ஹம்துன் அஷ்ரப்

3 பிப்., 2009

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், பிப்ரவரி 03, 2009 No comments

உலகின் வயதான பெண்மணி 115 ஆவது வயதில் மரணம்
உலகிலேயே உயிர் வாழும் அதி வயதானவர் என்ற பெருமையைப் பெற்ற போர்த்துக்கல்லைச் சேர்ந்த மரியா டி ஜீஸஸ் என்ற பெண்மணி, தனது 115 ஆவது வயதில் மரணமானார். கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி எட்னா பார்க்கர் இறந்த பின், உலகிலேயே உயிர் வாழும் அதி வயதானவர் என்ற பெருமையை மரியா பெற்றார்.தற்போது அமெரிக்கரான ஜெர்ட்ரூட் பெய்னெஸே உலகில் அதி வயதான நபராக திகழுகிறார். இவர் 1894 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதி பிறந்தமை குறிப்பிடத்தக்கது.மத்திய போர்த்துக்கல்லில் பிறந்த மரியா டி ஜீஸஸ், தனது 12 வயதிலேயே விவசாயத் தொழிலில் பிரவேசித்ததாகவும் அவர் பாடசாலை வாசலையே மிதித்ததில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.அதனால் அவர் தனது கடைசிக் காலம் வரை எழுதப் படிக்கத் தெரியாத ஒருவராகவே வாழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி. எம்.ரிஷான் ஷெரீப் .


http://www.mrishan.blogspot.com/






0 கருத்துகள்: