ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

17 செப்., 2012

அமெரிக்காவின் மதவெறிக்கு கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், செப்டம்பர் 17, 2012 No comments

.இஸ்லாத்தையும், இறைத்தூதர் நபிகள் நாயகத்தையும் இழித்து யூதுஅமெரிக்கர் இயக்கிய திரைப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தும், படத்தை நீக்க மறுக்கும் கூகிள் மற்றும் அதன் அங்கமான யூ-டியூப் தளங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு மீராப்பள்ளியிலிருந்து புறப்பட்டு சென்றது.
 ஜமாத் தலைவர் டாக்டர்  நூர் முஹம்மது தலைமையில் நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்தில் பெரியவர்கள் ,இளைஞர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் திரளாக கலந்துக்கொண்டு அமெரிக்காவிற்க்கு எதிரான தமது கண்டனைத்தை பதிவுசெய்தனர்


 கண்டன முழக்கங்கங்களுடன் பெரிய மதகுவரை பேரணி வந்தவர்கள்  அங்கிருந்து வாகனங்களில் பி.முட்லுரர் எம்.ஜி.ஆர் சிலை அருகே  . மாபெரும் கண்டன போராட்டமும் மனித சங்கிலியும் நடைபெற்றது.





15 செப்., 2012

முகநூலின் கடலூர்-பரங்கிபேட்டை திண்ணை குழுமம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, செப்டம்பர் 15, 2012 No comments

முகநூலின் கடலூர்-பரங்கிபேட்டை திண்ணை குழுமம் சார்பாக கடலூர் மற்றும் பரங்கிபேட்டையில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் விபத்து விழிப்புணர்வு குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது,இதற்கான ஏற்பாடுகளை திண்ணை அமைப்பாளர் யாசின் அவர்களில் ஆலோசனைப்படி தமீம்,ஹம்துன் அஷ்ரப்,அப்துல் பாசித்,ஜமால் மரைக்காயர்,வலீத்,மதார்ஷா பைசல் மற்றும் திண்ணையின் உறுப்பினர்கள் மேற்கொண்டனர். 

2 செப்., 2012

பயங்கரங்களின் நிழலில்

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, செப்டம்பர் 02, 2012 No comments



குஜராத் இனப்படுகொலையை நிகழ்த்திய நரேந்திர மோடியின் அடியாட்கள் 116 பேருக்கு கடுமையான தண்டனைகளை நீதிமன்றம் அளித்துள்ளது. இந்த படுகொலைகளை நடத்தியவர்களில் ஒருவரான மாயாபேன் கோட்னானிக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த நரேந்திர மோடி, பஜ்ரங் தளத்தின் பாபு பஜ்ரங்கி ஒரு அமைச்சருக்கு இனையான அந்தஸ்துடன் தான் இந்த தீர்ப்பு வரும் வரை வலம் வந்தார். குஜராத 2002 தெகல்காவின் புலனாய்வு வெளிவந்த போது அதற்கு நான் எழுதிய முன்னுரையை இங்கே பகிர்கிறேன்.............................

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான நாட்களாக நினைவு கொள்ள வேண்டியவை – அக்டோபர் 25,26, 2007. இந்த இரு நாட்களும் பல செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்ட காட்சிகள், ஒரு நாட்டையே கொஞ்சம் கொஞ்சமாக மவுனத்தில் உறையச் செய்தது. 2000 முஸ்லிம்களை கொன்று குவித்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தியவர்கள், முதல் முறையாக காமிராக்கள் முன் தோன்றி பெருமிதம் பொங்க – தங்களின் செயல்களை துல்லியமாக விவரித்தார்கள். அரசு அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், பா.ஜ.க தலைவர்கள், பஜ்ரங் தள் தொண்டர்கள் எனப் பலரும் கொலைகாரர்களில் அடக்கம்.
இந்த குற்றங்களின் பாதுகாவலர்களான தில்லி பா.ஜ.க. தலைவர்கள் கமுக்கமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், காங்கிரஸ் ஏன் அமைதி காக்கிறது? இந்த கொலைக்காரர்களில் பலர் தற்பொழுது காங்கிரஸ் கட்சியின் பெரும் பொறுப்புகளில் உள்ளதாலா? அல்லது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர், கோத்ரா இனப்படுகொலையிலேயே பங்கு கொண்டதாலா? இல்லை எனில் இவர்களின் மவுனம், துல்லியமான சமிக்ஞைகளை கொண்டிருக்கிறதா?
’தெகல்கா’வின் அரிய புலனாய்வு பற்றி நாடாளுமன்றத்தில் பேசியவர்கள் இடதுசாரிகல், லாலு பிரசாத், மாயாவதி ஆகியோர் மட்டுமே. மனித உரிமை ஆர்வலர்கள், அறிவுஜீவிகள் என இந்த சமூகத்தின் ஒரு சிறிய பகுதி பேசியிருக்காவிட்டால், மொத்தத்தில் இந்த புலனாய்வுகள் கரைந்து போயிருக்கும் ஊடகங்கள் கூட மேலோட்டமாகப் பேசிவிட்டு, வேறு கதைப்புகள் நோக்கிச் சென்று விட்டன. அதிலும் பலர் தொடர்ந்து தெகல்கா’வின் இந்த பாணி இதழியலை வசை பாடத் தவறவில்லை. ஊடகங்களுக்கு இன்று அரசு மற்றும் இந்திய – வெளிநாட்டு முதலாளிகளின் தயவின்றி வாழத் தெரியாது. தனித்துவமான ஒரு வாழ்க்கையை தீர்மானித்த தெகல்கா’வால் எந்தத் தயக்கமுமின்றி – அதிகாரங்களுக்கு எதிராக துணிவுடன் உரக்க பேச முடிகிறது.
ஆயுத போர ஊழல், சாகிரா ஷேக், ஜெசிகா லால், சஞ்சய் தத், மோடியின் போலி என்கவுன்டர்கள் என 25- க்கும் மேற்பட்ட மறைக்கபட்ட உண்மைகளை வெளிக்கொணர முடிந்தது. இது போன்ற இதழியலாளர்கள் இல்லையென்றால், மெல்ல மெல்ல ஒரு நிலப்பரப்பின் மக்கள் சமூகம் அடிமைகளாக உருமாற்றம பெரும் என்பதில் சந்தேகம் இல்லை. மறுபுறம் நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களை, போராடுபவர்களை இந்த நாடு அடையாளம் காண மறுக்கிறது. கிரிகெட் விளையாடும் சச்சின் தேண்டுல்கர் உலகப் பிரபலம். ஆனால், தன் உயிரை பணயம் வைத்து குஜராத் இனப்படுகொலை தொடர்பான வழக்குகளை 5 ஆண்டுகளாக நடத்தும் தீஸ்தா செதல்வாத்தை, ஏன் ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை? ஒரு மாபெரும் நாகரீகம், வளரும் பொருளாதாரமாக, மட்டுமே சுருங்கிப்போனது.
தெகல்கா’ புலனாய்வு உண்மைகள் வெளிவந்ததும் உலகம் முழுவதிலிருந்தும் குடிமைச் சமூகத்தின் குரல்கள் உருப்பெறத் தொடங்கின. உயிரைப் பணயம் வைத்து ஆறு மாதங்கள் புலனாய்வை மேற்கொண்ட ஆஷிஷ் கேத்தன் மற்றும் தெகல்கா’ குடும்பத்தினருக்கு – வழக்கறிஞர்கள், சட்டநிபுனர்கள், எழுத்தாளர்கள், போராளிகள் என பெருங்கூட்டம் பாராட்டுகளை தெரிவித்தார்கள். நம் காலத்தின் உண்மையான நாயகர்களாக இவர்கள் திகழ்கிறார்கள். ஆம், அதிகாரத்துக்கு எதிராக கலகம் செய்யும் வீரர்கள்.
வேறு வகையில் பார்த்தால், இது யார் செய்திருக்க வேண்டிய வேலை? 2002 பிப்ரவரி இறுதியில் இனப்படுகொலை நடத்தப்பட்டது. அடுத்த ஆறுமாத காலத்தில் விசாரனைகள் நிகழ்ந்து, மறு விசாரணையும் நடந்து நவம்பர் 2003 வாகிலாவது அரசாங்கம் தனது தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும். இந்த தெகல்கா’வின் வாக்குமூலங்களை குஜராத் காவல்துறை அல்லவா பெற்றிருக்க வேண்டும்? இது போன்ற இனப்படுகொலைகளை செய்து வரும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மறுபுறம் ‘பண்பாட்டுக் காவலர்”களைப் போல வலம் வருகின்றன. குருதி தோய்ந்த கரங்களால் கடவுளை தொழுதல், தேர்தலில் முழக்கமிடுதல் என ஒப்பனைகளை கச்சிதமாய் தொடர்கின்றன.
இவ்வளவு கொடூரங்கள் ஆதாரங்களுடன் வெளிவந்த பிறகும், மீண்டும் நரேந்திர மோடி வெற்றி வாகை சூடி பதவியில் அமர்ந்திருக்கிறார். இதில் வியப்படைவதற்கு ஏதும் இருக்கிறதா? எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. மதவாதத்தை கொள்கையாகக் கொண்டவர்கள், குஜராத் சமூகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக தங்கள் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அதற்கான சூழலை உருவாக்கி வருகிறார்கள். பால்வாடிகள், பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், மருத்துவமனைகள் என அவர்களின் கரங்கள் நுழையாத இடமேயில்லை. 1985 முதல் நரோடாவிலும் கேதாவிலும் ஆயுதப்பயிற்சியளிக்கும் ‘ஷாகா’க்களை ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து நடத்தி வருகிறது. லத்தி கம்புகளை எறிந்துவிட்டு அவர்கள் தானியங்கி துப்பாக்கிகளை கையில் பிடித்து, இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த வன்ம முகாம்களில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள், அடுத்த கட்டமாக இந்த முகாமில் பங்கு கொண்டவர்கள், குஜராத் அரசின் பல்வேறு துறைகளிலும் பணியில் அமர்த்தப்பட்டாட்கள். தெகல்கா’ வாக்குமூலங்களில் வரும் அனைவரும் இந்த வதை முகாம்களின் அங்கத்தினரே, ஆயுதங்களை வழங்கும் காவல் துறையினர், கொலைக்காரர்களுக்கு ஆதரவாக செய்ல்படும் அரசு வழக்கறிஞர் எனப் பல வேடங்களை அவர்கள் ஏற்றிருக்கிறார்கள். இந்த மரண வியாபாரிகளுக்கு இந்திய முதலாளிகள் பக்கபலமாய் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்பானி, ரத்தன் டாடா என இப்பெரும் படை மோடியுடன் அளவளாவியதை நாம் தொலைக்காட்சிகளில் கண்டோம். ஆர்.எஸ்.எஸ்.க்கு பெரும் நிதி வழங்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும், இந்திய முதலாளிகளுக்கும் தெகல்கா இந்த வாக்குமூலங்களின் தனியான திரையிடலை ஏற்பாடு செய்யலாம்.
சமூகத்தில் விதைக்கபட்டுள்ள இந்த நஞ்சை எப்படி அப்புற்ப்படுத்துவது? தேர்தலுக்குத் தேர்தல் பா.ஜ.க. வை உக்கிரமாய் எதிர்த்து முழுக்கம் போட்டால், மதவாதம் அழிந்துவிடுமா? மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் ஊடக புகைப்பட வெளியீட்டால் நிறைவுறுமா? மதச்சார்பின்மை பேசுகிறவர்கள் மதவாத்த்தை மிகவும் தட்டையாக புரிந்து கொண்டுள்ளார்களா? மதவாத்த்தை எதிர்ப்பதற்கான பண்பாட்டுத் தளத்திலான வேலைதிட்டம் ஏன் உருவாக்கபடவில்லை? கே.என்.பனிக்கர், தீஸ்தா செதல்வாத், ராம் புனியானி போன்று மனதின் அடியாழத்தில் இருந்து தொட்ரந்து பேசுபவர்களின் வார்த்தைகளை நாம் வீணடித்து  விட்டோமா? சாதி ஒழிப்பில் முனைப்பில்லாத்தால் தான், மத எதிர்ப்பை பெயரளவில் நிறுத்திக் கொள்கிறோமா? எத்திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் நாம்? மதவெறியின் ஆபத்தை உணராத பெரியாரின் வழித்தோன்றல்களாக கருதிக்கொள்ளும் திராவிடக் கட்சிகள், கூச்ச நாச்சமின்றி மாறி மாறி பா.ஜ.கா.வை தோளில் சுமந்து தமிழகத்தில் வளர்ப்பது சரிதானா?
இந்த தெகல்கா ஆவணங்களின் வாயிலாக மதவெறியின் உண்மை முகத்தை நேரில் காணும் அரிய வாய்ப்பு மீண்டும் நமக்கு கிடைத்திருக்கிறது. காலம் கனிந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரதிகள் கம்பீரமாய் வலம் வரும் போராசிரியர் பந்துக்வாலா, காவல் துறை அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோர் நம்பிக்க்கின் தூதுவர்களாகத் திகழ்கிறார்கள், இஷான் ஜாப்ரியின் துணைவி சக்கரியா ஜாப்ரி, தெலகாவின் இந்த பதிவுகளுடன் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக்கொண்டிருக்கிறார். கோத்ராவில் இனப்படுகொலை செய்யபட்ட 2000 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், அகதிகளாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 2 லட்சம் முஸ்லிம்களின் வாழ்க்கை மீட்டெடுக்கபட வேண்டும்.           நன்றி;http://amuthukrishnan.com










30 ஆக., 2012

செய்தி-63

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், ஆகஸ்ட் 30, 2012 No comments


“166 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்பு” இதுதினமலரின் இன்றைய சுவரோட்டி வாசகம். இதழின் முதல் பக்க தலைப்புச் செய்தியில் “மும்பையை உலுக்கிய கசாப்புக்கு தூக்குத் தண்டனை உறுதி”என்று கொட்டை எழுத்தில் போட்டிருப்பதோடு, தண்டனையை வரவேற்று பா.ஜ.க மட்டுமல்லாமல் பல்வேறு தலைவர்கள் கூறியிருப்பதை செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அதாவது தேசத்தின் ஒட்டு மொத்த கருத்தாம் இது.
நடுப்பக்கத்தில் கசாப்பை தூக்குக்கயிறோடு படமாக போட்டிருக்கும் தினமலர் இந்த வழக்கு வந்த பாதையை காலக் குறிப்போடு விளக்கமாக போட்டிருக்கிறது. கசாப் தூக்கு என்பது மேலோட்டமாக செய்தியாக மட்டுமல்லாமல் ஒரு ஆவணம் போன்று வாசகர் மனதில் பதிய வேண்டும் என்பது தினமலரின் அவா. அநேகமாக இன்றைய தினசரிகள் பல பெரும்பான்மை இப்படித்தான் வெளியிட்டிருக்கின்றன.
முதல் பக்க கசாப் செய்திக்கு மேலே வேளாங்கண்ணி கொடியேற்று விழாவை போட்டிருப்பதன் மூலம் தினமலர் தனது சர்வமத நேயத்தை வெளிப்படுத்துவதாக காட்டுகிறது. ஆனால் அது பொய் என்பதற்கு அது முன்னிலைப்படுத்தாமல் விட்ட ஒரு செய்தி உண்டு. கசாப்புக்கு ஒரு பக்கத்தை ஒதுக்கிய தினமலர் குஜராத் கலவரம் குறித்த நரோடா பாட்டியா கொலை வழக்கு தீர்ப்பை 13 ஆம் பக்கத்தில் காலரை பக்க செய்தியாக பத்தோடு ஒன்றாக வெளியிட்டிருக்கிறது.
தலைப்பு என்ன தெரியுமா? “மாஜி அமைச்சர் உட்பட 32 பேர் குற்றவாளிகள்”. கசாப் செய்தி பாணியில் வெளியிடுவதாக இருந்தால், “97 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்புத் தீர்ப்பு”என்றல்லவா வெளியிட்டிருக்க வேண்டும்? கசாப் மீதான தீர்ப்புக்கு முழு இந்தியாவுமே வரவேற்பதாக காட்டிய தினமலர் இந்த செய்தியில் தீர்ப்பை வரவேற்பதாக யாருடைய கருத்தையும் சொல்லவில்லை. ஏனெனில் தினமலருக்கே கூட இந்த தீர்ப்பு பிடிக்கவில்லை எனும் போது என்ன செய்ய முடியும்?
கசாப்புக்கு தூக்குக்கயிறு போட்ட படத்தை போட்ட தினமலர் இங்கு குடும்பப் பெண் போன்ற அடக்கத்துடன் சோகமாக நடக்கும் கோட்னானி படத்தை வெளியிட்டிருக்கிறது. நரோடா பாட்டியாவில் கொல்லப்பட்ட ஒருவரது படம் கூடவா தினமலரிடம் இல்லை? மற்றபடி இந்த தீர்ப்பினால் பா.ஜ.க, மோடிக்கு பின்னடைவாகவெல்லாம் தினமலர் நினைக்கவில்லை. அதனால் இந்தச் செய்தியில் அந்த இதழின் கருத்தாக ஒன்றுமில்லை.
இணையத்தில் தினமலரின் தலைப்பு என்ன தெரியுமா? ” பயங்கரவாதி ‘ கசாப் ’ கடைக்கு போகிறார்; சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உறுதி செய்தனர் !“  இதே போன்று பாபு பஜ்ரங்கிக்கும் தலைப்பு கொடுப்பார்களா? பொதுவில் கசாப்பு கடை யார் வைத்திருப்பார்கள்? தினமலரின் கொண்டாட்டத்தை இதை விட சிறப்பாக எந்த தலைப்பும் கொடுத்துவிடாது.
தூக்குக் கயிற்றில் தொங்கும் கசாப்பின் படத்தோடு “கசாப் தூக்கு தண்டனை உறுதி” என்று தலைப்புச் செய்தியாக தினமணியும் வெளியிட்டிருக்கிறது. இங்கும் வழக்கு கடந்து வந்த பாதை, தீர்ப்பை வரவேற்ற தலைவர்களின் கருத்து எல்லாம் உண்டு. ஆனாலும் தினமணி ‘நடுநிலை’ பத்திரிகையாக காட்டிக் கொள்ள வேண்டுமென்பதால் முதல் பக்கத்தின் கீழேயே நரோடா பாட்டியா வழக்கு தீர்ப்பு குறித்த செய்தியும் வெளிவந்திருக்கிறது.
“கரசேவகர்கள்” கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரம் என்று ‘வரலாற்றை’ கவனமாக ஆரம்பிக்கிறது தினமணி. வி.இ.பரிஷத் நடத்திய பந்தில் ஒரு கும்பல் நடத்திய வன்முறையில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாக எச்சரிக்கையாக தெரிவிக்கிறது. இந்தத் தீர்ப்பை வரவேற்று இரு காங்கிரசு தலைவர்கள் கூறியதை வெளியிட்டிருக்கும் தினமணி, பா.ஜ.கவிற்கு இது பின்னடைவாக இருக்குமென்று கருதப்படுவதாக கூறுகிறது. யார் அப்படி பின்னடைவு என்று கருதுகிறார்கள்? நிச்சயம் தினமணி இல்லை என்பதால்தான் அந்த படுகிறது எனும் அனாமதேய முகம்.
இதெல்லாம் கூடப் பரவாயில்லை. இந்தச் செய்திக்கு தினமணி போட்டிருக்கும் படம் என்ன தெரியுமா? “நரோடா பாட்டியா கலவர வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, தன் மகளைக் கண்டு கண்கலங்குகிறார்” என்ற வரிகளுடன் ஒரு படம். போலீசு வாகனக் கம்பி வலைக்குள்ளே அழுதுகொண்டிருக்கும் தந்தை; கம்பியை எட்டிப்பிடித்தபடி அப்பாவைப் பார்த்துக் கலங்கும் ஒரு சிறுமி. நரோடா பாட்டியாவில் 97 முசுலீம்கள் கொல்லப்பட்ட கொடுமையை மறக்கச் செய்ய இந்த படம் ஒன்றே போதும்.
பார்ப்பவர்கள் அந்த சிறுமியின் கதறலில் இந்து தர்மத்திற்காக சிறைக்குச் செல்லும் அந்த ‘தியாகி’யை நினைத்து வருந்துவது உறுதி.
பஜ்ரங் தள் தலைவரலான பாபு பஜ்ரங்கி சிறைக்குச் செல்லும் போது தனது கட்டை விரலை உயர்த்தி இறுமாப்புடன் செல்கிறார். இன்னும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், முக்கியமாக தேசத்தின் மனசாட்சி, தினமணி, தினமலர் போன்ற ஊடகங்களின் காவி ஆதரவு….. எல்லாம் இருக்கையில் அவர் ஏன் வருந்த வேண்டும்?
கசாப்புக்கு தண்டனை அளிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் கசாப்பின் நிழலில் ஒரு கொலைவெறிக் கூட்டம் அனைவரது ஆதரவோடு பதுங்கிக் கொள்வதைத்தான் அம்பலப்படுத்துகிறோம். தினமணி , தினமலரும் அந்தக்கூட்டத்தில் இருப்பது எத்தனை பெருக்குத் தெரியும்?



நன்றி;http://www.vinavu.com

ரத்தம் குடிக்கும் புத்தம்!

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், ஆகஸ்ட் 30, 2012 No comments


புத்தத்தை பூசிக்கும் தேசங்கள் ரத்தங்களையும் குடிக்கின்றன என்றால் அக்குருதியின்   பிரதிபலிப்பு சிங்களத்தையும் பர்மியத்தையும் நோக்கியதாக தான் இருக்கும்.சிங்களம்  இனத்தின் பேரால் மனிதனை புதைக்கிறது என்றால், பர்மியமோ மதத்தின் பேரால்  மனிதத்தை உடைத்து படுகொலைகளை புரிகிறது.

இலங்கையில் தமிழர்கள் வந்தேறிகளால் கொல்லப்படுகின்றனர்,பர்மாவில் வாழ வந்த  முஸ்லிம்கள் பர்மிய ராணுவம்-புத்த பிக்குகளால் கொல்லப்படுகின்றனர்.இரு நாட்டிலும்  பௌத்த வெறி ஓங்கி உள்ளது. அது தன் தாக்கும் விதத்தை மட்டும் இனம்-மதம் என  பிரித்துக்கொண்டுள்ளது.

கடவுள் இல்லை என்ற புத்தனை கடவுளாக்கி, அதை ஓர் மதமாக்கி, அதன் பெயரில்  ஏன் தான் இவ்வளவு படுகொலைகளோ ?
உலகின் கறுப்புச் சரித்திரத்தில் கடந்தகாலத்திலும், நிகழ்காலத்திலும்,  மதக்கோட்பாட்டால் நிகழ்ந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய படுகொலைகளின் பூர்வீகம் தான்  பர்மா.

பர்மா ராணுவ ஜனநாயகவாதிகளால் ஆளப்படும் நாடு...தேசியமயமாக்கப்பட்ட நதிகள்.  அதனால் இயற்கையில் வறுமை என்பதே இல்லை.தொழில்நுட்பத்தில் பின்தங்கிய  தேசம்.இந்தியாவை போலவே பல மொழி பேசும் இனத்தவர் உள்ள நாடு.ஆனால்  அம்மக்களுக்கென சுயாட்சி இல்லை; பர்மியர்களுக்கு கீழ் நிலையில் இருக்கும் கூட்டாட்சி  நிலை தான்.
சூகியே குரல் எழுப்புவதில்லை 

இவர்களின் கோட்பாடும்,வேற்றுமைக்குள் ஒற்றுமை தான்.ஆனாலும் சர்வதேச அளவில்  பின்னோக்கியுள்ள நாடுதான் அன்றைய பர்மாவும், இன்றைய மியான்மரும். பர்மா  என்றால் நமக்கு தெரிவதெல்லாம் 'ஆங் சாங் சூகி'மட்டுமே.அந்த சூகியே மாற்று  மத-இனத்தவர்களின் படுகொலைகளுக்கு பெரிதாக குரல் எழுப்புவதில்லை என்கிறபோதே  சூகியின் ஜனநாயக தத்துவம் பொய்பிக்கிறது.

சூகி பர்மிய இனத்துக்கு நல்ல தலைவர்; ஆனால் பர்மியத்தின் அனைத்து இனத்தவருக்கும்  நல்ல தலைவரல்ல...அப்படியிருந்தும் சூகியை நம்புகிறார்கள் வதைபடும் அம்மக்கள்.

பர்மாவின் இப்படுகொலைகளில் அதிகபடியாக சிக்குவதெல்லாம் முஸ்லிம் மதத்தவர்கள்  தான்.இன்றைய காலக்கட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக முஸ்லிம்  மதத்தவர்களுக்கு எதிரான படுகொலைகளே பர்மாவில்  விடாமல் நிகழ்ந்து   கொண்டேயுள்ளன.
முகமறியா  எந்தயொரு தேசத்திலோ குண்டு வெடித்தால் கூட, அது முஸ்லிம்தான்  வைத்திருப்பான் என்பதே சர்வதேச கணக்கீடுகள்.அக்கணக்கீடை இவ்வுலகம் நிர்ணயித்துக்  கொண்டதால், எந்தயொரு முஸ்லிம் கொல்லப்பட்டாலும் சர்வதேச சமூகம்  அலட்டிக்கொள்வதில்லை.

பர்மிய சுதந்திரத்துக்கு முன்பே, இரண்டாம் உலகப்போரின் ஜப்பானிய  ஆக்கிரமிப்பின்போது பர்மிய-ஜப்பானிய ராணுவத்தால் 28 மார்ச்  1942 ம் ஆண்டு சுமார்  5,000 முஸ்லிம் மக்கள்  கொல்லப்பட்டனர்.
அன்றிலிருந்து தொடங்கிய வெறி இதுவரை 20,000 முஸ்லிம்களை கொன்றுள்ளது;  4,000 குடும்பங்களை அழித்தும், எரித்துமுள்ளது;300 மசூதிகளை மூடியுள்ளது;பல  லட்சம் மக்களை பர்மாவை விட்டு துரத்தியடித்துள்ளது.

பர்மிய முஸ்லிம்கள் 'ரோஹிங்க்யாஸ்' என்றழைக்கப்படுகின்றனர்.ஐ.நா.வின்  கணக்கெடுப்புபடி இவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சம்.இவர்கள் அதிகபடியாக  பங்களாதேஷ்-பர்மா எல்லையோரங்களில் வாழ்கின்றனர்.பல நூறாண்டுகளாக வாழும்  இந்த பர்மிய முஸ்லிம்களுக்கு பர்மாவில் குடியுரிமை கிடையாது.தங்கள் விருப்பத்திற்கு  திருமணம் செய்ய அனுமதியில்லை,கல்வியும் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றது.
கொலைகார புத்த பிக்குகள்
இவர்களது குழந்தைகள் கொத்தடிமைகளை போல் சிறு ஊதியத்துக்கு குழந்தை  தொழிலாளிகளாக்கப்படுகின்றனர்.பர்மாவில் பல்லாண்டுகளுக்கு குடியேறிய இவர்கள்  இன்னமும் அகதியாக தான் வாழ்கின்றனர்.சுற்றுலா சொர்க்கமாகவுள்ள இந்நாடு,  முஸ்லிம் சுற்றுலாவாசிகளை அனுமதிக்க மறுக்கிறது;மீறினால் அது கொலை  சுற்றுலாவாகத்தான் முடியும்.

இக்கொலைகளை நிகழ்த்துவது எல்லாம் பர்மிய ராணுவமும், புத்த பிக்குகளுமே. இவர்கள்  கூற்றுபடி பர்மா புத்த மதத்தவர்களுக்கானது,புத்தத்தை தழுவாதவர்கள் தீயவர்கள்  ...கடவுள் இல்லை என்றால் அவர்கள் புத்த மதத்துக்கு எதிரானவர்கள்.இங்கு புத்த  மதத்துக்கு  அடுத்தப்படியாக மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பது இந்து  மதத்தவர்கள்.ஆனால் இந்து கோவில்களிலும் கூட ஒரு புத்த சிலை இருக்குமாம்.  அப்படியிருந்தால் தாக்க வரும் பர்மிய ராணுவமோ-புத்த பிக்குகளோ 'நம் மதத்தின்  மீது  பற்றோடு இருக்கிறார்கள்' என திரும்பி சென்றுவிடுவார்களாம்.

ஆனால் பர்மிய முஸ்லிம்களோ ஓர் பாவ பிறவிகளாக, அப்பாவிகளாக  வதைப்படுகின்றனர்.இது போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து சில முஸ்லிம் போராளி  குழுக்களும் உள்ளன.இவர்களை பார்த்த இடத்தில் கொல்லலாம் என்று அறிவிப்பும்  உள்ளது.ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் எவரையும் ராணுவ ஜனநாயகம்  அனுமதிப்பதில்லை.

பர்மாவில் 20 லட்சத்திற்கும் மேலாக உள்ள தமிழர்களுக்கும் சுயமான சுதந்திர  வாழ்வில்லை-அவர்களும் புத்தத்துக்கு மாறிய பர்மியர்களாகவே வேடமிட்டு  வாழ்கின்றனர்.

புத்தனை போதிக்கும் தேசங்கள்  மனிதத்தை புதைத்து ரத்த வெறியோடு  திரிகின்றன.இவர்களுக்கு புத்தரின் வாக்கு ஏற்றதாக இருக்கும் "ஆசையால் வெற்றி  பெற்றவன் அந்தப் போதையால் தவறுகள் செய்து அழிவைத் தேடுவான்.ஆனால்  தன்னடக்கம் உள்ள மனிதன் அறிவுடன் சிந்தித்து எப்போதுமே இன்பமாக  வாழ்ந்திடுவான்"!

சில புத்த தேசங்கள் சிந்திக்காமல் ஆசை போதையில் உள்ளன;இவர்கள் ஒரு நாள்  அவர்களாகவே அழிவை தேடுவார்கள்..புத்தரின் வாக்கு போலவே !

                                                                              நியூஸ்விகடன்                                                    நன்றி;         -மகா.தமிழ்ப் பிரபாகரன்

26 ஆக., 2012

புதுச்சத்திரம் அருகே நேற்று காலை எல்.கே.ஜி. மாணவி கார் மோதி மரணம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012 No comments


கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில் (விவசாயி). இவரது மகள் செவ்விழி (வயது 4). பரங்கிப்பேட்டை அருகே மடவாபள்ளத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். தினமும் வேனில் பள்ளிக்கு சென்று வந்தாள். இன்று காலை 8 மணிக்கு பள்ளிக்கு செல்வதற்காக ஆலப்பாக்கத்தில் பள்ளி வேனுக்காக மற்ற மாணவிகளுடன் காத்து நின்றாள்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் நிலை தடுமாறி தாறுமாறாக ரோட்டில் ஓடியது. அதைப்பார்த்து மாணவ- மாணவிகள் அலறி அடித்து ஓடினார்கள். ஆனால் மாணவி செவ்விழி மீது அந்த கார் மோதியது. இதில் அவள் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தது . உடனே கார் அங்கிருந்து வேகமாக சென்று விட்டது. செவ்விழி இறந்த தகவல் அறிந்து அவளது பெற்றோர் அங்கு விரைந்து வந்தனர். பள்ளிக்கு புறப்பட்டு சென்ற மகள் பிணமாக கிடந்ததை கண்டு கதறி அழுதனர்.

இது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் பற்றி புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் பிணம் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர். சிறுமியின் உடலை பார்த்து கதறி அழுதார்கள். அப்போது சிறுமியின் தலை அசைந்ததாகவும் அவள் உயிரோடு இருக்கிறாள் பரிசோதிக்க வேண்டும் என்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் உறவினர்கள் தெரிவித்தனர்.

சிறுமியை காப்பாற்று... காப்பாற்று... என்று இறைவனிடம் வேண்டினார்கள். உடனே அங்கு விரைந்து வந்த மருத்துவர்கள்  சிறுமியின் உடலை பரிசோதனை செய்தனர். சிறுமி இறந்து விட்டாள் என்று உறவினர்களிடம் நர்சுகள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் வேதனையோடு பிணவறையை விட்டு வெளியே சென்று கண்ணீர் விட்டு கதறினார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமி மீது மோதிவிட்டு சென்ற காரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

18 ஜூலை, 2012

பெரம்பலூர் நகரையே தினரடித்த கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூலை 18, 2012 No comments


ஷரியத் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டுவரும் பெரம்பலூர் கலெக்டர் தரேஷ் அஹமது, ஆர்டிஓ ரேவதி மற்றும் சமூக நலத்துறை அலுவலர் பேச்சியம்மாள் ஆகியோரை கன்டித்து அனைத்து  கட்சி மற்றும் அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 17.07.12 அன்று மதியம் 3.00 அளவில் பெரம்பலூர் பேருந்து நிலையம் எதிரிலுள்ள நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஹைதர் அலி - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், இஸ்மாயில் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, பாக்கர் - இந்திய தவ்ஹீத் ஜமாத் ஆகியோர் உள்பட பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம் பாக்கர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஷரியத் சட்டத்தை காக்க முஸ்லிம்கள் எதையும் செய்வார்கள், தேவையென்றால் ராணுவத்தினர் போன்றும் செயல்படுவார்கள் என்று அரசு அதிகாரிகளை எச்சரித்தார். தமுமுக தலைவர் ஹைதர் அலி பேசும்போது சுப்ரீம் கோர்டே கூறிவிட்டது முஸ்லிம்களின் திருமண வயது 15 என்று அதனால் முஸ்லிம்கள் யாரும் 15 வயதிற்கு மேற்பட்டோர்களின் திருமணத்திற்காக பயப்படவேண்டாம். உங்களுக்கு பயமிருந்தால் இந்த கூட்டமைப்பை அழையுங்கள் எங்கள் சார்பாக 15வயது முதல் 18வயது வரை உள்ள முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்றார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலமாக விடுக்கப்பட்ட கோரிக்கைகள் :

1.ஷரியத் சட்டத்திற்கு எதிராக எந்த அதிகாரிகள் செயல்பட்டாலும் இந்த கூட்டமைப்பு அந்த அநீதிக்கு எதிராக போர்க்குரல் கொடுக்கும்.

2.முஸ்லிம்களுக்கான தணிஇடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.

3.காப்பத்திலுள்ள மணப்பெண் யுரேஷா பேகம் மற்றும் சிறையிலுள்ள மணமகன் சாகுல் ஹமீது ஆகியோரை உடணடியாக விடுவிக்க வேண்டும்.

4. 15-18 வயது வரை யாருக்கேனும் திருமணம் செய்யவேண்டுமானால் இந்த கூட்டமைப்பின் தலைமையிலேயே திருமணம் நடத்தி வைக்கிறோம்.

ஆகிய கோரிக்கைகள் விடுக்கபட்டன.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர்,அரியலூர்,திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை,மதுரை,திருச்சி,சேலம்,கடலூர்-பன்ருட்டி, வேலூர், லால்பேட்டை மாவட்ட இஸ்லாமியர்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கூடினார்கள். பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கூடி ஆர்ப்பாட்டம் செய்வது பெரம்பலூருக்கு இதுவே முதல்முறை என்பதால் பெரம்பலூர் பேருந்து நிலைய பகுதியே பரபரப்பாகவும் போர்க்களம் போன்றும் காட்சியளித்தது. சுமார் மாலை 5.30 அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த அனைத்து பகுதி மக்களுக்கும் குறிப்பாக கட்சி மற்றும் அமைப்பை சார்ந்தவர்களுக்கும் கூட்டமைப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.



நன்றி:http://www.vkalathur.net/

ஷாருக்கானும் அடையாள அரசியல் வேட்டையும்

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூலை 18, 2012 No comments



1968ல் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகம் Chubb Fellowshipஐ முதல் முதலாக அமெரிக்கர் அல்லாத ஒருவருக்குக் கொடுத்தது. அவர்தான் அறிஞர் அண்ணாதுரை. சில வாரங்கள் முன்பு  அதே  யேல் பல்கலைக்கழகத்தின் Chubb Fellowshipஐப் பெற்றுக் கொண்டு உரை நிகழ்த்த புறப்பட்டார் ஹிந்தி நடிகர் ஷாருக்கான். தனியார் விமானம் ஒன்றில் அவர் அமெரிக்காவின் வைட் பிளையின்ஸ் விமான நிலையத்தில் இறங்கினார். அவருடன் நீதா அம்பானி உள்பட பல தொழில் அதிபர்கள் பயணித்தனர். அந்த விமான நிலையத்தின் சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் உடனே சோதனைகளை முடித்து அனுப்பினார்கள். ஷாருக்கான் என்கிற இஸ்லாமியப் பெயரை இவர் கொண்டிருப்பதால் இவரை மட்டும் இரண்டு மணி நேரம் விசாரித்தார்கள், இந்தியத் தூதரகம் தலையிட்ட பின்புதான் அனுப்பினார்கள். உடனே இந்திய ஊடகங்கள் எங்கும் நெருப்பு கொப்பளிக்கத் தொடங்கியது.

அடுத்த நாள் அதிகாலை பல நாளிதழ்களில் இதுதான் தலைப்புச் செய்தி. ‘ஆபத்து ஆபத்து’ என்று, எங்கும் கூப்பாடுகள். அமெரிக்காவே மன்னிப்பு கேள் என்றும், மறுபுறம் மன்னிப்பு மட்டும் கேட்டால் போதாது என்றும் அரசு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களில் இருந்து அறிக்கைகள் பறந்தன. எஸ்.எம்.கிருஷ்ணா மாஸ்கோவில் இருந்தபடி வாளைச் சுழற்றினார். ஷாருக்கானை நடத்தியது போல் நாம் இனி அமெரிக்க அதிகாரிகளை இங்கு நடத்த வேண்டும் எனக் கண்டனக் குரல்கள் கிளம்பின. இதனைக் கண்டித்து ‘அப்படி அமெரிக்கர்களை நடத்த வேண்டும் என்பது தவறு., அபிஷ்டு அபிஷ்டு’ என்றது தி ஹிந்து தலையங்கம். அமெரிக்காவை, அமெரிக்க அரசை இப்படி செய்ய வேண்டும் என்று நினைப்பதுவே மகாபாவம் என்று தலையங்கம் கண்ணீர் வடித்தது. வாசிக்கும் இந்திய நகர அதிகாரவர்க்க முட்டாள்கள் அனைவரின் மூளையும் பற்றி எரிந்தது. தீ தீ தீ எட்டுத் திக்கும் தீ.
இது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்காவில் ஷாருக்கான் உள்பட பல ஹிந்தி நடிகர்கள் பல முறை இப்படி நடத்தப்பட்டிருக்கிறார்கள். ‘எனக்குத் தலைக்கனம் ஏற்படும்போது எல்லாம் நான் அமெரிக்கா செல்வேன். அவர்கள் நான் ஒரு பெரும் நட்சத்திரம் அல்ல, ஒரு சாதாரண மனிதர்தான் என்பதை நிரூபித்து எனக்குப் பாடம் புகட்டுவார்கள், என்று ஷாருக்கானே இந்த சம்பவத்திற்கு மாணவர்கள் மத்தியில் உரையாடுகையில் விளக்கமளித்தார். சினிமா நடிகர்கள்தான் அப்படி நடத்தப்படுகிறார்களா என்றால் இல்லை, பலரும் இப்படி அமெரிக்க விமான நிலையங்களில் நடத்தப்படுகிறார்கள் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த விஷயமே. ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்தியப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது நிர்வாணப்படுத்தி பரிசோதிக்கப்பட்ட போதும் நமக்குப் புத்திவரவில்லை. அதன் பிறகு அப்துல் கலாம் ஒருமுறை எல்லா சோதனைகளையும் முடித்து விமானத்தில் ஏறிய பிறகு அவரது ஷூவைக் கழட்டிக் காண்பிக்கச் சொல்லி சில அதிகாரிகள் பணித்தனர். இப்படி நம் ஊரில் பல பில்டப்புகளுடன் வலம் வருபவர்களின் டவுசர்கள் அமெரிக்காவில் கழற்றப்படுவதும் அவர்கள் வடிவேல் போல அப்படியே அதை மெயின்டெய்ன் செய்து வண்டியை ஓட்டுவதும் நமக்கும் சகஜமாகிப் போச்சு.
இது போல் சினிமா நடிகர்கள், பாடகர்கள், கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டும்தான் நடத்தப்படுகிறார்களா? இல்லை, இந்தியாவுக்கு வெளியே பல்வேறு காரணங்களுக்காகப் பயணம் செய்யும் அனைவரையும் சொல்லொணா துயரத்திற்கு ஆளாக்கி பீதியுறச் செய்வதுதான் பல வளர்ந்த நாடுகளின் மோஸ்தராகவே உள்ளது. சமீபத்தில் வளைகுடா நாடுகளில் அங்கு கூலி வேலை, வீட்டு வேலை செய்ய இந்தியாவில் இருந்தும், தெற்காசிய நாடுகளில் இருந்தும் செல்லும் நூற்றுக்கணக்கானவர்களுடன் பல மணி நேரம் விமான நிலையத்தில் பேச, அவர்கள் நடத்தப்படும் விதத்தை நெருங்கி இருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஒவ்வொரு கணமும் அவர்கள் கேவலப்படுத்தப்படுகிறார்கள். அதுவும் வளைகுடா நாடுகளில் விமான நிலையத்தில் பணி புரியும் இந்தியர்களாலேயே துன்புறுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு விமானமும் தரையிறங்கிய சில நிமிடங்களில் எங்கு செல்வது என்று கூட அறியாது கண்ணீருடன் திசைகள் தொலைத்து நிற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் முளைத்தவண்ணம் இருக்கிறார்கள்.
ஆனால் சினிமா நடிகர்கள், பாடகர்கள், கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டும் இப்படி நடத்தப்படும்போது அறிக்கை போர் நடத்திவிட்டு, சில வார்த்தைகள் மன்னிப்பைப் பெற்றுவிட்டு அதன் பின் அமைதியாக இருந்து விடுவது சரிதானா என்கிற கேள்வி அழுத்தமாக எழுகிறது. உலகம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த Racial Profilingஐத் தொடங்கியவர்கள், இப்படி சில வெற்று வார்த்தைகளில் மன்னிப்பு கேட்பது போதுமானதா? இந்த சம்பவத்தில் ஷாருக்கான் சோதிக்கப்பட்டதற்குக் காரணம் அவரது இஸ்லாமியப் பெயர்தான் என்பது உலகம் அறிந்த விஷயம். என் நோக்கம் இஸ்லாமியப் பெயர் உடையவர்களை நாம் இந்தியாவில் எப்படி நடத்துகிறோம் என்பதைப் பற்றி விவாதிப்பது மட்டுமே.
1990கள் முதல் பொடா சட்டம், 1999கள் முதல் தடா சட்டம் இந்தியாவில் யாருக்கு எதிராகப் பெரும்பாலும் பயன்படுத்தப் பட்டது? அந்த சட்டங்களை அதிகாரத்தில் இருந்தவர்கள் நியாயமாகத்தான் பயன்படுத்தினார்களா? இந்த இரு சட்டங்களிலும் நீங்கள் யாரையும் கைது செய்யலாம், எத்தனை ஆண்டுகளும் சிறையில் அடைக்கலாம், அவர்களின் வாக்கு மூலங்களைச் சாட்சியங்களாக ஏற்கலாம்... இப்படி இன்னும் இந்த சட்டத்தின் சிறப்புகளைப் பல புத்தகங்கள் நமக்கு விளக்குகிறது. குஜராத்தில் நரேந்திர மோடி இந்த சட்டத்தை வைத்து என்ன என்ன செய்தார்? நரோடா பாட்டியாவில் 95 பேர் உயிருடன் கொல்லப்பட்டனர். இவர்களைக் கொன்றவர்கள் மீது ஏன் எந்த சட்டமும் பாயவில்லை? உயிருடன் வெட்டிக் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்பி இஷான் ஜாப்ரியை எப்படிக் கொன்றோம் என்று அவர்களே விவரித்தும் இன்று வரை ஏன் எந்த சட்டமும் பாய மறுக்கிறது?
1970களில் அமெரிக்கா தொடங்கி வைத்த இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை இந்தியாவில் 1980களில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சங் பரிவாரங்கள் மிக வெளிப்படையாகவும், காங்கிரஸ் அதனை அப்படியே கைகளில் மதசார்பற்ற உறையை மாட்டிக் கொண்டும் இந்திய சூழலில் உள்வாங்கிக் கொண்டன. இந்தியப் பெரும் ஊடகங்களும் முழுக்க அரசின் ஊதுகுழலாக, அமெரிக்க அடிவருடிகளாக, மேற்கில் இருந்து வரும் அனைத்தையும் அப்படியே ரகம் பிரிக்காமல் பிரச்சாரம் செய்யும் நிறுவனங்களாக மாறின. 1970களின் இறுதியில் பனிப்போரின் பொழுது சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீன்களை யார் உருவாக்கியது? ஆப்கானில் எல்லைப் பகுதியில் இருந்த மதரசாக்களின் பாடத் திட்டங்களில் மாற்றம் கொணர்ந்தது யார்? 1989 வரை நீடித்த இந்தப் போரின்பொழுது ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு யார் நிதி உதவி, ராணுவ தளவாட உதவிகள் அளித்தது? இந்தப் போரில் அமெரிக்கா, பிரித்தானியா, சவூதி அரேபியா, பாகிஸ்தான், இஸ்ரேல், இந்தோனேசியா, சீனா மற்றும் இந்திரா காந்தியின் தலைமையிலான இந்திய அரசின் பங்கு என்ன? யார் இந்த ஒசாமா பின்லேடன்? ஒசாமா எந்தக் காலகட்டத்தில்  ஒரு நாட்டின் தலைவர் போல் அமெரிக்காவின் பெண்டகன் படைகள் பாதுகாக்க அமெரிக்கா முழுவதும் உலா வந்தார்? இப்படி அடுக் கடுக்கான கேள்விகளை உருவாக்குவதும் அதன் விடைகளைக் கண்டடைவதும்தான் அறிவார்ந்த மக்கள் ஊடகங்கள் நாட்டுக்குச் செய்யும் தொண்டாக இருக்க இயலும்.
1990களில் பெர்னார் லூயிஸ் எழுதிய The Roots of Muslim Rage என்கிற புத்தகத்தில் தான் இந்த நாகரீகங்களின் மோதல் சொல்லாடல் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. 1992களில் அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவேல் ஹண்டிங்டன் முன்வைத்த நாகரீகங்களின் மோதல் சித்தாந்தத்தின் பின்னணி என்ன? அவர் 1992ல் நிகழ்த்திய ஒரு கல்லூரிப் பேச்சை எப்படி 1993ல் அமெரிக்க வெளியுறவு துறை தத்தெடுத்தது. அது எப்படி 1996ல் The Clash of Civilisations and the Remaking of the World Order - Samuel P. Huntington என்கிற பெரும் நூலாக விரிவாக்கப்பட்டு வெளிவந்ததன் பின்னணி என்ன?
இந்த சித்தாந்தங்களின் பின்னணியில் அமெரிக்கப் பிரச்சார ஊடகங்களும், ரூபர்ட் முர்டாக் வசம் உள்ள உலக ஊடகங்களும் மேற்குலக மூளைகளைச் சலவை செய்யத் தொடங்கின. இந்தியாவில் சங் பரிவாரங்கள் ஏற்கனவே ஹிந்து அபிமான உணர்வை விதைத்து அதில் இஸ்லாமிய எதிர்ப்பை பல தளங்களில் விதைத்து கச்சிதமாக இங்குள்ள பெரும்பான்மை ஹிந்துக்களை மூளை சலவை செய்துகொண்டிருந்தது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு அல்ல, அது ஒரு ஹிந்து நாடு என்கிற விஷமும் சமமாக இங்கு விதைக்கப்பட்டே வந்தது. இஸ்லாமியர்கள் இங்கு இரண்டாம் பிரஜைகளே என்கிற உணர்வை மூர்க்கத்துடன் முன்வைத்தார்கள். அவர்கள் விரும்பிய இஸ்லாமியராக இருந்ததால்தான் அப்துல் கலாமுக்கு ஜனாதிபதி பதவியைச் சூட்டி மகிழ்ந்தார்கள். கீதை வாசிப்பவராக, சங்கராச்சாரியார் காலில் விழுபவராக சாட்ஷாத் அப்துல் கலாம்  விளங்கினார்.  ஆயிரக்கணக்கில் இஸ்லாமியர்களை  வேட்டையாடிய பொழுது அவர் தனது கண்களை மூடிக்கொண்டார். அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் பகுதி மீனவ சகோதரர்கள் நூற்றுக்கணக்கில் இலங்கை ராணுவத்தால் வேட்டையாடப்பட்டபோது அந்தத் துயர ஓலம் கேட்காது அவர் தனது காதுகளை மூடிக்கொண்டார்.
ஹிந்து அபிமானிகள் தொடர்ந்து இந்த தேசம் இஸ்லாமியர்களால் துண்டாடப்படவிருக்கிறது என ஒரு பயத்தை சதா விதைத்துக் கொண்டு அதில் தங்களின் அரசியல் அறுவடைகளைச் செய்தவண்ணம் இருந்தனர். இந்தியா உடைபடும் என்ற ஓலத்திற்கும் இந்தியாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாறாக, இதை எழுதுபவர்கள் இந்தப் பயத்தைக் காட்டி வெளி நாட்டுவாழ் இந்தியர்களிடம் (NRI) பணத்தைக் கறந்த வண்ணம் உள்ளனர். இவர் களைப் பொறுத்தவரை உடையும் இந்தியா ஒரு பணம் காய்க்கும் மரம்; தங்க முட்டையிடும் வாத்து.
ஜெருசலேத்தில் உள்ள அல் அக்சா மசூதியை இடிக்க இஸ்ரேல் தொடர்ந்து முனைந்து வரும் நிலையில் அவர்களின் முன்னோடிகளான ஆர்.எஸ்.எஸ். இங்கு பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது. யூதவெறியும் ஹிந்து மதவெறியும் தங்களின் பொது எதிரியாக இஸ்லாத்தைக் கருதித்தான் கைகோர்க்கிறது. இந்தக் கூட்டுதான் அணிசேரா நாடுகளின் தலைமையில் இருந்த இந்தியாவை அமெரிக்காவின் ஒரு மாகாணம் அளவிற்கு வெளியுறவுக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்க வழிவகுத்தது. 1992 தொடங்கி இந்தியாவின் பல நகரங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் மாண்டனர். இந்தக் கூட்டணியின் இஸ்லாமிய எதிர்ப்பிரச்சாரத்திற்கு இவை எல்லாம் நல்ல தீனியாக  அமைந்தது.
இந்தியா முழுவதும் உள்ள எல்லா மொழிகளிலும் வெளிவரும் திரைப்படங்களிலும் இஸ்லாமிய எதிர்ப்பு, தீவிரவாதம் என்கிற பெயரில் நம் மீது பிம்பங்கள் தொடர்ந்து வீசப்பட்டன. பாகிஸ்தான் முழுவதும் இஸ்லாமியர்களின் தெருக்களில் ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ளனர் என்பதான சித்திரங்கள் ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் பதிக்கப்பட்டது. நான் லாகூர் நகரத்தில் தெருத் தெருவாக சில தினங்கள் திரிந்தேன். ஆயுதம் ஏந்திய காவல்துறை அல்லது ராணுவ வீரர்களைக் கூட காண இயலவில்லை. பாகிஸ்தானில் உள்ள வறுமையை சொற்களால் சித்தரிக்க இயலாது. அதை விட அங்கும் தினசரி குண்டுவெடிப்புகள் நிகழ்கிறது. பாகிஸ்தான் முழுதும் தீவிரவாதிகள் என்றால் அங்கே யார் குண்டு வைப்பது என்பதை அறிய அங்குள்ள நாளிதழ்களைத் திறந்து பார்த்தால் அது முழுவதும் இந்திய உளவுத் துறை, RAW என்றுதான் விரிவாகக் கூறுகிறது. இங்கு நம் நாளிதழ்களில் ISI புராணம். இரு நாடுகளும்  அப்பாவி மக்களைப் பிணையமாக வைத்து ஆடும் ஒரு சதுரங்க விளையாட்டில் ஈடுபடுகின்றன.
மிக சாதாரணமாக ஆட்டோ ஓட்டும் ஒருவர், மீன் கடை வைத்திருப்பவர், கறிக்கடை வைத்திருக்கும் பாய், ஜவுளிக்கடை வைத்திருக்கும் ஒரு அத்தா என நமக்கு அறிமுகம் இல்லாத இஸ்லாமியர்கள் அனைவரையும் நகரங்கள் தீவிரவாதிகளாகப் பார்க்க பழக்கி வருகிறது. நல்லவேளை, எங்கள் கிராமங்கள் இந்தக் கிருமியால் இன்னும் பீடிக்கப்படவில்லை. இருப்பினும் இந்தியர்களின் மூளையைச் சலவை செய்ய காஷ்மீர், தீவிரவாதம் என்று படம் எடுக்கும் இயக்குநர்களுக்குப் பல இடங்களில் இருந்து பணம் பெட்டிகளில் கைமாறியது. உளவுத்துறை, உள்துறை அமைச்சகம், இந்திய முதலாளிகள் என ஒரு பெரும் கூட்டு நிதி மூலதனம் இஸ்லாமிய வன்முறை பிம்ப உருவாக்கத்திற்குப் பின்னணியில் இயங்குகிறது.
2004 முதல் 2009 வரை நடந்த பல குண்டு வெடிப்புகள் இதே மனநிலையை இன்னும் இறுக்கமாக்கவே உதவியது. இந்தியாவில் ஒரு நவீன மோஸ்தர் உருவாக்கப்பட்டது. ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தால் அதன் செய்தி வெளியாகும் போதே அது இஸ்லாமியர்களின் கைவரிசை என எல்லா செய்தி ஊடகங்களும் எந்த ஆதாரமும் இல்லாமல் அறிவிக்கும். அத்துடன் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் அறிவித்து சில இளைஞர்களை வரிசையாக உட்காரவைத்துக் காட்டுவார்கள். இதில் இரட்டை ஆதாயம். ஒன்று, இப்படி நடந்தாலே அது இஸ்லாமியர்கள் என்று பொதுமக்களுக்கு அடையாளம் காட்டுவது, அடுத்து, பாருங்கள், நாங்கள் நொடிப் பொழுதில் கயவர்களைப் பிடித்துவிட்டோம் என மக்களின் நம்பிக்கையைப் பெறுவது. இந்த நடை முறைகள் எதையாவது நீங்கள் கேள்வி கேட்க முயன்றால் நீங்களும் தீவிரவாதிகள்தான் என எழுத சில ஹிந்துத்துவ கைக்கூலி எழுத்தாளர்கள் தயார் நிலையில் இங்கே.
நாந்தேடு குண்டு வெடிப்புகள், தானே குண்டு வெடிப்புகள், மேலாகாவ் குண்டுவெடிப்புகள், மெக்கா மசூதி வெடிப்புகள் என தொடர் வெடிப்புகள் இந்தியாவை உலுக்கியது. எல்லா வெடிப்புகளிலும் ஒரே நடைமுறைதான். உடனே 20 - 25 இஸ்லாமிய இளைஞர்களைக் கைது செய்வதும் அவர்களை சித்திரவதை செய்வதும்,  குற்றவாளிகளைப் பிடித்துவிட்டோம் என காவல் துறை பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பதும் அச்சு பிசகாமல் நிகழ்ந்தது. இவை எல்லாவற்றுக்கும் பெரும் திருப்பமாக அமைந்தது. இந்தியாவில் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியின் செயல்பாடு. அவர்தான் ஹேமந்த் கர்கரே. அவர் மாலேகாவ் குண்டிவெடிப்பு முழுவதும் ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் சதிவேலை என்பதைக் கச்சிதமாக நிறுவினார். அவர் தாக்கல் செய்த 4000 பக்க அறிக்கை அபிநவ் பாரத், சாத்வி பிரக்ஞயா தாக்கூர், பிரசாத புரோஹித் ஆகியோரின் வரலாற்றை விவரித்தது. கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதைப் போலவே நாந்தேட்டில் ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவருக்குச் சொந்தமான  கிட்டங்கி ஒன்றில் சங் பரிவார் ஊழியர்களுக்கு வெடிகுண்டு செய்யும் பயிற்சி நடந்தபோது ஏற்பட்ட விபத்தால் குண்டு வெடித்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் போலவே தானே குண்டு வெடிப்பின் முடிச்சுகளும் அவிழ்ந்தது. ஹிந்துத்துவ தீவிரவாதத்தை அம்பலப்படுத்திய காரணத்தால்தான் மும்பை தாக்குதல்களின் பின்னணியில் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டார். Who killed Hemant Karkare என்கிற நூலை மகாராஷ்டிராவின் முன்னாள் ஐ.ஜி.முஷ்ரில் எழுதியுள்ளார். அதில் அவர் எவ்வாறு ஹேமந்த் கர்கரேயின் மீது சங் பரிவார் ஒரு கண் வைத்திருந்தது என்பதை விளக்கியுள்ளார்.
அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பிலும் முதலில் பழி பாகிஸ்தானின் லஷ்கர் ஏ தொய்பா அமைப்பின் மீதுதான் போடப்பட்டது. ஆனால் விசாரணையில் மெல்ல ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் உள்ள ஹிந்துத்துவ தீவிரவாதக் குழுக்களின்  செயல் இதில் இருப்பது தெரியவந்தது. அதன்பின் இந்தக் குண்டு வெடிப்பு எப்படி எல்லாம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என்பதை சுவாமி அசீமானந்தா விரிவாக நாட்டிற்கு எடுத்துரைத்தார்.
அடுத்துப் பெரிய அளவில் பேசப்பட்டது சம்ஜவுத்தா எக்ஸ்பிரஸ் வெடிப்புகள். 2008 நவம்பரில் இந்த வெடிப்புகள் நிகழ்ந்தவுடன் லஷ்கர் ஏ தொய்பா, ஜைஷ் ஏ முகமத் குழுக்கள்தான் இதன் பின்னே உள்ளது என அரசு வாய்கிழிய அறிக்கைகள் விட்டு நம் மூளைகளைச் சலவை செய்தது. ஆனால் விசாரணையில் மெல்ல அபிநவ் பாரத் என்கிற அமைப்பும் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி பிரசாத் சிரிகாந்த் புரோஹித் இருப் பதும் தெரியவந்தது. இதே பிரசாத் புரோஹித் தான் மாலேகாவ் குண்டு வெடிப்புகளுக்கு வெடி மருந்து உள்பட தொழில்நுட்ப உதவிகளையும் சாத்வி பிரக்ஞயா தாக்கூருக்கு வழங்கியவர்.
இதே அபிநவ் பாரத் இந்தியாவின் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியைக் கொலை செய்ய தீட்டிய திட்டத்தை ஹெட்லைன்ஸ் டுடே செய்தி ஊடகம் ஆதாரங்களுடன் வெளியிட்டது. ராணுவத்தின் உளவுப் பிரிவுக்கும் அபிநவ் பாரத் அமைப்பிற்கும் நிகழ்ந்த உரையாடல்களின் எழுத்து வடிவை தெகல்கா இதழ் வெளியிட்டது. செப்டம்பர் 16, 2011ல் புதுதில்லியில் நடைபெற்ற அனைத்து மாநில காவல்துறை தலைவர்கள் கூட்டத்தில் உளவுப் பிரிவின் சிறப்பு அதிகாரி ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் துணையுடன் நடத்தப்பட்ட 16 குண்டு வெடிப்புகள் பற்றிய விசாரணைகளின் பட்டியலை வெளியிட்டார்.
ஹிந்துத்துவ தீவிரவாதம் என்கிற சொல் ஊடகங்களில் புழக்கத்திற்கு வந்தவுடன் சங் பரிவார் மற்றும் அதன் வெகுஜனத் தலைவர்கள் அத்வானி உட்பட தீவிரவாதம் என்று ஒன்றுதான் உள்ளது, அதில் ஹிந்து தீவிரவாதம் இஸ்லாமிய தீவிரவாதம் என்று பிரிக்க இயலாது என்றார்கள். அமெரிக்கா தனது எண்ணெய்க்கான யுத்தத்தில் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் 20 ஆண்டுகளாக அப்பட்டமாக ஒரு போரை நிகழ்த்தி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதிகள் பலர் பல நேரங்களில் இதனை சிலுவைப் போர் (crusade) என்றே வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். இருப்பினும் இதனை கிறிஸ்தவ தீவிரவாதம் (christion terrorism) என்று ஒருமுறை கூட எந்த ஊடகமும் அறிவிக்கத் துணிந்ததில்லை. இதுவரை இஸ்லாமியத் தீவிரவாதம், கிறிஸ்துவ தீவிரவாதம் என்ற சொல்லை மிக சகஜமாகப் புழங்கியவர்களுக்கு ஹிந்து தீவிரவாதம் என்ற சொல் தொண்டையில் சிக்கிக் கொண்டது. எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் பொத்தாம் பொதுவாக இஸ்லாமிய தீவிரவாதம் என்கிற போர்வையில் சாமானியர்களைத் தான் இதுவரை பலியாடுகளாக மாற்றியுள்ளோம். தீவிரவாதிகளைப் பிடிக்க இயலாதபோது நாம் அப்பாவிகளை பிடித்து வழக்கை முடிப்பதை வாடிக்கையாக மாற்றியுள்ளோம். மாவோயிஸ்டுகளைப் பிடிக்க முடியவில்லை என்றால் பழங்குடிகளைப் பிடித்து சித்திரவதை செய்து வழக்கை முடிக்கிறோம். ஆனால் இந்தக் காலகட்டங்களில் சுவாமி அசீமானந்தா, சாத்வி பிரக்ஞயா தாக்கூர், புரோஹித் ஆகியோர் நரேந்திர மோடி முதல் அனைத்து பி.ஜே.பி. தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாயின.
ஹைதராபாத்தில் இருக்கும் இந்தியாவின் முன்னணி நகைக் கடை ஒன்றில் வேலை செய்து வந்த முகமத் ரயீசித்தின், மெக்கா மசூதி வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாளன்றே அவனது வேலை பறிபோனது. சில தினங்கள் சித்திரவதை, அதன் பின் சில ஆண்டுகள் சிறைச்சாலை, அதன் பின் வழக்கு விசாரிக்கப்பட்டு விடுதலை. இந்திய நீதிமன்றமே இவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தும் ஹைதராபாத்தில் உள்ள எந்த நிறுவனமும் அவருக்கு வேலை கொடுக்கத் தயாராக இல்லை. நீங்கள் இன்றும் ஹைதராபாத் சென்றால் முகமத் ரயீசித்தினை சந்திக்கலாம். அவர் பிளாட்பாரத்தில் வெயிலுக்குத் தண்ணீர் பழம் விற்றுக் கொண்டிருக்கிறார். இவரைப் போல் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 20 பேரின் கண்ணீர் கதைகள் உள்ளிட்ட அறிக்கையை ஆந்திர சிறுபான்மையினர் ஆணையர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்துள்ளார்.
முகமத் ரயீசித்தின்னைப் போல் ஆயிரக் கணக்கானவர்களின் கதைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களின் கதைகள் எல்லாமே ஏறக்குறைய ஒரே கதையாகவே உள்ளது. எல்லா கதைகளின் நீதி ஒன்றே: இஸ்லாமியப் பெயர் ஒன்றே இவர்களின் இந்தக் கதிக்குக் காரணம். ஷாருக்கானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்டால் என்ன, கேட்காவிட்டால் என்ன? இஸ்லாமியப் பெயர்களைத் தாங்கி வாழ்வது தவிர வேறு ஏதும் செய்யாத இந்த இந்திய இளைஞர்களில் யாரிடமேனும் இந்திய அரசு என்றாவது மன்னிப்பு கோருமா?
- அ. முத்துக்கிருஷ்ணன் (நன்றி: உயிர்மை)

11 ஜூலை, 2012

ஐக்கிய அரபு எமிரேட்: விசா இல்லாத குழந்தையை பையில் மறைத்து எடுத்து வந்த தம்பதி கைது.

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூலை 11, 2012 No comments

 குழந்தைக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாத காரணத்தால் பையில் மறைத்து எடுத்து வந்த தம்பதியரை, ஐக்கிய அரபு எமிரேட் விமானத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
எகிப்து நாட்டிலிருந்து, ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஷார்ஜாவுக்கு ஒரு தம்பதியர் விமானத்தில் வந்திறங்கினர். இவர்களது விசா மற்றும் பாஸ்போர்ட்டை சோதித்த அதிகாரிகள் அடுத்த கட்டமாக இவர்களது உடைமைகளை சோதித்தனர்.


அப்போது அவர்கள் வைத்திருந்த பையை ஸ்கேன் செய்து பார்த்த போது, அதில் ஒரு குழந்தை இருப்பதை கண்டு பிடித்தனர். இதையடுத்து, அவர்களை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர்.
குழந்தைக்கு பாஸ்போர்ட், விசா இல்லாததால் பையில் மறைத்து எடுத்து வந்ததாக அவர்கள் கூறினர். அவர்களிடம் மேலும் விசாரணை நடக்கிறது.

நன்றி:http://www.thedipaar.com

மோடியின் கேடித்தனத்திற்கு கிடுக்கி பிடிபோட்ட உச்ச நீதிமன்றம்?

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூலை 11, 2012 No comments



 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது சேதப்படுத்தப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட வழிப்பாட்டுத் தலங்கள் குறித்த விபரங்களை தாக்கல் செய்ய குஜராத் மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று(திங்கள் கிழமை) உத்தரவிட்டுள்ளது. மேலும் இனப் படுகொலையின் போது சேதப்படுத்தப்பட்ட வழிபாட்டு தலங்களை சீரமைக்கவும் மீண்டும் கட்டவும் எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதையும் மாநில அரசு மதிப்பிட வேண்டும் என்று நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.
கடந்த 2002ம் ஆண்டு நடந்த வன்முறைச் சம்பவங்களில் வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து இஸ்லாமிய நிவாரணக் கமிட்டி தாக்கல் செய்த மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கத் தவறியதற்காக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.
மேலும் சேதப்படுத்தப்பட்ட 500 வழிபாட்டுத் தலங்களுக்கும் இழப்பீடு தருமாறும் குஜராத் அரசுக்கு கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து குஜராத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நரேந்திர மோடி அரசு மனுத் தாக்கல் செய்திருந்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், குஜராத் கலவரத்தின் போது இடித்து தரை மட்டமாக்கப்பட்ட மற்றும் சேதப்படுத்தப்படட வழிபாட்டு தலங்கள் பற்றிய விவரங்களை நீதிமன்றத்திடம் அரசு தெரிவிக்க வேண்டும்.
கலவரங்கள் அல்லது இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமா என்பதை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யும்.
இந்த வழக்கு விசாரணை நடந்தபோது குஜராத் அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழிபாட்டுத் தலங்களை சீரமைக்க அரசின் நிதியை செலவிட முடியாது என்றார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வெள்ளத்தாலோ அல்லது நிலநடுக்கத்தாலே ஒரு வீடு சேதமடைந்தால் அதற்கு நீங்கள் நிவாரணம் தருகிறீர்கள். அப்படி இருக்கையில் வழிபாட்டுத் தலத்துக்கு ஏன் தர முடியாது என்று கேட்ட நீதிபதிகள், கலவரங்கள் அல்லது இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து நாங்கள் ஆய்வுசெய்வோம் என்று அறிவித்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை வருகிற ஜூலை மாதம் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

10 ஜூலை, 2012

பாரபட்சம் பார்க்கும் தலை நகர் டெல்லி! ஹிந்து நாளிதழ்!!

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், ஜூலை 10, 2012 No comments


டெல்லி, இந்தியாவின் தலைநகரமாம் டெல்லியில் வீடு வாடகைக்கு கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் வேளையில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடுகள் கிடைப்பதில்லை என்று ஹிந்து நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டெல்லியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மற்றும் தரகர்கள் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வீடு தர மறுக்கின்ற அவலம் தொடர்கிறது என்று ஹிந்து பத்திரிக்கை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற அவலங்கள் படித்தவர்கள் அதிகம் வசிக்கக் கூடிய நியூ பிரண்ட்ஸ் காலனி, வசந்த் கன்ஜ், ஜன்க்புரா மற்றும் ரோகினி ஆகிய பகுதிகளில் நடந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நியூ பிரண்ட்ஸ் காலனியிலுள்ள குடியிருப்புகளின் ஏஜென்ட் ஒருவரோ இங்கு “இந்தியர்களுக்கு மட்டுமே இடமுண்டு முஸ்லிம்களுக்கு அல்ல” என்று கூறியுள்ளார். இதே காலனியில் இன்னொரு முஸ்லிம் நபருக்கும் இதேப்போன்று அனுபவம் ஏற்பட்டுள்ளது. அவர் முஸ்லிம் என்பதால் அவரிடம் வீடு வாடகைக்கு எடுக்க அனைத்து வசதிகள் இருந்தும் வீட்டின் உரிமையாளர்கள் வீடு தர மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்து நிருபர்கள் புதுமணத் தம்பதிகள் போன்று வேடமிட்டு ரோஹினியின் செக்டார் 8-ல் வீடு வாடகைக்கு கேட்டனர். ஆனால் அதன் உரிமையாளர்களோ இங்கு ஹிந்துக்கள் வசிப்பதால் முஸ்லிம்களுக்கு தர முடியாது என்றதுடன். இந்தப் பகுதியில் எங்கும் முஸ்லிம்களுக்கு வீடு கிடைக்காது என்று கூறியுள்ளனர்.
அதுவும் தனியாக வாழும் பெண்கள் என்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஹிந்து நாளிதழின் நிரூபர் கணவன் இல்லாத பெண்ணாக வீடு கேட்டபோது கணவன் இல்லாதவள் என்று முதலில் கரிசனம் காட்டிய தரகர்கள் பின்னர் முஸ்லிம் என்றவுடன் வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டு சொல்கிறேன் என்று மழுப்பியுள்ளனர்.
இதனை உற்று கவனிக்கும் போது மத ரீதியாக பிளவுகளை ஏற்படுத்த அதிகாரமற்ற குழு ஒன்று டெல்லியில் இயங்கி வருவதை அறியமுடிகிறது. மேலும் முஸ்லிம்களுக்கு கஷ்மீரிகள் மற்றும் ஆஃப்கானிஸ்தானின் அகதிகள் தங்கும் இடத்தின் அருகில் வீடுகளை கட்டுவது டெல்லியில் வழக்கமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகத்தின் பேராசிரியரான ரிஸ்வான், கைசர் சகட் மற்றும் முனிர்கா ஆகிய பகுதிகளில் வீடு கிடைப்பதில் தமது பெயர் பெரிய இடைஞ்சலாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.
இதுபோன்ற செயல்கள் குறித்து வழக்கறிஞர் அசோக் அகர்வால் கூறுகையில்; இதுபோன்ற செயல்கள் சட்டப்படி தவறு என்றாலும் சமூகத்தில் இதுபோன்ற செயல்களை அடையாளம் காணுவது கடினம் என்று கூறினார். மேலும் அரசு இதனை சரி செய்வது இயலாத காரியம் என்றும் கூறினார்.
மேலும் வீட்டு விவகாரங்களில் மலாய், சைனீஸ் மற்றும் இந்திய மக்களிடையே பொது ஒதுக்கீடை அமுல்படுத்தியிருக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளை உதாரணமாகக் கொண்டு இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் தலித்துகளே இது போன்ற பிரச்சனைகளுக்கு ஆளானார்கள். ஆனால் அவர்களின் பெயரின் மூலம் உடனடியாக அவர்களின் ஜாதி தெரியவராது என்பதால் அவர்களுக்கு பிரச்சனைகள் குறைவு என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கணவரை கொன்று நாடகமாடிய மனைவி கைது

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், ஜூலை 10, 2012 No comments

சிகரெட் சூடு மற்றும் கடித்து கொடுமைப்படுத்திய கணவரை, மனைவியே கொன்ற சம்பவம் மதுரையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பீ.பீ. குளத்தை அடுத்த ஜீவா ந‌கரை சேர்ந்தவர் அன்பழகன்(63) இவரது மனைவி உமாமகேஸ்வரி (45). இவர்களுக்கு கார்த்திக் (28) என்ற மகனும், அமலா என்ற மகளும் உள்ளனர். கொத்தனார் ‌வேலை பார்த்து வரும் அன்பழகன், மனைவியை சிகரெட் சூடு வைத்தும், வாயில் கடித்தும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு இவர்கள் இருவருக்கும தகராறு முற்றியது. உமாமகேஸ்வரி, அன்பழகனை கொன்றார். போதையில் தள்ளாடி விழுந்து இறந்ததாக, உறவினர்களிடம் தகவல் தெரிவித்து உடலை அடக்கம் செய்ய முயன்றனர். அன்பழகன் கொலை செய்யப்பட்டு இறந்ததாக போலீசுக்கு தகவல் வரவே, அவர்கள் சம்பவ இடத்திற்கு விசாரணை செய்தனர். விசாரணையில், தான் தான் கொலை செய்ததாக உமாமகேஸ்வரி ஒப்புக்கொண்டதன் பேரில் போலீசார் உமாமகேஸ்வரியை கைது செய்தனர். இக்கொலையில், மகன் கார்த்திக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


நன்றி; தினமலர்

7 ஜூலை, 2012

சிறுபான்மை இன மக்களின் மறுவாழ்வுக்காக நிதியுதவி அளிக்கப்படுகிறது.

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜூலை 07, 2012 No comments

இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட, சிறு குற்றங்களுக்காகத் தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவந்த சிறுபான்மை இன மக்களின் மறுவாழ்வுக்காக நிதியுதவி அளிக்கப்படுகிறது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தெரிவித்தது:
 
சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்து, இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டோர், சிறு குற்றங்களுக்காகத் தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவந்தோர், உடல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் கண்ணியத்துடன் வாழ வழிவகை செய்வதற்காகவும், சிறு வணிகம் செய்து, மறுவாழ்வு பெறுவதற்காகவும் நிதியுதவியாக அதிகபட்சம் ரூ. 10,000 வரை வழங்கப்படுகிறது.
 
இனக் கலவரங்களால் உடல் உழைப்பு செய்ய இயலாத வகையில், ஊனமுற்றிருந்தால் அல்லது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவராக அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பெருங் குற்றங்களாகக் கருதப்படும் எந்தவொரு செயலிலும் ஈடுபடாதவராகவும், முதல் முறையாக சிறு குற்றத்துக்காகத் தண்டனை அனுபவித்து மீண்டவராகவும் இருக்க வேண்டும்.
 
உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவராக இருந்தால், மாவட்ட அரசு மருத்துவரிடம் பரிசோதித்து, சான்றை அளிக்க வேண்டும். பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தால், வட்டாட்சியரிடமிருந்து பொருள் இழப்பீட்டுச் சான்று பெற்று அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கக் கூடாது. தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
 
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரிடம் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை உரிய சான்று ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 

நன்றி, தினமணி

தீவிரவாத பி ஜே பி கட்சிக்குள் குடும்பி பிடி சண்டையால் நிம்மதியில் காங்கிரஸ்.

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜூலை 07, 2012 No comments


பெங்களூர்:  கர்நாடக முதல்வரை மாற்ற வேண்டும் என்று எடியூரப்பா ஆதரவாளர்கள்  கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அங்கு சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தலை  நடத்த பரிந்துரை செய்யலாம் என்று பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி  தெரிவித்துள்ளார்.
சதானந்த கவுடாவை மாற்றிவிட்டு ஜகதீஷ் ஷெட்டரை முதல்வராக்க வேண்டும் என்று  முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்து  வருகின்றனர். இதற்கு பா.ஜனதா மேலிடமும் சம்மதித்துவிட்டதாகவும், ஜனாதிபதி  தேர்தலுக்குப் பின்னர் ஜகதீஷ் ஷெட்டர் முதலமைச்சர் ஆக்கப்படலாம் என்றும்  கூறப்படுகிறது.
இந்நிலையில் எடியூரப்பாவும், அவரது ஆதரவாளர்களும் விடுக்கும் மிரட்டல் மற்றும்  நெருக்கடியால் எரிச்சலடைந்துள்ள அத்வானி, சட்டசபையைக் கலைத்துவிட்டு  முன்னதாகவே தேர்தலை நடத்த பரிந்துரை செய்யுமாறு கர்நாடக பா.ஜனதாவினரை  கேட்டுக் கொண்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

100 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜூலை 07, 2012 No comments


தமிழகத்தில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டு அப் பள்ளிகளுக்கு 900 ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
 
இதுகுறித்து அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வி பயிலும் வயதிலுள்ள அனைத்து குழந்தைகளும் இடையில் நில்லாமல் கல்வி கற்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறார். அந்த வகையில், மாணவ-மாணவியர் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்துக்கு அருகிலேயே மேல்நிலைக் கல்வி பயில வழிவகை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்கெனவே சென்ற ஆண்டு 65 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் என மொத்தம் 875 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன.
 
அந்த வகையில் இந்த ஆண்டிலும் 100 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
 
தரம் உயர்த்தப்பட்ட ஒவ்வொரு பள்ளிக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல், வணிகவியல் ஆகிய பாடங்களுக்கென 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் மொத்தம் 900 ஆசிரியர் பணியிடங்களைத் தோற்றுவிக்கவும், 100 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாகத் தரம் உயர்த்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.40.26 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
 
அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகள், ஊரகப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் எந்தவிதச் சிரமமும் இல்லாமல் கல்வி பயில வழி ஏற்படும் என அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.