ஹம்துன் அஷ்ரப்

20 மார்., 2011

நீ அழுதக் கடிதம்..

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, மார்ச் 20, 2011 No comments


விருந்து வைத்து
விடைக்கொடுத்து;
விட்டுப்பிரிந்து உன்
கண்ணீரைத் தொட்டுவிட்டு;
கரம் அசைத்து;
மரக்கட்டையாக
மகிழுந்தில் நான்!

நீ அழுதக் கடிதங்கள்
என் விரல் பிடிக்க;
நண்பர்களுக்கு வெட்கப்பட்டுக்
கண்களிலேக் கரைந்துவிடும்
என் கண்ணீர்!

சோகங்களைச்
சோர்வடையச் செய்ய;
என்னைப் போலவே
ஏக்கத்துடன்;
கூட்டத்துடன் தனிமையில்
சுதந்திரச் சிறை
அறை நண்பர்கள்!

கேலியும் கிண்டலும்;
அழுது வடியும் மனதை;
ஆசுவாசப்படுத்த!

அமைதியைக் கக்கும்
இரவோ என் இருதயத்தை
கசக்கிப்பிழிய;
சப்தமில்லாமல் சரணடையும்
என் கண்ணீர் தலையணைக்கு!




நன்றி;என் பக்கம் 

0 கருத்துகள்: