ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

31 மார்., 2011

பரங்கிப்பேட்டையில் அ.தி.மு.க. கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 31, 2011 No comments

பரங்கிப்பேட்டை: சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சி சார்பில் இதன் தேர்தல் அலுவலகம் பெரியத் தெருவில் இன்று திறக்கப்பட்டது. வேட்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிதம்பரத்தின் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை த.மு.மு.க.வின் கவுரத் தலைவர் டாக்டர் நூர்முஹம்மது பங்கு பெற்றார்.



கூட்டணி கட்சிகள் சார்பில், நகர அ.தி.மு.க. நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொண்டர். அருண்மொழித்தேவன் உரையாற்றினார்.

நன்றி : MYPNO.COM

30 மார்., 2011

வாக்கு வேட்டையில் வாண்டையார்..!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், மார்ச் 30, 2011 No comments

பரங்கிப்பேட்டை பகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக தி.மு.கழக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் நேற்று மாலை பரங்கிப்பேட்டைக்கு வருகை தந்தார். பரங்கிப்பேட்டை வெள்ளாற்று பாலம், வழியாக வந்த அவருக்கு, பாலத்தின் முகப்பில் பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்., பின்னர் ஸ்ரீதர் வாண்டையார், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் K.S.அழகிரி, பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் , நகர தி.மு.க செயலாளர் பாண்டியன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் செழியன், காண்டீபன், ஆகியோர் திறந்த ஜீப்பில் நின்றவாறு பரங்கிப்பேட்டையில் உள்ள பல தெருக்களுக்கு சென்று வாக்கு சேகரித்தனர்.

நகுதா மரைக்காயர் தெருவில் அமைந்திருக்கும் T.N.T.J. நகர அலுவலகத்திற்கு K.S.அழகிரி M.P., பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், காண்டீபன், ஆகியோருடன் வந்த வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் அங்கிருந்த நகர T.N.T.J. நிர்வாகிகள் ஃபாஜுல் ஹுஸைன், முத்துராஜா, ஹபீப் ரஹ்மான் ஆகியோர்களுடன் கலந்துரையாடி தனக்காக தேர்தல் பணியாற்றும்படி கேட்டு கொண்டார்.

வாக்கு சேகரிக்கும் பணியில் ஏராளமான தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களில் தொடர் அணிவகுப்பாக சென்றதால் நேற்று மாலை பரங்கிப்பேட்டை பகுதி பரப்பரப்பாக காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமை இயக்கங்கள் சேர்ந்த நிர்வாகிகள் - தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


காங்கிரஸ் திடீர் சுறுசுறுப்பு..!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், மார்ச் 30, 2011 No comments



மூவேந்தர் முன்னேற்றக் கழக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள தி.மு.க., - பா.ம.க., - வி.சி., முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகிகளை மட்டும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்த நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் செய்யது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் ராகுல் காந்தி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் ஆகியோர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேக்ஸ் அனுப்பி இருந்தனர், இந்நிலையில் K.S.அழகிரி M.P, உத்தரவின் பேரில் நேற்று மாலை முதல் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டனர். முன்னதாக வெள்ளாற்று பாலத்தின் முகப்பில் K.S.அழகிரி M.P., வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார், ஆகியோருக்கு நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் செய்யது அலி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்

25 மார்., 2011

தி.மு.க., கூட்டணிக் கட்சி தேர்தல் அலவலகம் திறப்பு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, மார்ச் 25, 2011 No comments

பரங்கிப்பேட்டையில் தி.மு.க., கூட்டணி கட்சி தேர்தல் அலுவலகத் திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செழியன், பா.ம.க., செயலர் முருகன் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., நகர செயலர் பாண்டியன் வரவேற்றார். சேர்மன் முத்துபெருமாள் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். விழாவில் கவுன்சிலர் ஹாஜாகமால், தி.மு.க., காண்டீபன், உசேன், தங்கவேல், காங்., அப்துல் லத்தீப், வி.சி., எழில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலர் அலிஅக்பர் உட்பட பலர் பங்கேற்றனர்.

புவனகிரி தொகுதியில் பா.ம.க., மனு தாக்கல்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, மார்ச் 25, 2011 No comments

புவனகிரி சட்டமன்ற தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் உட்பட 5 பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர். புவனகிரி தொகுதி பா.ம.க., வேட்பாளராக அறிவுச்செல்வன் போட்டியிடுகிறார் இவர் நேற்று மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரி கல்யாணத்திடம் மனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக சாத்தமங்கலம் ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார். இதே தொகுதிக்கு லோக் ஜனசக்தி கட்சி சார்பில் சிதம்பரம் கமலக்கண்ணன், சுயேச்சைகளாக கம்மாபுரம் சவுந்தரராஜன், கீரப்பாளையம் முருகன் ஆகியோர் நேற்று மனு தாக்கல் செய்தனர். இதுவரை இத்தொகுதியில் ஐந்து பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

20 மார்., 2011

நீ அழுதக் கடிதம்..

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, மார்ச் 20, 2011 No comments


விருந்து வைத்து
விடைக்கொடுத்து;
விட்டுப்பிரிந்து உன்
கண்ணீரைத் தொட்டுவிட்டு;
கரம் அசைத்து;
மரக்கட்டையாக
மகிழுந்தில் நான்!

நீ அழுதக் கடிதங்கள்
என் விரல் பிடிக்க;
நண்பர்களுக்கு வெட்கப்பட்டுக்
கண்களிலேக் கரைந்துவிடும்
என் கண்ணீர்!

சோகங்களைச்
சோர்வடையச் செய்ய;
என்னைப் போலவே
ஏக்கத்துடன்;
கூட்டத்துடன் தனிமையில்
சுதந்திரச் சிறை
அறை நண்பர்கள்!

கேலியும் கிண்டலும்;
அழுது வடியும் மனதை;
ஆசுவாசப்படுத்த!

அமைதியைக் கக்கும்
இரவோ என் இருதயத்தை
கசக்கிப்பிழிய;
சப்தமில்லாமல் சரணடையும்
என் கண்ணீர் தலையணைக்கு!




நன்றி;என் பக்கம் 

19 மார்., 2011

மூ.மு.க Vs மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, மார்ச் 19, 2011 No comments

நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் போட்டியிடுவது அனைவரும் அறிந்ததே. மூ.மு.க வை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களமிறங்குகிறது. இக்கட்சியின் வேட்பாளர் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார். கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க இங்கு வெற்றி பெற்றிருந்தும் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியுள்ளதால்,இது அக்கட்சிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும். எனவே தி.மு.க அணி வேட்பாளர் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்பதாகவே கருதப்படுகிறது. 2006 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் அருள்மொழிதேவன், தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாலகிருஷ்ணனை 17,162 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.





நன்றி;mypno.com

16 மார்., 2011

ஸ்ரீரங்கம தொகுதியில் ‌‌‌ஜெயலலிதா போட்டியிடுகிறார்.

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், மார்ச் 16, 2011 No comments

வரும் சட்டமன்றதேர்தலில்‌ அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் இவர் ஆண்டிபட்டி தொகுதியில் வெற்றி பெற்றார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் படி ஸ்ரீரங்கம தொகுதியில் ‌‌‌ஜெயலலிதா போட்டியிடுகிறார். 

கும்மிடிப்பூண்டியில் வி. கோபால்நாயுடு
பூவிருந்தவல்லி -        என் எஸ் ‌ஏ மணிமாறன்
மாதவரம்-                     வி.மூர்த்தி
பொன்னேரி(தனி)              -பொன்.ராஜா
திருவள்‌ளூர்-                        பி.வி.,
ஆவடி-                          அப்துல் ரஹீம்
அம்பத்தூர்-                  எஸ் வேதாசலம்
ஆர் கே நகர் மதுசூதனன்
பெரம்பர் -     பி.வெற்றிவேல்
வில்லிவாக்கம்-   ஜே சி டி பிரபாகர்
ராயபுரம்-           த ஜெயகுமார்
துறைமுகம்-               பழ கருப்பையா
ஆயிரம விளக்கு-            ப.வளர்மதி
அண்ணா நகர் -         கோகுல இந்திரா

15 மார்., 2011

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், மார்ச் 15, 2011 No comments

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு. 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் எவை என்பதற்கான உடன்பாடு இன்று காலையில் கையெழுத்தானது, இதில் திமுக தலைவர் கருணாநிதியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவும் கையெழுத்திட்டனர்.
தொகுதிகள் பற்றிய விபரங்கள் கீழே

1.ராயப்புரம்
2. பூவிருத்தவல்லி (தனி)
3. ஆவடி
4. திரு.வி.க.நகர் (தனி)
5 . திருத்தணி
6. அண்ணாநகர்
7. தி.நகர்
8. மயிலாப்பூர்
9. ஆலந்தூர்
10. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
11. மதுராந்தகம்
12. சோளிங்கர்
13. வேலூர்
14. ஆம்பூர்
15. கிருஷ்ணகிரி
16. ஓசூர்
17. செங்கம்
18. கலசப்பாக்கம்
19. செய்யாறு
20. ரிஷிவந்தியம்
21. ஆத்தூர் (தனி)
22. சேலம் வடக்கு
23. திருச்செங்கோடு
24. ஈரோடு (மேற்கு)
25. மொடக்குறிச்சி
26. காங்கேயம்
27. உதகை
28. அவினாசி (தனி)
29. திருப்பூர் தெற்கு
30. தொண்டாமுத்தூர்
31. சிங்காநல்லூர்
32. வால்பாறை (தனி)
33. நிலக்கோட்டை (தனி)
34. வேடசந்தூர்
35. கரூர்
36. மணப்பாறை
37. முசிறி
38. அரியலூர்
39. மயிலாடுதுறை
40. விருத்தாசலம்
41. திருத்துறைப்பூண்டி (தனி)
42. பாபநாசம்
43. பட்டுக்கோட்டை
44. பேராவூரணி
45. திருமயம்
46. அறந்தாங்கி
47. காரைக்குடி
48. சிவகங்கை
49. மதுரை வடக்கு
50. மதுரை தெற்கு
51. திருப்பரங்குன்றம்
52. விருதுநகர்
53. பரமக்குடி (தனி)
54. ராமநாதபுரம்
55. விளாத்திக்குளம்
56. ஸ்ரீவைகுண்டம்
57 கடையநல்லூர்
58. வாசுதேவநல்லூர்
59. நாங்குனேரி
60. ராதாபுரம்
61. குளச்சல்
62. விளவங்கோடு
63. கிள்ளியூர்

14 மார்., 2011

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், மார்ச் 14, 2011 No comments

தெசன் தைக்கால் தெருவில் மர்ஹூம் நூர்தீன் மரைக்காயரின் மகளாரும் மர்ஹூம் மானா மூனா என்கிற முஹம்மது யூசுபு அவர்களின் மனைவியும் N. நகுதா மரைக்காயரின் சகோதரியும் M.Y.முஹம்மது மெய்தீன் M.Y. முஹம்மது பாருக் M.Y.ஜாகீர் ஹுஸேன் M.Y.செய்யது அஹ்மது இவர்களின் தாயாருமாகிய பீ என்கிற முஹம்மது பீவி அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை (15-03-2011) காலை 10 மணிக்கு நல்லடக்கம் கும்மத்துப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

11 மார்., 2011

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி வீடியோ காட்சி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, மார்ச் 11, 2011 No comments






source;al jazeera.t.v

ஜப்பானில் நிலநடுக்கம் ,ஏற்பட்டதையடுத்து தாக்கியது சுனாமி ..

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, மார்ச் 11, 2011 No comments


வடகிழக்கு ஜப்பானில் 8.9 என்ற ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜப்பானின் கடற்கரையோரப் பகுதிகளில் இன்று சுனாமி தாக்கியது.

 கடற்கரைச் சாலைகளில் ஏராளமான கார்கள் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டன.

8.9 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவி ஆய்வுமையம் தெரிவித்தது. டோக்கியோவுக்கு வடகிழக்கே 230 மைல்கள் தொலைவில் பதினைந்து மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து ஜப்பான், ரஷ்யா, மார்கஸ் தீவு மற்றும் வடக்கு மரியானாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது.
ஏராளமான கார்கள், கட்டடங்கள், படகுகள் உள்ளிட்டவை கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டன. நிலநடுக்கத்தால் பல இடங்களில் தீவிபத்தும் ஏற்பட்டன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசுபிக்கின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
கயாம், தைவான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் அமெரிக்காவின் ஹவாயிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து நூற்றுக்கணக்காண மைல்கள் தொலைவில் உள்ள டோக்கியோவில் கட்டடங்கள் பலமாக அதிர்ந்தன. நிலநடுக்கம் ஏற்பட்ட 30 நிமிடங்களுக்குப் பின்னரும் டோக்கியோவில் உள்ள உயரமான கட்டடங்கள் அதிர்ந்துகொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு செல்போன் தொடர்புகள் முற்றிலும் செயலிழந்துவிட்டன.
டோக்கியோவில் உலகின் மிகவும் பரபரப்பான ஷின்ஜுகு நிலையத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுவிட்டனர். ரயில்கள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டன.
டோக்கியோவின் முக்கிய விமானநிலையம் மூடப்பட்டது.
இது மிகவும் அரிதான நிலநடுக்கம், சேதங்கள் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரிக்கலாம் என ஜப்பான் பேரிடர் மேலாண்மை மையத்தின் அலுவலர் ஜூனிச்சி சவதா தெரிவித்தார்.
ஜப்பான் நேரப்படி பிற்பகல் 2.46 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குள் 5 சக்திவாய்ந்த நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. அதன் அளவீடுகள் 7.1 என்ற ரிக்டர் அளவில் இருந்தன. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.9 என்ற அளவில் இருந்தது. எனினும் 8.4 ரிக்டர் அளவில் இருந்ததாக ஜப்பான் தெரிவித்தது.
டோக்கியோவின் ஒடைமா மாவட்டத்தில் பெரிய கட்டடம் ஒன்று தீப்பிடித்து, புகைமண்டலமாக காட்சி அளித்தது. மத்திய டோக்கியோவில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அனைவரும் பிளாட்பார்ம்களில் நடந்துசென்றனர்.
டோக்கியோவிலும், புறநகரிலும் 40 லட்சத்துக்கும் மேலான கட்டடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.   இதனால் ஜப்பான் இருளில் மூழ்கியது.

காங்கிரஸ்ஸுக்கு விருத்தாசலம்,திட்டக்குடி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, மார்ச் 11, 2011 No comments



தி.மு.க. கூட்டனியில் காங்கிரஸ் இடம்பெற்ற நிலையில் ஐவர் குழு அறிவாலயத்தில் தொகுதி பங்கிடு பற்றி தி.மு.க.தேர்தல் குழுவினர்களுடன் இன்று நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகள் கிடைக்ககூடும் என நமது செய்தியாளர் தெரிவிக்கிறார்,
எனினும் திண்டிவனம் செய்யாறு தொகுதிகள் மற்றும் பிற தொகுதிகளுக்காக மீண்டும் பேச்சுவார்த்தை நடைப்பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் தங்கபாலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்



அறிவாலயத்திலிருந்து, ஹம்துன் அப்பாஸ்

சவுதிஅரேபியாவில் ஆர்ப்பாட்டங்கள்...?!

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, மார்ச் 11, 2011 No comments


நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராக பரவி வரும் ஆர்ப்பாட்டங்கள் தற்போது சவூதிஅரேபியாவிலும்,பரவ ஆரம்பித்துள்ளது.

சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை அன்று ஆர்பாட்டகாரர்கள் கும்பல் ஒன்றை கலைக்க கண்ணீர்புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டதாகவும் இதில் சுமார் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறும்போது சவூதிஅரேபியா காவல்துறையினர் 100 க்கும் மேற்பட்ட ஆர்பாட்டகாரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் துப்பாகி சூடு நடத்தப்படும் சப்தமும் கேட்டதாக தெரிவித்தார். 
ஆர்பாட்டத்தில் பங்கு பெற்ற ஒருவர் கூறும்போது இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் நான்கு பேர்கள் காயம் அடைந்ததாக கூறினார்.

10 மார்., 2011

உடைகிறதா இ .யூ. முஸ்லிம் லீக்?

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், மார்ச் 10, 2011 No comments






                                                          தி.மு.க., அணியில் சலசலப்பு உடைகிறது முஸ்லிம் லீக்?




நன்றி; தினமலர்