ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

28 பிப்., 2011

இறப்புச் செய்தி

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், பிப்ரவரி 28, 2011 No comments

ஆத்தாங்கரை தெருவை சேர்ந்த, மர்ஹும் செய்யது நூர் அவர்களின் மகளாரும்,மர்ஹும் S.சேக் முஹம்மது அவர்களின் மனைவியும், S.M.ஜலீல் அவர்களின் தாயாருமாகிய ஹாஜியா.செய்யது நிஷா பீவி அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் சிங்கப்பூரில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ [...]

27 பிப்., 2011

போலியோ ‌சொட்டு மருந்து வழங்கப்படுகிறது

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 27, 2011 No comments

தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் கட்ட போலியோ ‌சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் செட்டு மருந்து வழங்கப்படுகிறது.&nb [...]

26 பிப்., 2011

கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்..

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, பிப்ரவரி 26, 2011 No comments

பரங்கிப்பேட்டை அப்பா பள்ளி சமுதாய கூட கமிட்டி சார்பாக, கல்வியில் பின் தங்கியுள்ள மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாக நாளை மஹ்முதியா ஷாதி மஹாலில் "கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்" நடைப்பெறுகிறதுஇதில் M.S. முஹம்மது யூனுஸ் (தலைவர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்,பேரூராட்சி மன்றம்) தலைமையேற்கிறார், முஸ்லிம்களின் எதிர்காலம் என்கிற தலைப்பில் C.M.N. சலிம் M.A. அவர்களும், முஸ்லிம் பெண்களின் சமுதாய முன்னேற்றம் என்கிற தலைப்பில் செய்தா பானு அவர்களும் உரையாற்றுகிறார்கள [...]

திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு 3 தொகுதிகள்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, பிப்ரவரி 26, 2011 No comments

திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் விரைவில் வருவதையொட்டி, அதிமுக, திமுக உள்ளிட் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டு வருகி்ன்றன. இந்நிலையில், சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை, முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீனை சந்தித்துப் பேசினார். சந்தி்ப்பிற்கு பிறகு, பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்த காதர் மொய்தீன் கூறியதாவது, வெற்றிக்கூட்டணியில் [...]

விருப்ப மனு தாக்கல்

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, பிப்ரவரி 26, 2011 No comments

தமிழகத்தின் 14-வது சட்டமன்ற தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சிகளும், கூட்டணி தொடர்பாக முனைப்பாக பணியாற்றி வருகின்றன.இந்நிலையில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சியினரிடமிருந்து விருப்ப மனுவினை நேற்று முதல் மார்ச் 7-வரை பெற திட்டமிட்டுள்ளது. முதல் நாளான நேற்று சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்காக பரங்கிப்பேட்டையிலிருந்து கடலூர் மாவட்ட தி.மு,க பிரதிநிதியும், பரங்கிப்பேட்டை [...]

25 பிப்., 2011

அ.தி.மு.க.+தே.மு.தி.க. பேச்சுவார்த்தை தொடங்கியது..

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 25, 2011 No comments

வரஇருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என்று முடிவு செய்த தேமுதிக, பிப்ரவரி 24ஆம் தேதி மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பில் பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர். தேமுதிக தரப்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், சுந்தரராஜன், சுதீஷ் [...]

23 பிப்., 2011

மன்னர் அப்துல்லாவின் சலுகைகள்..!

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், பிப்ரவரி 23, 2011 No comments

சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளார். உடல் நலம் குன்றியிருந்து மன்னர் மொராக்கோவில் சிகிச்சை பெற்ற பின்னர் இன்று (23.02.2011) சவுதி திரும்பினார்.நாடு திரும்பியதும் அவர் அரசு ஊழியர்களுக்குச் சம்பளத்தில் 15 சதவிகிதம் உயர்வு வழங்குவதாக அறிவித்தார். இது தவிர வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டண உதவி, வேலையில்லாமல் இருக்கும் சவுதி [...]

வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், பிப்ரவரி 23, 2011 No comments

நேற்று பெய்த திடீர் மழையின் காரணமாக தடைப்பட்டிருந்த வாத்தியாப்பள்ளி தெரு தார்  சாலை அமைக்கும் பணி இன்று காலை முதல் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. [...]

பரங்கிப்பேட்டையில் மார்க்கக் கல்வி பயிலும் பெண்களுக்கு உதவித் தொகை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், பிப்ரவரி 23, 2011 No comments

[...]

இரத்த கொடையாளர்களே வருக....

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், பிப்ரவரி 23, 2011 No comments

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பரங்கிப்பேட்டை லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்தும் இரத்ததான முகாம் நாளை (24-02-11)ல் B.M.ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நினைவு ஷாதி மஹாலில் நடைப்பெருகிறது.Ln. Agri.M.இராதாகிருஷ்ணன் விழாவுக்கு தலைமைதாங்குகிறார்,Ln.ஹாஜி.M.S.முஹம்மது யூனுஸ் (தலைவர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்,மற்றும் பேரூராட்ச்சி மன்றம்) அவர்கள் முகாமை துவக்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.மற்றும் ஹாஜி. கலிமா.K.சேக் அப்துல் [...]

22 பிப்., 2011

பள..பளக்கும் சிமெண்ட் சாலைகள்..!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், பிப்ரவரி 22, 2011 No comments

பரங்கிப்பேட்டை நகரில் பல்வேறு இடங்களில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைப்பெற்று முடிவடைந்து வருகிறது. காஜியார் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை ஜமாஅத் - பேருராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் நேற்று பகல் பார்வையிட்டார். இதனிடையே வாத்தியாப்பள்ளி தெரு தார் சாலை பராமரிப்பு பணிகளுக்காக சாலையின் ஓரங்களில் இருந்த மணல் அள்ளப்பட்டு பணி துவங்க இருந்த நிலையில் இன்று காலை முதல் பெய்து [...]

இறப்புச் செய்தி

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், பிப்ரவரி 22, 2011 No comments

கோட்டாத்தாங்கரை சந்தில், மர்ஹும் நூர்தீன் மரைக்காயருடைய மகளாரும்,  மர்ஹும் ஹாஜா,   முஹம்மது சுல்தான், முஹம்மது கவுஸ் இவர்களின் தாயாரும்,  மர்ஹும் அமீர் வாத்தியாருடைய மனைவியுமான ஹலிமா பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷh அல்லாஹ் இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்      2.    பரங்கிப்பேட்டை பாரக் வீடு மர்ஹும் ஹனீபா அவர்களின் மருமகனும், செய்யது அமீன் அவர்களின் தகப்பனாருமாகிய செய்யது உமர் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்சா அல்லாஹ் இன்று காலை 10 மணிக்கு [...]

20 பிப்., 2011

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, பிப்ரவரி 20, 2011 No comments

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்   சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலளார் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் [...]

நிலவு ஆராய்ச்சி....?!

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, பிப்ரவரி 20, 2011 No comments

நேற்று இரவு 8 மணி முதல் பரங்கிப்பேட்டை முழுதும் பரபரப்பான செய்தி பரவ, அனைவரும் வானத்தை நோக்கி முழுநிலவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள். சிலர், 'அட! ஆமாங்க, தெரியுதுங்க!' என்கின்றனர். சிலர், 'எனக்கு ஒன்னுமே தெரியலயே...!' என்கிறன்றனர். 'அட நல்லா உத்து பாருங்க... கிளியரா தெரியுது' என்று வேறு சிலர். ஆண்களைவிட பெண்கள் முந்திக்கொண்டு, வீட்டு வாசல்களுக்கும் - மொட்டை மாடிக்கும் சென்று நிலாவுக்கு செல்லாமலேயே [...]

பிரபாகரனின் தாயார் மரணம்.

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, பிப்ரவரி 20, 2011 No comments

 பிரபாகரனின் தாயார் பார்வதிஅம்மாள். 81 வயதான இவர் இலங்கையில் வசித்து வந்தார். முதுமை காரணமாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சர்க்கரை நோயாலும், இருதய கோளாறாலும் அவதிப்பட்டு வந்தார். பக்கவாதமும் தாக்கியது. அவரை இந்தியாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.இதற்கு உரிய அனுமதி கிடைக்காததால் பார்வதிஅம்மாள் வந்த விமானம் சென்னையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் [...]

19 பிப்., 2011

கடலூர் அருகே மாசிமக ஊர்வலத்தில் மோதல், ஒருவர் இறந்தார்.

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, பிப்ரவரி 19, 2011 No comments

 கடலூர் அருகே ஊர்வலத்தில் இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் இறந்தார். பலர் படுகாயமடைந்தனர். வீடுகள் சூறையாடப்பட்டன. போலீசார், கண்ணீர் புகை குண்டு வீசி வன்முறை கும்பலை விரட்டியடித்தனர். கடலூர் அருகே உள்ளது கம்பிளிமேடு காலனி. அதன் அருகே உள்ளது தியாகவல்லி. இரு கிராமத்தினருக்கும் முன்விரோதம் உள்ளது. நேற்று காலை மாசிமகத்தை முன்னிட்டு, கம்பிளிமேடு காலனியிலிருந்து இளைஞர்கள் ஆடிப் பாடி சுவாமியை தீர்த்தவாரிக்காக, பெரியக்குப்பம் கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். திருச்சோபுரம் டாஸ்மாக் [...]

18 பிப்., 2011

சாலைமறியல்...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 18, 2011 No comments

பரங்கிப்பேட்டை அருகே இன்று நடைப்பெற்ற சாலைவிபத்தின் காரணமாக சஞ்சிவிராயர் கோயில் அருகே இன்று மாலை விடுதலைசிறுத்தைக்கட்சி சார்பாக சாலைமறியல் நடைப்பெற்றது. அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல்இருப்பதை கண்டித்தும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்ககோரியும்,மருத்துவமனையில்,ஓன்றுக்கு மேற்பட்ட மருத்துவர்களை நியமிக்கசொல்லியும், விடுதலைசிறுத்தைக்கட்சியினர் சாலையில் அமர்ந்து [...]

பரங்கிப்பேட்டையில் விபத்து: இருவர் பலி; 25 பேர் காயம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, பிப்ரவரி 18, 2011 No comments

மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு புவனகிரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களை C.புதுப்பேட்டை கடற்கரைக்கு அழைத்துசென்ற தனியார் வாகனம் பரங்கிப்பேட்டை கடலூர் சாலையில் (குட்டியாண்டவர் கோயில்) அருகே விபத்துக்குள்ளானது. புதுப்பேட்டை கடற்கரையிலிருந்து ஊருக்கு திரும்பிசென்ற வேன் சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் போது சாலையை கடக்கமுயன்ற ஆட்டின் மீது மோதாமலிருக்க திருப்பும்போது அருகிலிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தவாகனத்தில் [...]

15 பிப்., 2011

ஹோஸ்னி முபாரக்கின் , சொத்துகள் வளைக்குடா நாடுகளுக்கு மாற்றம்?!

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், பிப்ரவரி 15, 2011 No comments

மக்கள் புரட்சியால் பதவி இழந்த முன்னாள் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை முடக்க சுவிஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததையடுத்து அவர் தனது சொத்துகள் அனைத்தையும் அரபு நாட்டு வங்கிகளுக்கு மாற்றியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.                       சேர்த்துவைத்துள்ள சொத்துக்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து [...]

இந்திய தேசிய லீக், அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், பிப்ரவரி 15, 2011 No comments

இந்திய தேசிய லீக் கட்சியின் புதிய தலைவராக அப்துல்லா சுலைமான் சேட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது.   இதில் தேசிய தலைவராக இருந்த முகமது சுலைமான் சாகிப் நீக்கப்பட்டு, ஜனாப் அப்துல்லா சுலைமான் சேட் ஏகமனதாக புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.   இதுகுறித்து இந்திய தேசிய லீக் மாநில பொதுச் செயலாளர் ஜகிருத்தீன் அகமது விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   புதிய தலைவர் அப்துல்லா சுலைமான்சேட், பொதுச் செயலாளர் [...]

12 பிப்., 2011

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, பிப்ரவரி 12, 2011 2 comments

- ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும். - கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே - தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், [...]

10 பிப்., 2011

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், பிப்ரவரி 10, 2011 No comments

மக்கள் தொகை கணக்கெடுக்கும் அதிகாரிகளிடம், மக்கள் தயக்கமின்றி விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.  ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள், 5 நகராட்சி ஆணையர்கள், நெய்வேலி என்.எல்.சி. [...]

பெண் பயணிகள் மீது தொடரும் பாலியல் தொந்தரவுகள் -

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், பிப்ரவரி 10, 2011 No comments

பெண் பயணிகள் மீது    தொடரும் பாலியியல் தொந்தரவுகளால் கேரள மாநிலத்தில் கொந்தளிப்பு  உருவாகி உள்ளது. கடந்த ஒன்றாம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து சோரனூர்  நோக்கிச் சென்ற பயணிகள் தொடர்வண்டியில்  சவுமியா (23) என்ற பெண்ணை தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி (33) என்பவர் கீழே தள்ளி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும்,வண்டியில்  இருந்து [...]

6 பிப்., 2011

சிறுநீரக நோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, பிப்ரவரி 06, 2011 1 comment

சிறுநீரக நோய்களைத் தீர்ப்பதற்கு மாதுளம் பழச்சாறு சிறந்தது என ஆய்விலிருந்து தெரியவருகிறது, இஸ்ரேலில் டயாலிஸிஸ் செய்வதற்கு முன்பாக சில சிறுநீரக நோயாளிகளுக்கு மாதுளம் பழச்சாறு அல்லது புரதச்சத்து அதிகம் உள்ள பிளாஸ்போ பானம் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மாதுளம்பழச்சாறு சிறுநீரக பாதிப்பையும், பக்கவிளைவான இதயநோயையும், சாவு விகிதத்தையும் குறைப்பது தெரியவந்தது. ஏனெனில், மாதுளம்பழச்சாறு அருந்தியவர்கள் [...]

5 பிப்., 2011

பொறாமைத் தீயில் பொசுங்கும் நல்லறங்கள்..

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, பிப்ரவரி 05, 2011 No comments

வழக்குத் தமிழில், “பொறாமை” என்றும் இலக்கியமாய் “அழுக்காறு” என்றும் கூறப்படும் கெட்ட எண்ணத்திற்கு அரபுமொழியில் “ஹஸது” (Jealousy and Envy) என்று சொல்வார்கள். சகமனிதருக்குக் கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகள், திறமை ஆகியவற்றின்மீது ஆசை கொண்டு சகமனிதருடைய வீழ்ச்சியை விரும்புதல்; அவ்வீழ்ச்சியில் மகிழ்ந்திருத்தல், அதற்கான செயல்களில் ஈடுபடல் போன்ற இழிவான மனப்பான்மைக்குத்தான் பொறாமை என்று சொல்லப்படும். இதில் [...]

Pages 261234 »