ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7 ஜூலை, 2011

தயாநிதிமாறன் ராஜினாமா...?!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், ஜூலை 07, 2011 No comments



2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் தயாநிதி மாறனுக்கும் பங்கு உண்டு என்று சி.பி.ஐ., நேற்று அம்பலப்படுத்தியது.
ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரன் ஸ்பெக்ட்ரம் உரிமம் கேட்டு விண்ணப்பித்த போது தயாநிதிமாறன் சுமார் 2 ஆண்டுகளாக உரிமம் கொடுக்காமல் இழுத் தடித்தார். இதையடுத்து சிவசங்கரன் ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் குழுமத்துக்கு விற்றார். தயாநிதிமாறன் மிரட்டியதால் தனது நிறுவன பங்குகளை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக சமீபத்தில் சி.பி.ஐ.யிடம் சிவசங்கரன் வாக்கு மூலம் அளித்தார்.
இந்நிலையில் பிரதமர் தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தயாநிதி மாறன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் தயாநிதியை பதிவி விலகும்படி பிரதமர் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

8 ஜூன், 2011

கிடைக்கவில்லை ஜாமீன்..?!

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூன் 08, 2011 No comments


திமுக எம்பி கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. முன்னதாக 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரின் ஜாமீன் மனுக்களையும் விசாரணை நீதிமன்றம் மே 20-ம் தேதி தள்ளுபடி செய்திருந்தது. அதை எதிர்த்து கனிமொழியும், சரத்குமாரும் தில்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களின் மீதான விசாரணை தில்லி உயர்நீதிமன்றத்தில் மே 30-ம் தேதி முடிவடைந்தது. அதன் மீது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. 2ஜி ஊழலில் தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுடன் சேர்ந்து சதி செய்தார் என கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


தீர்ப்பு வாசிக்கப்படும்போது கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நீதிமன்றத்தில் இருந்தனர்.
2ஜி ஊழல் பணத்தில் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் இருந்து கலைஞர் டிவிக்காக ரூ 200 கோடியை பெற்றார் என நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நன்றி;
mypno.blogspot.com

11 மார்., 2011

காங்கிரஸ்ஸுக்கு விருத்தாசலம்,திட்டக்குடி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, மார்ச் 11, 2011 No comments



தி.மு.க. கூட்டனியில் காங்கிரஸ் இடம்பெற்ற நிலையில் ஐவர் குழு அறிவாலயத்தில் தொகுதி பங்கிடு பற்றி தி.மு.க.தேர்தல் குழுவினர்களுடன் இன்று நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகள் கிடைக்ககூடும் என நமது செய்தியாளர் தெரிவிக்கிறார்,
எனினும் திண்டிவனம் செய்யாறு தொகுதிகள் மற்றும் பிற தொகுதிகளுக்காக மீண்டும் பேச்சுவார்த்தை நடைப்பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் தங்கபாலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்



அறிவாலயத்திலிருந்து, ஹம்துன் அப்பாஸ்

10 மார்., 2011

உடைகிறதா இ .யூ. முஸ்லிம் லீக்?

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், மார்ச் 10, 2011 No comments






                                                          தி.மு.க., அணியில் சலசலப்பு உடைகிறது முஸ்லிம் லீக்?




நன்றி; தினமலர்

எங்களால் தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது..

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், மார்ச் 10, 2011 No comments


"எங்களால் தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது" என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டபோது, அக்கட்சிகளின் நலன்விரும்பிகளுடன் தங்கள் கட்சி தொடர்புகொண்டதாக முஸ்லீம் லீகின் தேசியத் தலைவர் இ.அகமது தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள முஸ்லீம் லீக் சகாக்களுடன் ஆலோசித்து கருத்து வேறுபாடுகளைக் களைய என்னாலான முயற்சிகளைச் செய்தேன். தமிழக சகாக்களின் தாராளம் காரணமாக என்னால் அதைச் செய்ய முடிந்தது. இக்கட்டான நிலைமையும் முடிவுக்கு வந்தது என அகமது தில்லியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேச நலன் கருதி மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும், வலுப்படுத்தவும் தனது கட்சி எப்போதும் முயற்சித்து வருவதாக இ. அகமது குறிப்பிட்டார்.


நன்றி:இந்நேரம்.காம்

25 பிப்., 2011

அ.தி.மு.க.+தே.மு.தி.க. பேச்சுவார்த்தை தொடங்கியது..

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 25, 2011 No comments


வரஇருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என்று முடிவு செய்த தேமுதிக, பிப்ரவரி 24ஆம் தேதி மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பில் பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர். தேமுதிக தரப்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், சுந்தரராஜன், சுதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அதிமுகவுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. பேச்சுவார்த்தை குறித்த விபரங்கள் கட்சித் தலைவர் விஜயகாந்த்திடம் தெரிவிக்கப்படும்.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று தெரிவித்த அவர், ஆட்சியில் பங்கு கேட்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார். 
மேலும் தொகுதி பங்கீடு உறுதியான பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்திப்பார் என்றும் தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

20 பிப்., 2011

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, பிப்ரவரி 20, 2011 No comments


அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்
 
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலளார் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, அதிமுக தலைமை நிலையச் செயலாளர்  கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி  தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது என இரு கட்சிகளுக்கு இடையே கையெழுத்தானது.

மேலும் புதுவை சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் அளிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா உறுதி அளித்தார்.
--
 

15 பிப்., 2011

இந்திய தேசிய லீக், அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், பிப்ரவரி 15, 2011 No comments


இந்திய தேசிய லீக் கட்சியின் புதிய தலைவராக அப்துல்லா சுலைமான் சேட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது.
 
இதில் தேசிய தலைவராக இருந்த முகமது சுலைமான் சாகிப் நீக்கப்பட்டு, ஜனாப் அப்துல்லா சுலைமான் சேட் ஏகமனதாக புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இதுகுறித்து இந்திய தேசிய லீக் மாநில பொதுச் செயலாளர் ஜகிருத்தீன் அகமது விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
புதிய தலைவர் அப்துல்லா சுலைமான்சேட், பொதுச் செயலாளர் சிராஜ் இப்ராகிம் சேட் அறிவுறுத்தலின்படி இந்திய தேசிய லீக்கின் தமிழக கிளை, அ.தி.மு.க. கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு தருவது என்றும் இக்கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவது என்றும் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

16 டிச., 2010

திருமாவளவன் கோரிக்கை

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், டிசம்பர் 16, 2010 No comments

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் மத்திய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரே ஆண்டில் பெட்ரோல் விலை எட்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்டதில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.12 உயர்ந்துள்ளது. இந்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தின் ஒப்புதலோடு இவ்வாறு விலை உயர்த்தப்படுவதாக பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த காலங்களில் இந்திய அரசே பெட்ரோல் விலை வரையறைகளைத் தீர்மானித்து வந்தது. ஆனால், அண்மைக்காலமாக, அந்த அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அளித்து விட்டதனால், அந்நிறுவனங்களே விலை உயர்வைத் தீர்மானித்து, அறிவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒப்புக்கு பெட்ரோலிய அமைச்சகத்தின் அனுமதி பெற்று அறிவிக்கும் ஒரு ஏற்பாட்டை வைத்துள்ளனர்.

விலையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைத்திருக்கும் இந்திய அரசின் இத்தகைய கொள்கை முடிவு வெகுமக்களுக்கு எதிரான முடிவேயாகும்.

இந்திய அரசின் இந்த முடிவால், ஏழை- எளிய உழைக்கும் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை மேலும் அதிகரித்துள்ளது. எனவே, அரசு இம்முடிவை உடனே விலக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மூன்று ரூபாய் விலையை எட்டாவது முறையாக தற்போது உயர்த்தியுள்ள முடிவையும் உடனே திரும்பப் பெற இந்திய அரசு ஆணையிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஓர் அரசால் மட்டுமே குடிமக்களைப் பொருளாதாரச் சுமைகளிலிருந்தும் வறுமைக் கொடுமைகளிலிருந்தும் ஓரளவேனும் பாதுகாத்திட இயலும்.

எனவே, பெட்ரோல் டீசல் விலையைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் இந்திய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமென்பதுடன், அவற்றின் விலைகளையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் அறிக்கையில் கூறியுள்ளார்.
நன்றி:இந்நேரம்.காம்

10 நவ., 2010

மகாராஷ்டிரா அடுத்த முதல்வர் பிருதிவிராஜ்சவான் : சிபாரிசை ஏற்று சோனியா முடிவு

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், நவம்பர் 10, 2010 No comments

ஆதர்ஷ் வீட்டு வசதி கழகத்தில் உறவினர்களுக்கு வீடு வழங்குவதில் நடைபெற்ற ஊழல் வழக்கு காரணமாக முதல்வர் பதவியை அசோக்சவான் ராஜினாமா செய்தார். மகாராஷ்டிரா அடுத்த முதல்வர் யார் என்பதில் பிரித்விராஜ் சவான் மற்றும் பாலாசாகேப் விக்கே பாட்டில் ஆகியோரது பெயர்கள் அடிப்பட்டன. இந்நிலையில் மாநில மேலிட பொறுப்பாளர்களான பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் தற்போது மத்திய இணை அமைச்சராக உள்ள பிரித்விராஜ் சவான் பெயரை மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஏகமனதாக ‌பரிந்துரைத்துள்ளனர். பரிந்துரைகளை கேட்டுக்கொண்டு டில்லி திரும்பிய அந்தோணியும், பிரணாபும் இன்று காலையில் டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர். சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த பிரணாப் : மகாராஷ்டிரா காங்., எம்.எல்.ஏ., க்கள் பரிந்துரையை தலைவர் சோனியாவிடம் கூறியதாகவும் அவரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

24 மணி நேரத்தில் அதிரடி : பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று துவங்குவதற்கு முன்னர் ஆதர்ஷ் ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய மகா., முதல்வர் அசோக் சவான், காமன்வெல்த் ஊழல் புகாரில் சிக்கிய சுரேஷ் கல்மாடி ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து அந்தோணி , பிரணாப் மும்பை பயணம், மகா., காங்., எம்.எல்.ஏ., க்கள் கூட்டம் , டில்லியில் சோனியாவுடன் சந்திப்பு, என 24 மணி நேரத்தில் பரபரப்பு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ராகுல் கணிப்பு : மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் "தூய்மை'யானவராக இருப்பார். அவர் திறமையற்றவராக இருக்கும்பட்சத்தில், உடனடியாக திரும்பப்பெறப்படுவார்.இவ்வாறு ராகுல் கூறியிருந்தார். இந்நிலையில் பிருதிவிராஜ் சவான் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளது காங்., அரசியல் வட்டாரத்தில் அ‌மோக வரவேற்பை பெற்றுள்ளது. காங்கிரஸ் மேலிடம், சவானின் மத்திய அமைச்சர் பதவியின் அனுபவம் அவருக்கு மாநில அரசை கையாள உதவியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் சவான் திறமைசாலி என பாராட்டியுள்ளது.

பிருதிவிராஜ் பேட்டி : முதல்வராக தேர்வு ‌செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக டில்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் பிருதிவிராஜ் சவான். காங்கிரஸ் கட்சி மேலிடம் தன்னை மகாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்கும் படி கேட்டுக்கொண்டதாகவும், அந்த வேண்டுகோளை தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறினார். கூட்டணி கட்சிகள் ஆதரவு நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இன்று மாலை மும்பை செல்வதாக கூறினார். பிரதமர் மன்மோகன்சிங் மத்திய இணை அமைச்சர் பொறுப்புக்களில் இருந்து தன்னை விடுவித்துவிட்டதாக கூறினார்.

நாளை பதவியேற்பு : இன்று மாலை மும்பை செல்லும் பிருதிவிராஜ் சவான் , கவர்னர் சங்கரநாராயணனை சந்திப்பார் என தெரிகறிது. நாளை அவர் முதல்வராக பதவியேற்றுக்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன..

நன்றி : தினமலர்