ஹம்துன் அஷ்ரப்

4 பிப்., 2009

கடையடைப்பு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், பிப்ரவரி 04, 2009 No comments

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்தும்,
போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்றது.
தமிழர் பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் சில அரசியல்கட்சிகளால்
முழு அடைப்புக்கு அழைப்புவிடப்பட்டிருந்தது
இதனையடுத்து நமதூர் பரங்கிப்பேட்டையில் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன எப்போதும் பரபரபாக காட்சியளிக்கும் சஞ்சீவிராயர் கோவில் கடைத்தெரு மக்கள் நடமாற்றம் அதிகமின்றி வெறிச்சோடிகாணப்பட்டது.
அத்தியாவசிய தேவைகளான மருந்தகங்கள் வழக்கம்போல் திறந்திருந்தன
"டீ" கடைகள் அனைத்தும் அடைக்கபட்டிருந்ததால் டீ பிரியர்கள் சைக்கிளில் விற்பனையாகும் கேன் டீயை நாடிச்சென்றனர்.
பஸ் போக்குவரத்தும் அதிகமில்லை பஸ்ஸிலும் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

0 கருத்துகள்: