ஹம்துன் அஷ்ரப்

10 மார்., 2011

எங்களால் தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது..

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், மார்ச் 10, 2011 No comments


"எங்களால் தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது" என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டபோது, அக்கட்சிகளின் நலன்விரும்பிகளுடன் தங்கள் கட்சி தொடர்புகொண்டதாக முஸ்லீம் லீகின் தேசியத் தலைவர் இ.அகமது தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள முஸ்லீம் லீக் சகாக்களுடன் ஆலோசித்து கருத்து வேறுபாடுகளைக் களைய என்னாலான முயற்சிகளைச் செய்தேன். தமிழக சகாக்களின் தாராளம் காரணமாக என்னால் அதைச் செய்ய முடிந்தது. இக்கட்டான நிலைமையும் முடிவுக்கு வந்தது என அகமது தில்லியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேச நலன் கருதி மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும், வலுப்படுத்தவும் தனது கட்சி எப்போதும் முயற்சித்து வருவதாக இ. அகமது குறிப்பிட்டார்.


நன்றி:இந்நேரம்.காம்

0 கருத்துகள்: