ஹம்துன் அஷ்ரப்

2 பிப்., 2009

வெல்வது யார்?

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், பிப்ரவரி 02, 2009 No comments




பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தனது அடுத்த தலைவருக்கான தேர்தலை நோக்கிய நிலையில்,புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்பு மனுக்கள் இன்று தேர்தல் குழுவினரால் பெறப்பட்டன இதனையடுத்து தலைவர் பதவிக்காக தற்போதைய தலைவர் ஜனாப். ஹாஜி M.S. முஹம்மது யூனுஸ் அவர்களும்,


முன்னால் தலைவர் ஹாஜி Dr.S.நூர் முஹம்மது அவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மூன்றாவதாக மதியம் 3 மணி அளவில் கா.மு கவுஸ் அவரது ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வெளிநாட்டில் வசிக்கும் பரங்கிப்பேடடையை சார்ந்த முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமை


கிடைக்ககூடும் என நம்பிக்கொண்டு இருந்த நிலையில், தேர்தல் குழுவினரால்


இந்திய தேர்தல் அமைப்பு சட்டத்தின் படி வெளிநாட்டு வாசிகளுக்கு இந்த ஜமாத் தேர்தலில் ஓட்டுரிமை இல்லையென சொல்லப்பட்டது இந்த ஜமாத் தேர்தலில் தங்களின் பங்களிப்பு அவசியம் இருக்கும் என நினைத்துக்கொண்டிருந்த

வெளிநாட்டு முஸ்லிம்களை ஏமாற்றம் அடையவைத்த இந்த தேர்தல் குழுவினரின் அறிவிப்பால்( தங்களுக்கு ஓட்டுரிமை இல்லாத நிலையில்) வெற்றிப்பெற்று புதிதாக அமையும் ஜமாத்துக்கு இவர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கும் ?? என மக்கள் மனதில் கேள்விஎழும் நிலையில் வெல்வது யார்?
பொருத்திருந்து பார்போம்.
புகைப்படம்
நன்றி; கிரசண்ட் பி.என்.ஒ.














0 கருத்துகள்: