிராமங்களில் தங்கி நின்று, ஒரு கவளம் தண்ணீர் குடித்துப்போன அந்த வன்னித்தமிழனுக்கும் தெரியும் சிறிலங்கா சோனியின் அன்பும, அரவணைப்பும்.ஆசிரியர்களாக , பொலீஸ் அதிகாரிகளாக , தபாலதிபர்களாக ,நீதிமான்களாக எங்கள் ஊர்களில் கடமையாற்றி , எங்கள் வீடுகளில் வாடகைக்கு குடியிருந்து ஓய்வு நேரங்களில் எங்களுக்கு ஆங்கிலமும் , பஞ்சதந்திரக் கதைகளும் சொல்லித்தந்த அந்த மாமனிதர்களுக்கு தெரியும் சிறிலங்கா முஸ்லீம்களின் மதமும் , மந்திரமும்.படித்த பட்டதாரி ஒருவர் ஒரு கிராமத்திற்கு சென்றாராம். கிராமத்தில் ஒரு குடிசைக்கு முன்னால் ஒரு மாடு சூடு மிதித்துக்கொண்டிருந்ததாம். மாட்டிற்குப்பக்கத்தில் யாருமே இல்லையாம். இவர் மாட்டிற்குப்பக்கத்தில் போய் பார்திதிருக்கின்றார்..யாருமே இல்லை. இவர் உடனே குடிசைக்குப்பக்கத்தில் போய் எட்டிப் பார்த்திருக்கின்றார்.அங்கே கிராமத்தான் சாக்குக் கட்டிலில் படுத்து பாட்டுப்பாடிக் கொண்டிருந்திருக்கின்றான். இவர் உடனே அவனை தட்டி கூப்பிட்டு நீ இங்கே படுத்துக்கொண்டிருக்கின்றாயே ! மாடு தனியே சுற்றிக் கொண்டிருக்கிறதே ! அது சுற்றாமல் நின்று விட்டால் வேலை நடக்காதே ! என்றிருக்கிறார்.அதற்கு கிராமத்தான் அதற்காகத்தான் அதன் கழுத்தில் மணிகட்டியுள்ளேன். அது சுற்றாமல் நின்றால் மணிச்சத்தமும் நின்று விடும். நான் எழும்பிப்போய் மாட்டை மீண்டும் சுற்றவிடுவேன் என்றானாம். மாடு ஒரே இடத்தில் நின்று கொண்டு கழுத்தை ஆட்டினாலும் மணிச்சத்தம் கேட்குமே அப்போது என்ன செய்வாய் என படித்தவர் கேட்டுள்ளார். ஐயா அதை நான் அந்த அளவுக்கு படிக்க வைக்கவில்லை.அதற்கு கள்ளம் கபடம் தெரியாது என்றானாம்.அது போல் அந்த மக்களுக்குத் தெரியும் பாதை திறந்தவுடன் வரும் முதல் வாகனம் முஸ்லீம் களுடையதாகத்தான் இருக்கும் என்று.மொனறாகலை, பிபிலை ,பதியத்தலாவ,பதுளையிலிருந்து சுருட்டு,புகையிலை,சின்ன வெங்காயம் ,உறுண்டைகிழங்கு வாங்கவும் கண்டி, கொழும்பு, கேகல்லவிலிருந்து வாகனங்கள் வாங்கிவிற்கவும் நீர்கொழும்பு, புத்தளம் ,அனுராதபுரத்திலிருந்து கடலட்டை, நண்டு ,கணவாய் என்பன வாங்கவும் துள்ளித் தெறித்து வந்து அந்த வன்னிமக்களின் பொருளாதாரத்தை உயர்த்தப்போகின்றவர்கள் இந்த முஸ்லீம்கள்தான் என்று அந்த வன்னி மக்களுக்குத் தெரியும்.
மீண்டும் அந்த மக்களின் காலைவாரி, வடிவேல் பாணியில் உசுப்பேத்தி, உசுப்பேத்தி அந்த மனிதப்புனிதர்களை கொன்றுவிடாதீர்கள்.வெள்ளந்திரியான அந்த அப்பாவி வன்னி மக்களை , வேட்டை நாய்களாகப் பாவித்து , வேள்வித் தீ நடத்தி ,இன்று வெட்கித்தலை குனியும் படியாக நாளுக்கு 20,30 என அரசகட்டுப்பாட்டு பகுதிக்கு கண்ணீரும் கம்பலையுமாகவரும் அந்த வன்னிமக்களுக்கு நாம் எப்போதும் துணைநிற்போம்.ஆனால் அனைத்தையும் , அனைத்தையும் இழந்த அந்த யாழ்மாவட்ட முஸ்லீம்களுக்காக எப்போதாவது எந்த சந்தர்ப்பத்திலாவது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் அல்லது ஒரு உறுப்பினர்.அல்லது ஒரு நாய்.அல்லது ஒரு காக்காய்.அல்லது ஒரு குருவியாவது குரல் கொடுத்ததா ? --

நன்றி;
- யஹியா வாஸித்

21 ஜன., 2009

அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா இன்று பதவியேற்கிறார்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், ஜனவரி 21, 2009 No comments

அமெரிக்காவின் 44வது அதிபராக பாரக் ஒபாமா இன்று பதவியேற்கிறார். இதையொட்டி வாஷிங்டன் நகரில் மக்கள் குவிந்துள்ளனர். அமெரிக்காவே விழாக்கோலம் பூண்டுள்ளது. கருப்பர் இனத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க வரலாற்றில் புதிய சரித்திரத்தை வடித்துள்ளார். அமெரிக்காவின் 44வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் பதவியேற்றுக் கொள்கிறார். அவருடன் துணை அதிபர் ஜோ பிடேன், அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்கின்றனர். பதவியேற்பு விழாவின் முக்கிய அம்சமாக கேபிடல் ஹில்லில் இருந்து வெள்ளை மாளிகை வரை கண்கவர் பாரம்பரிய அணிவகுப்பு நடைபெறும்.அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரும் பொருட் செலவில் இப்பதவியேற்பு விழா நடைபெறுகிறது. ஏறத்தாழ US$ 300 கோடிகளை பதவியேற்பு விழாவுக்காக மட்டும் இறைத்துள்ளனர்.இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன. ஒபாமாவுடன் அவரது புதிய அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். ஒபாமாவின் பதவியேற்பைக் காண தலைநகர் வாஷிங்டனில் மக்கள் குவிந்துள்ளனர். பதவியேற்பு விழா தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் வாஷிங்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க லிங்கன் நினைவிடத்தில் நேற்று இரவு இசைக் கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் குவிந்திருந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய பாரக் ஒபாமா, ''பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகள் மிகவும் சவாலானவை. அமெரிக்கா சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள அமெரிக்கர்கள் தயாராக வேண்டும்.இந்தச் சவால்களைச் சமாளிக்க ஒரு மாதம் ஆகலாம்; அல்லது ஒரு வருடம் கூட ஆகலாம். இதில் சில பின்னடைவுகள் கூட ஏற்படலாம்'' என்றார்.பதவியேற்ற பின் 21ஆம் திகதி தேசிய பிரார்த்தனை சேவை என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 6 மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஜோர்ஜ் வாஷிங்டன் அதிபர் பதவியேற்றபோது தொடங்கப்பட்ட வழிபாட்டு முறைதான் இந்த தேசிய பிரார்த்தனை. அன்று முதல் ஒவ்வொரு அமெரிக்க அதிபர் பதவியேற்புக்கும் அடுத்த நாள் இந்தத் தேசிய பிரார்த்தனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.வாஷிங்டனில் உள்ள நேஷனல் கதீட்ரலில் இந்தப் பிரார்த்தனை நடைபெறும்.பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டு வழிபாடுகளையும், பிரார்த்தனைகளையும் மேற்கொள்வர்.

நன்றி:http://www.mrishan.blogspot.com/

20 ஜன., 2009

வாக்காளர் பட்டியல்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், ஜனவரி 20, 2009 1 comment

கடலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது
சட்டமன்ற தொகுதி சீரமைப்பின்படி கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் மற்றும் மங்களுர்(தனி) தொகுதிகள்நீக்கப்பட்டு புதிதாக நெய்வேலி , திட்டக்குடி(தனி) என இரண்டு புதிய தொகுதிகள் கொண்டுவரப்பட்டன
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில் மொத்தம் பதிணைந்துலட்சத்து ஆறா ஆயிரத்து நூற்றிப்பத்தொண்பது வாக்காளர்கள் உள்ளனர் இதில் நமது புவனகிரி தொகுதியில் தான் அதிகபட்ச வாக்காளர்கள் உள்ளனர்
  1. ஆண் வாக்காளர் ; 97 681
  2. பெண் வாக்காளர் ;93 197
  3. மொத்த வாக்காளர் ;1 90 878

19 ஜன., 2009

பொது சொத்துக்கு சேதம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜனவரி 19, 2009 No comments

ஈழ தமிழர் பிரச்சனைக்காக விடுதலைசிறுத்தை கட்சி தலைவர் திரு.தொல் திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் தலைநகர் சென்னன அருகே மறைமலைநகரில் இருந்துவருகிறார் தமிழர்க்காக குரல் கொடுக்கும் அவரின் அறவழிப்போராட்டம் பாராட்டதக்கது அதேநேரத்தில் தொல் .திருமாவின் தொண்டர்களால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது பஸ்மீது கல் வீசுவது பேருந்து ஓட்டுனர்களை தாக்குவது பஸ்சை தீ வைத்து கொளுத்துவது போன்ற அராஜகவழியில் தங்களின் போராட்டங்களை அமைத்துக்கொண்டனர்.
பொதுசொத்துக்கு சேதம்விளைவித்தால் மட்டுமே "ஈழத்தில்" தமிழர்களின் இன்னல் நீங்கிவிடும்மென இந்ததொண்டர்களுக்கு யார்உத்திரவாதம் கொடுத்தார்கள்??
அன்பு தொண்டனே,
இன்று நீ அவேசத்தில் பேருந்து மற்றும் பொதுசொத்துக்களுக்கு சேதாரம் விளைவித்துவிட்டாய் நாளைய வாழ்க்கையில் உன் அவசரதேவைகளுக்கு நீ கொளுத்திய அந்த பேருந்தும் ஒரு ஏணியாக இருக்கலாம் என்பதை ஏன் மறந்துபோனாய்?

கடைசியாக ஒரு வார்த்தை;
விசிலடிச்சான் குஞ்சாக இருக்காதே
விசயமறிந்த குஞ்சாக இரு
இப்படிக்கு;
அப்பாவிதமிழன்.

இணைந்த கைகள்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜனவரி 19, 2009 1 comment

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது தற்போதைய நிர்வாக அமைப்பின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவுக்குவருவதால் புதிய தலைவரையும்,நிர்வாக அமைப்பையும் தேர்வு செய்வதுப்பற்றி அலோசனைசெய்வதற்க்காக இந்த பொதுக்குழு கூடியது
பரங்கிப்பேட்டையில் இதுநாள் வரை போட்டி ஜமாத்தாக செயல்பட்டு வந்த முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மக்கள் யாரும் எதிர்பாராத வகையில் தானும் கலந்துக்கொண்டது அப்போது ஏற்பட்ட வாத-விவாத கருத்துபறிமாற்றல்களுக்கு பிறகு இரு தரப்பு ஜமாத்தும் இணைந்து ஓரே ஜமாத்தாக செயல்படுவது என்றும் இதன் அடிப்படையில் வரும் தேர்தலை சந்திப்பது என்றும் முடிவுசெய்யப்பட்டது.
இரு துருவங்களாக செயல்பட்டுவந்த "ஜமாத்"கள் இணைந்து பொதுமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது.

அல்லாஹ்வே மிகப்பெரியவன். அல்ஹம்துலில்லாஹ்.