-
PORTONOVO MASJID
This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]
-
MARINE BIOLOGY
This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]
-
PORTONOVO LIGHT HOUSE
This is the PORTONOVO LIGHT HOUSE. [...]
#
#
7 டிச., 2010
நீடுர் நகரில் மருத்துவக்கல்லூரி..!
டிசம்பர் – 6
மக்கள் தொகை விபரங்கள்...


6 டிச., 2010
மீண்டும் பலத்த மழை வாய்ப்பு..!
வங்கக் கடலில் ஒரு வாரமாக மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழக கடலோ மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து வடக்கு நோக்கி நகர்ந்தது. அதன் மையப்புள்ளி, தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களை ஒட்டி இருந்தது. இதனால் இந்த இரு மாவட்டங்கள் மற்றும் அதை ஒடியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இந்த மழையினால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஏரி, குளம், நிரம்பி வழிகின்றன. சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டன. மேலும் நெற்பயிர் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு சேதம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு: இந்த பாதிப்புகளை நேரில் கண்டறிந்து நிவாரணப்பணிகளை மேற்கொள்ள 8 ஐஏஎஸ் அதிகாரிகளை மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேற்று நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். சேத விவரங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் கேட்டறிந்தனர்.கடலூர் மாவட்டத்தில்,இம்மாவட்டத்தில் முன்பு கலெக்டராக பணியாற்றிய திரு,ககன்தீப் சிங் பேடி (குடிநீர்வடிகால்வாரியஇயக்குனர்) அவர்களிடம், பொதுமக்களும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்தனர்.
மாவட்டங்களில் ஆய்வு நடத்திய ஐஏஎஸ் அதிகாரிகள், அரசுக்கு மழை வெள்ள சேதம் குறித்த அறிக்கையை இன்று சமர்ப்பிக்க உள்ளனர். இதற்காக, தமிழக அமைச்சரவையின் சிறப்பு கூட்டம் நாளை நடக்க உள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால் நேற்று வரை 1262 கால்நடைகள், 26915 குடிசை வீடுகள், சேதம் அடைந்துள்ளன. மழை காரணமாக நேற்று வரை 166 பேர் பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை 26 பேர் இறந்துள்ளனர். திருவாரூரில் 18 பேரும், கடலூரில் 20 பேரும் மழைக்கு பலியாகியுள்ளனர் என்று வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று கன்னியாகுமரியில் 50 மிமீ, புதுச்சேரி, நாகப்பட்டினம், வேதாரண்யம் 40 மிமீ, செய்யூர், மதுராந்தகம், மாமல்லபுரம், கடலூர், பரங்கிப்பேட்டை, பண்ருட்டி, வானூர், ஒரத்தநாடு, திருத்துறைப்பூண்டி, கொள்ளிடம், சீர்காழி 30 மிமீ, தாம்பரம், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், மரக்காணம், கும்பகோணம், குடவாசல், முத்துப்பேட்டை, நன்னிலம், நீடாமங்கலம், வலங்கைமான், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குளச்சல், நாகர்கோவில் 20 மிமீ மழை பெய்துள்ளது. இதுவரை மழை கொட்டித் தீர்த்த 9 மாவட்டங்களில் வெள்ளம் இன்னும் வடியவில்லை.
குறைந்த காற்றழுத்தம் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றதால் ஆந்திரா கடலோரத்தில் கனமழை பெய்யும். வடதமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யும்.
தென் மாவட்டங்களில் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். 11 மாவட்டங்களில் விடுமுறை தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி தஞ்சை, கடலூர், நாகை, திருவாரூர், கரூர், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் முதல்வர் வைத்திலிங்கம் விடுமுறை அறிவித்துள்ளார். தொடர் மழையின் காரணமாக மாவட்ட தலைநகரங்களிலும், இதர பகுதிகளிலும் மக்களின் இயல்பான வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரி ...!
தமிழ்நாடு வக்பு வாரியமும், நீடுர் மிஸ்பாஹு ஹுதா மதராஸாவும் இணைந்து மருத்துவக் கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த மருத்துவ கல்லூரி மயிலாடுதுறை அருகே உள்ள நீடுரில் அமைக்கப்பட உள்ளது. மருத்துவ கல்லூரி கட்டுவதற்காக நீடுர் மிஸ்பாஹுல் ஹுதா மதராஸா நிர்வாகம் தங்கள் வக்பு நிலத்தில் இருந்து 23 ஏக்கரை நிலத்தை அளிக்க முன்வந்துள்ளது.
மருத்துவக் கல்லூரியை கட்ட ரூ.60 கோடி வரை தேவைப்படுகிறது. இந்த கல்லூரியை ஒரு அறக்கட்டளைதான் நடத்த உள்ளது. ஒரு உறுப்பினர் கட்டணம் ரூ.10 லட்சம் ஆகும். மொத்தம் 170 பேர் வரை தலா ரூ.10 லட்சம் நன்கொடை தருவதாக உறுதி அளித்துள்ளனர். முதல் கட்டமாக 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மத்திய அரசிடம் முறையாக அனுமதி பெற்று மருத்துவ கல்லூரி 2012ஆம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கும் என அவர் கூறினார்.
5 டிச., 2010
வீராணம் ஏரி.....!
உஷார்...உஷார்...
4 டிச., 2010
அனோமதேய திருடர்களிடமிருந்து தப்பித்து கொள்ள

3 டிச., 2010
பொது தேர்வு...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 , எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வுகள், நடக்கும் நாள் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் மார்ச் 2ம் தேதி பிளஸ்- 2 தேர்வும், 28 ம்தேதி பத்தாம் வகுப்பு தேர்வும் துவங்குகிறன. பொதுத் தேர்வு பணிகளை அரசு தேர்வுத் துறை துவங்கியுள்ளது.
பத்தாம் வகுப்பு ( எஸ்.எஸ்.எல்.சி.,) 28 ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு துவங்குகிறது. அட்டவணை இறுதி செய்யப்பட்டது. இந்தாண்டு, சுமார் ஏழு லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுத்தேர்வு அட்டவணை முழு விவரம்
பிளஸ் 2
தேர்வு தேதி தேர்வுப் பாடம்
2.3.11 மொழி முதல் தாள்
3.3.11 மொழி இரண்டாம் தாள்
7.3.11 ஆங்கிலம் முதல் தாள்
8.3.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
11.3.11 இயற்பியல், பொருளியல், உளவியல்
14.3.11 வேதியியல், கணக்குப்பதிவியல்
17.3.11 கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி
18.3.11 வணிகவியல், புவியியல், ஹோம் சயின்ஸ்
21.3.11 உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
23.3.11 கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி
25.3.11 அரசியல் அறிவியல், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி
எஸ்.எஸ்.எல்.சி.,
28.3.11 மொழி முதல் தாள்
29.3.11 மொழி இரண்டாம் தாள்
31.3.11 ஆங்கிலம் முதல் தாள்
1.4.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
5.4.11 கணிதம்
8.4.11 அறிவியல்
11.4.11 சமூக அறிவியல்
மெட்ரிகுலேஷன்
22.3.11 மொழி முதல் தாள்
23.3.11 மொழி இரண்டாம் தாள்
24.3.11 ஆங்கிலம் முதல் தாள்
25.3.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
28.3.11 கணிதம் முதல் தாள்
30.3.11 கணிதம் இரண்டாம் தாள்
1.4.11 அறிவியல் முதல் தாள்
5.4.11 அறிவியல் இரண்டாம் தாள்
8.4.11 வரலாறு மற்றும் சிவிக்ஸ்
11.4.11 புவியியல் மற்றும் பொருளியல்
படக் கருவியும் படைக் கலனே!
![]() மாய் மஸ்ரி (Mai Masri) மத்தியக் கிழக்கு என்றழைப்பார்கள் அந்தப் பகுதியை. உலகப் பிரச்சினைகளின் மையமாக இருப்பதாலும், பெரும்பாலான யுத்தங்களுக்கு கிழக்காக இருப்பதாலும் அவ்விதம் சொல்லப்படுவதும் ஒருவகையில் பொருத்தமே. அங்கே நாடற்றவர்களின் நாடான பஃலஸ்தீனில் வயது பேதமின்றி கையில் கிடைத்த ஆயுதங்களை ஆக்ரமிப்பாளர்களுக்கெதிராக ஏந்தியிருக்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள். அதே நாட்டின் மாய் மஸ்ரி (Mai Masri) என்கிற பெண்மணி ஏந்தியதோ படக்கருவியை! மத்தியக் கிழக்கின் ஒவ்வொரு காலநிலையையும் உலகமே உன்னித்துப்பார்க்க இவருடைய ஆவணப்படங்கள் ஜன்னலைப் போல் அமைந்து வந்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல.
கடந்த 30 ஆண்டுகளாக லெபனானில் இஸ்ரேல் நிகழ்த்திய அத்துமீறல்களை; லெபனானின் உள்நாட்டு யுத்தங்களை; 2000ல் பஃலஸ்தீன் கண்ட ‘இன்திஃபாதா’ என்னும் பேரெழுச்சியை; - இப்படி ஒன்றையும் விடாமல் ஆவண(ப்பட)மாக்கி வைத்திருந்தாலும், மாய் மஸ்ரியுடைய நோக்கம் யுத்தத்தையும் அதன் இடிபாடுகளையும் படம் பிடிப்பதல்ல; மாறாக, அக்கட்டத்தில் இருக்கிற (அ) இல்லாமற் போகிற மனிதத்தன்மை, நாளாந்திர வாழ்க்கை, தினசரி இழப்புகள், கவலைகள், தோன்றி மறையும் (அ) மறைந்து தோன்றும் நம்பிக்கைகள் ஆகியவையே இவருடைய கோணம். ![]() யுத்தத்துடனும், யுத்தத்தின் போதும் அவற்றின் இருமுனைகளில் உள்ள பாமர மக்களின் அசந்தர்ப்பமான சூழல்களை மாய் வெளிப்படுத்துகிறார். ஓய்வு ஒழிச்சலின்றி தான் காணும் அகதி முகாம்கள், அரசியல் மாற்றங்கள், நம்பிக்கையையும், பயத்தையும் வெளிப்படுத்தும் சின்னஞ்சிறுசுகள், பெண்கள் என்று பதிவு செய்கிற மாய் தம் வாழ்க்கை மிகுந்த பொறுமையும் அலைக்கழிப்பும் நிரம்பியது. ஆனாலும் மாய் நம்பிக்கை இழப்பதாக இல்லை. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற படவிழா ஒன்றில், மாய் மஸ்ரியுடையதும், அவர் கணவர் லெபனீய இயக்குநர் ழான் ச்சாமோன் உடையதுமான படங்கள் திரையிடப்பட்டு கெளரவம் அளிக்கப்பட்டன. “நீண்ட காலமாக ஆக்ரமிப்பில் உள்ள ஊரிலிருந்து வருகிறேன்” என்ற மாய் மேலும் சொன்னார்: “நான் (இப்போது) வாழ்ந்து வருவதும், ஒரு யுத்த பூமியில் (லெபனானில்) தான். அரசியல் படுகொலைகள், உள்நாட்டு கலகங்கள், எழுச்சி முழக்கங்கள் எல்லாம்தான் என் வாழ்வினூடாகக் கண்டு வருகிறேன்”. மத்தியக் கிழக்கின் சிறந்த ஆவணப்பட இயக்குநராகத் திகழும் மாய் ஃபலஸ்தீனியத் தந்தைக்கும் அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவர். 1982ல் இஸ்ரேல் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் லெபனானின் ஷாட்டிலா நகரில் ஃபலஸ்தீனிய அகதிமுகாம்களில் அரக்கத்தனத்துடன் கொத்துக்கொத்தாய் செய்த கொலைகளை, வன்புணர்வுகளைப் பார்த்திருக்கிறார். “அந்தக் கொடுஞ்சம்பவத்துக்குப் பின்னர் நாங்கள் தெருக்களில் சென்றபோது எங்கும் துயரமும் ஓலமுமாயிருந்தது. வாழ்வின் மிக மோசமான தருணம் அது. எங்கு பார்த்தாலும் மரணத்தின் கோரமுகம். அப்போதுதான், திடீரென்று ஒன்றுமறியா குழந்தைகளின் சிரிப்பொலி கேட்டேன். குண்டுகள் துளைத்திருந்த சுவர்களுக்குப் பின்னாலிருந்து நம்பிக்கைக் கீற்று மிளிர அந்தப் பிஞ்சுகளின் முகங்கள் தெரிந்தன. இறந்து கிடந்தவர்களெல்லாம் வாழத் திரும்பிவிட்டதைப் போன்றிருந்தது எனக்கு! அப்போது தான் படங்கள் எடுப்பதைத் தீர்மானித்தேன்” என்கிறார் மாய். “ அதன் மூலம் தான் ஆறுதல் தேடிக்கொள்கிறேன்” “தொடக்கத்தில் 1980களில் படமெடுப்பது அத்தனை எளிதாக இல்லை. உளவாளிகளையும் (போர்)விமானங்களையும் பார்க்கும் பார்வையினையே படக்கருவிகள் மீதும் மக்கள் வைத்திருந்தார்கள். ‘இன்திஃபாதா’ என்னும் பேரெழுச்சி நிலையின் போது அந்த அச்சம் அகன்றது. ஒரு புரிந்துணர்வு அரும்பியது” தன்னுடைய படங்களின் மூலம் வரும் லாபத்தை அகதி முகாம்களிலுள்ள குழந்தைகளின் படிப்புதவித் தொகையாகத் தந்து உதவி வருகிறார் மாய். “குழந்தைகளே மாற்றத்தின் விசை! அவர்கள் தன்னியல்பானவர்கள். சார்பற்றவர்கள், கற்பனாசக்தி நிரம்பியவர்கள்” ஃபலஸ்தீனிய அகதிமுகாம்களில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞியாக இருந்த காலங்களையும் நினைவு கூர்கிறார் மாய். “படம் எடுப்பவளாக, இப்போது நான் எதிர்கொள்ளும் அபாயங்களும் மிக யதார்த்தமானவை. துப்பாக்கிச்சூடுகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள், அதுவுமில்லாமல் கலவரக்காரர்கள் இவற்றினூடே தான் என் காமிராவும் பயணிக்க வேண்டியிருக்கிறது” “இந்தக் காமிரா கூட ஓர் ஆயுதம் தான்” தனது படக்கருவியைச் சுட்டிக்காட்டுகிறார் மாய். “என்னிடமில்லாத வலிமையை இதன் மூலமே நான் பெறுகிறேன்” என்கிற மாய் ஒரு ஆவணப்பட இயக்குநராக மாற்று வழிகளையும் யோசித்துவைத்திருக்கிறார். தனது சொந்த ஊரான நபுலஸ்ஸுக்கு முதன்முறை மாய் சென்றிருந்தபோது அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பதுங்கிப் பதுங்கி பாதுகாப்பாக படம் பிடித்தேன். சூழலுக்கேற்ப நடந்துகொண்டேன். ஆவணப்படத்துக்கான கதைக்கருவை யோசிக்கத் தேவையேயில்லாமல் அங்கே நிலைமையே அதுவாக இருந்தது” தனது ஆவணப்பட ஆக்கங்களில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஃபலஸ்தீன் பற்றிய பிம்பத்தையே குறிப்பிடுகிறார் மாய். “உதுமானிய ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சி, கடைசியாக இஸ்ரேலின் ஆக்ரமிப்பு என்று காலாகாலத்துக்கும் அது நிழல்தேசமாகவே இருக்கிறது – அநாதரவானவர்களின் பூமியாக; மக்களே இல்லாமல் போகும் தேசமாக! “ஒவ்வொரு ஃபலஸ்தீனியரிடத்திலும் ஒரு திரைப்படக் கரு இருக்கிறது. அவரவர்க்கு நிகழ்ந்த சம்பவங்களையும், செவியுற்றதையும் ஒவ்வொருவரும் மனதில் திரும்பத்திரும்ப ஓட்டிப்பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்” என்று மாய்-யின் கூற்று தான் எத்தனை உன்னிப்பானது! விருது பெற்ற மாய் மஸ்ரியுடைய ஆவணப்படங்கள் யாவும் உண்மையின் தேடலாய் அமைந்தவையே. ஆனால் அவை யுத்தம் பற்றியதல்ல. மிக மோசமான சூழலிலும் இளைஞர்களின் கனவுகள், வாழத் தலைப்படும் நம்பிக்கைகள், அன்பின் சிரிப்பு ஆகியவற்றையே அப்படங்கள் பேசுகின்றன. ![]() “யுத்தம் மக்களிடம் அவர்களின் நல்ல பக்கத்தையும், மோசமான தன்மையையும் வெளிக்கொணர்வதாக அமைகிறது” என்கிற மாய் மஸ்ரியுடைய இந்தப்படங்கள் ஏற்படுத்திய விளைவுகள் ஆச்சரியமானவை. ஒரு ஜப்பானிய இசையமைப்பாளர் இவருடைய படங்களைப் பார்த்துவிட்டு அகதிமுகாம் குழந்தைகளுக்கு இசைக்கருவிகள் அனுப்ப விரும்பினார். இவருடைய “33 நாள்கள்” படம் பார்த்த ஒரு இஸ்ரேல் தம்பதியினர் கண்கலங்கினார்கள். இதே படத்தை ஆம்ஸ்டர்டாமில் பார்த்த இஸ்ரேலிய பெண் இயக்குநர் ஒருவர் பித்துபிடித்தாற் போல மழையில் இரவு முழுக்க அலைந்து திரிந்திருக்கிறார். இப்படம் தந்த உந்துதலில் அதே இயக்குநர் “அர்னாவின் குழந்தைகள்” என்கிற திரைப்படத்தை எடுத்திருக்கிறார். இத்தாலியில் ஓர் ஊமைச் சிறுவன் “33 நாள்கள்” படத்தைப் பார்த்துவிட்டு, குமுறிப் பேசத் தொடங்கியிருக்கிறான். இப்படியாக, தனது போராயுதமான படக்கருவியால் உயிர்களைப் போக்கிடச் செய்யாமல் இதயங்களைத் தட்டி எழுப்புவதை மாய் செய்து வருகிறார் எனும் போது அது பாராட்டப்படவேண்டிய செயலல்லவா! கட்டுரை: இப்னு ஹம்துன் நன்றி; சத்தியமார்க்கம்.காம் |
2 டிச., 2010
வெள்ள அபாய எச்சரிக்கை.


கடலூர்மாவட்டத்தில் 200 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளாறில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சேத்தியா தோப்பு, பரங்கிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 200 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
1 டிச., 2010
போதும் மழை..!




பரங்கிப்பேட்டையில் பெய்யும் மாமழை..!






















