ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

5 நவ., 2010

புதிய புயல் ஜல்....!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, நவம்பர் 05, 2010 No comments

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைபெய்துவருகிறது.

இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக்கடலிலுருந்து மத்திய மேற்குவங்க கடலை நோக்கி நகர்வதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் அளவு குறைந்ததோடு ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.

தற்போது வங்கக்கடலில் புதிய புயல்சின்னம் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் இருந்து 1200 கிலோமீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு தினங்களுக்கு சூறைக் காற்றுடன், பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் ஆந்திராவில் நாளை முதல் கண மழை பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த குறைந்தக்காற்றழுத்த தாழ்வு நிலைக்கு ஜல்... என்று பெயரிடப்பட்டுள்ளது

4 நவ., 2010

பள்ளிக்கூடம்...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், நவம்பர் 04, 2010 No comments




தண்ணிர் குடிக்க
தனி குவளை
ஒவ்வொரு பொழுதும்
தண்ணிர் குடிக்கும்போதும்
ஜாதியை நினைவுப்படுத்தும்
என் பள்ளிக்கூடம்

நன்றி : வார்ப்பு


3 நவ., 2010

இந்நிலை என்று மாறும்...?

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், நவம்பர் 03, 2010 No comments

மேலே உள்ள புகைப்படத்தை பார்க்கும்போது தங்களூக்கு புரிந்திருக்கும் இது ஏதோ ஒரு மருத்துவமனை என்று. ஆம் இது நீங்கள் நினைப்பதுப்போல நமது மாவட்டத்தின் தலைநகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைதான்.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளூக்கு சரிவர கவனிப்பு இல்லை என்கிற காரணத்தால் தான் தனியார் மருத்துவமனையை நோக்கி மக்கள் அதிகளவில் செல்கிறார்கள் , இவர்களின் ஓரே நோக்கம் நல்ல முறையில் நோய் குணமாகவேண்டும், எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை நோய் சரியானால் போதும் என்பதுதான்.

ஆனால் நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டிய மருத்துவமனைகளோ தங்களின் தேவையை (வேறென்ன பணத்தை தான்...) பூர்த்திசெய்வதில் தான் குறியாக உள்ளனர்.

நோயாளி படுக்கும் கட்டில் கால் உடைந்துப்போய்யிருக்கும் நிலையில், நோயாளியியை பற்றி சிறிதும் கவலைப்படாமல் , கட்டிலை மாற்றாமல் ''கல்லையும்-கயிற்றையும் சேர்த்து கட்டிலை கட்டிருக்கிறார்கள்.

ஓ.....இவர்கள்தான் நோயாளியை வைத்து ''கல்லா'' கட்டுவதில் சிறந்தவர்களாயிற்றே?!

இந்நிலை என்று மாறும்?

31 அக்., 2010

52 மி.மீ.மழை...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, அக்டோபர் 31, 2010 No comments


கடலூர் மாவட்டத்தில் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் நெல்பயிரிட்ட நிலையில் வானம்பொய்த்துபோய் சிலநாட்களாக கடுமையாக வாட்டி வதைத்த வெயில் சற்று ஜகா வாங்கி மழைக்கு பாதை அமைத்துக்கொடுத்தது.

இடி மின்னலுடன் தன் வருகையை ஊருக்கு வருகிறேன் என அறிவித்து சிறிது நேரங்கழித்து சொன்னப்படி வந்த மழையார் மாவட்டத்தின் பல்வேறுஇடங்களில் விவசாயிகள் மீது தனது பாசமழையை பொழிந்தார்.

அதிகபட்சமாக சிதம்பரம் அன்னாமலை நகரில் 56மி.மீட்டரும்,அடுத்ததாக நமதூர் பரங்கிப்பேட்டையில் 52மி.மீட்டரும் ,மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழைப்பெய்தது.






இதற்க்கிடையில் கடலூரில் நேற்றுப்பெய்த மழையினால் நாற்பதுஆண்டுகள் பழமையான அண்ணா மார்க்கெட்டில் உள்ள சிமெண்டு கூரை இடிந்துவிழுந்தது.




இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

29 அக்., 2010

கணிணியை குழந்தைகளிடமிருந்து பாதுகாக்க ஒரு இலவச software Toddler Keys

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, அக்டோபர் 29, 2010 No comments

Toddler Keys இந்த சாப்ட்வேர் குழந்தைகளிடமிருந்து கணிணியை பாதுகாக்க பயன்படுகிறது .
இதன் மூலம் CD drive ,Power off button ,keyboard ,mouse போன்றவற்றை lock செய்யமுடியும் இதனால் குழந்தைகள் கணிணியில் உள்ள file /folder போன்றவற்றை delete செய்யமுடியாது .
ஒவ்வொருமுறை கணிணியில் உள்ள keyboard ,mouse பயன்படுத்தும்போது ஒலி எழுப்பும் வகையில் நிறுவலாம் .குறிப்பாக alt+ctrl+del keys பயன்பாடு தவிர்க்கப்படும் .




CD drive குழந்தைகள் அதிகமாக அழுத்தி இதனை திறந்து மூடி விளையாடுவார்கள் இதனையும் இந்த சாப்ட்வேர் மூலம் lock செய்யலாம் .குழந்தைகள் கேம்,movies பார்க்கும்போது அவர்கள் மற்ற file/folder பயன்படுத்த முடியாது .


கீழே உள்ள link click செய்து இலவசமாக download செய்துகொள்ளுங்கள் முற்றிலும் இலவசம் .
இதனை நிறுவியதும் படத்தில் உள்ளதுபோல் ஒரு icon TK எனத்தோன்றும் icon தேர்வுசெய்தால் மேற்கண்டவாறு options காட்டும் நமக்கு வேண்டியவசதியை அமைத்துக்கொள்ளலாம் .Quit என type செய்து பழைய நிலைக்கு கணிணியை கொண்டுவரலாம் .
  • Mouse Lock options:
    • Left mouse button
    • Middle mouse button
    • Right mouse button
    • Double click
    • Mouse wheel
  • Keyboard lock options:
    • Standard character keys (letters, numbers, signs, etc)
    • Additional keys (Navigation keys, function keys, ins/del, home/end, etc)
    • Windows system shortcuts(e.g. alt-tab, win-key, etc)
Size: 450 KB
System: Windows XP, Vista and 7

25 அக்., 2010

அன்னைக்கு..

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், அக்டோபர் 25, 2010 No comments

அம்மா
நீ ஒரு
மூன்றெழுத்து
அதிசயம்
எட்டாவது உலக
அதிசயமெல்லாம்
ஏடுகளில் தான்
நீ மனதளவில்.


பந்தர் அலி ஆபிதீன்
பரங்கிப்பேட்டை.
;நன்றி;
http://www.vaarppu.com/

12 அக்., 2010

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி.

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், அக்டோபர் 12, 2010 1 comment


கிள்ளை : பரங்கிப்பேட்டை ஒன் றியம் கிள்ளை, தெற்கு பிச்சாவரம் மற்றும் கொத்தங்குடி கருத்தாய்வு மையங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் புத்தகங்கள் படித் தல் தலைப்பில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.



கிள்ளை கருத்தாய்வு மையத்தில் நடந்த முகாமில் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமாரவேல் தலைமை தாங்கினார். 18 பள்ளிகளைச் சேர்ந்த 41 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்றுனர் பாலமுருகன் பயிற்சியளித்தார்.தெற்கு பிச்சாவரத்தில் ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் தலைமை தாங்கினார். 19 பள்ளிகளை சேர்ந்த 39 ஆசிரியர் களுக்கு ஆசிரியர் பயிற்றுனர் பாலமுருகன் பயிற்சியளித்தார். கொத் தங்குடியில் ஒருங்கணைப் பாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். 16 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்றுனர் பாஸ் கரன் பயிற்சியளித்தார். மேற்பார்வையாளர் சிவசண்முகம் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.

நன்றி : தினமலர்..


9 அக்., 2010

முகத்துவாரம் முழுவதும் தூர்ந்து - ரூ.50 லட்சம் இழப்பு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, அக்டோபர் 09, 2010 No comments


பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதுமாக தூர்ந்ததால் வெளி மாநிலங் களுக்கு மீன் ஏற்றுமதி செய்வது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அன்னங் கோவிலில் முகத்துவாரம் வழியாக சாமியார் பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, முடசல் ஓடை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக அன்னங்கோயில் முகத்துவாரம் முழுவதுமாக தூர்ந்து போயுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாள் ஒன்றுக்கு 50க்கும் மேற்பட்ட லாரிகளில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்கள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படு வது வழக்கம். தற்போது முகத்துவாரம் முற்றிலும் தூர்ந்துள்ளதால் மீன்வரத்து குறைந்துள்ளது. வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது முற்றிலும் தடைபட்டுள்ளது.

முகத்துவாரத்தை ஆழப்படுத்த 10 கோடி ரூபாய் ஒதுக்கி டெண்டர் விடப்பட்டும் பணி துவங்க வில்லை. முகத்துவாரம் தூர்வாரும் பணி தாமதப்படுவதால் மீனவர்களே முகத்துவாரத்தை ஆழப்படுத்த முடிவு செய்துள்ளனர்


நன்றி : தினமலர்.


10 ஏப்., 2009

மேகம் மூட்டத்துடன் ...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, ஏப்ரல் 10, 2009 No comments



கடந்த சில தினங்களாக மக்களை வாட்டி வதைத்த வெயில் இன்று காணாமல்போக, காலைமுதல் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது குளிர்ந்த காற்றும் அடிக்கதொடங்கியது. பகலில் தூறலாக மக்களை நனைத்த மழை பிற்பகலில் சற்றே வேகம்காட்டின.

17 மார்., 2009

வினோத குரங்கு ?

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், மார்ச் 17, 2009 No comments



..ச்சேச்சே..உங்க ஊருக்கு வந்தது (?) நான் இல்லே நான் சுத்த சைவம், உங்க ஊருக்கு வந்து பிரியாணில்லாம் சாப்பிட நம்மால் முடியாது.









ஆமாம், நேத்து சாயங்காலம் அவரு பார்த்தாராம், செல்போன எடுத்துட்டு வந்து போட்டோ எடுக்குறத்துகுள்ள ஓடிடிச்சாம், இவரு வூட்டு மாடிலே தான் தங்கி இருந்திச்சாம்" இப்படி மணிக்கொருதரம் மெருகூட்டப்படும் கலவையான கருத்துக்களுடன், பரங்கிப்பேட்டை பகுதி பரபரப்பின் பிடியில் ஆழ்ந்து போய் இருக்கின்றது, எல்லாம் ஒரு குரங்கு செய்த சேஷ்டை தான், அது பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.

பரங்கிப்பேட்டை தோணித்துறை பகுதியில் மனித குரங்கு (?) உலாவுவதாக பரவிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் பகலிலும், சில நேரங்களில் இரவிலும் நடமாடுகின்றது என்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் அந்த குரங்கின், முகம், கை-கால் ஆகியவை கறுப்பு நிறத்தில் இருப்பதாக சிலர் வதந்தியை பரப்பியுள்ளதாக தினமலர் நாளேடு (15-03-2009) செய்தி வெளியிட்டுள்ளது.

சாதரணமான குரங்குகளை விட சற்று வினோதமாக காணப்படுவதாகவும், கரடி போல் அதிகமாக முடி உள்ளதாகவும், மேலும், இந்த குரங்கு நேற்று முன்தினம் ரேவு மெயின் ரோடு, ஆற்றங்கரை தெரு போன்ற பகுதிகளிலும் சுற்றி வந்ததாகவும், தினத்தந்தி நாளேடு (16-03-2009) செய்தி வெளியிட்டுள்ளது.


குறிப்பு: படத்தில் இடம் பெற்றுள்ள புகைப்படம் - மாடல்

15 மார்., 2009

ஜமாத் நிர்வாகிகள்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, மார்ச் 15, 2009 No comments



14 மார்., 2009

ரோ(ஓ)டு போட்டாச்சு...!!!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, மார்ச் 14, 2009 No comments




தமிழ் கூறும் நல்லுலகத்தில் புதியதாக ஆராய்சி செய்து கண்டுபிடிக்கப்பட்ட பல சொலவடைகளில் இதுவும் பிரசித்தி பெற்ற ஒன்று தான், அது என்ன தெரியுமா?

"கோடு போட சொன்னால் போதும் ரோடே போட்டுவிடுவார்கள்" என்பது தான்

அதன் பரிணாம வளர்ச்சி தானோ, என்னவோ தெரியவில்லை, பரங்கிப்பேட்டை காஜியார் தெருவில் ரோடு போட சொன்னால் ஓடு போடுகிறார்கள்.

மழைக்காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை முதல் படத்திலும்,
குளிர் காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை இரண்டாவது படத்திலும்
கோடை காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை மூன்றாம், நான்காம் படத்திலும் கண்டு களியுங்கள் (?!)

இனி இளவேனிற் காலம் மட்டும் தான் பாக்கி, அந்த காலத்தில் எப்படியோ?
இப்போது-அப்போது என்று காத்திருந்து வெறுத்து போன திருவாளர் பொதுஜனம் தனது பங்காக சாலைகளில் இருக்கும் பள்ளத்தை ஓடுகளை கொண்டு நிரப்பி விட்டார். பரங்கிப்பேட்டை நகரின் பெரும்பாலான தெருக்களில் சாலைகள் போடப்பட்டிருக்கையில் இந்த காஜியார் தெரு மட்டும் தார் வாடையை நுகராமல்
இருப்பது ஏனோ ?


12 மார்., 2009

சிறுபாண்மை இனத்தினர்காக அனைவர்க்கும் கல்வி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 12, 2009 No comments


கடலூர் மாவட்டத்தில் சிறுபாண்மை இனத்தினர்காக அனைவர்க்கும் கல்வி என்னும் நோக்கத்தில் சிறப்பு மையம் ஒன்று துவக்கப்பட்டது.
நமதூர் பரங்கிபேட்டையில் கடந்த மூன்று வருடங்களாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனது பணத்தை செலவு செய்து சிறப்பாக இலவச டியூஷன் நடத்தி வந்த நண்பர்கள் பி என் ஒ (friendspno) அமைப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகையாக ரூபாய் 1000 அவருக்கு வழங்க படும் என்று C.E.O. அவர்கள் கூறினார்.
முதற் கட்டமாக கடலூர் மாவட்ட்ம் பரங்கிபேட்டையில் அரசு அங்கிகார பெற்ற இலவச டியூஷன் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை (sarva shiksha Abiyan (SSA)) என்னும் இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு மேற்பார்வையிடும் என்றும் கூறினார்.இவற்றை S.ராஜராஜன்(chief education officer ) அவர்கள் துவக்கி வைத்தார்.உபயோகப் பொருட்களை பிளாக் ரிசௌர்ஸ் சென்டெர் (block resourse center) என்னும் ஒரு அமைப்பு கொடுத்தது. மேலும் அரசின் பல்வேறு உதவி திட்டங்கள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
குறிப்பு:அந்த அமைப்பில் உள்ள ஒருவரை ஆசிரியராக நியமித்துள்ளனர்.

நன்றி;கிரஸண்ட்

ஜெர்மனியில் 17 வயது மாணவன் சுட்டு 15 பேர் பலி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 12, 2009 No comments

ஜெர்மனியில் 17 வயது மாணவன் ஒருவன் தன்னுடைய பழைய பள்ளி வளாகத்திற்கு துப்பாக்கியுடன் சென்று 15 பேரைச் சுட்டுக் கொன்றான். இச்சம்பவம் ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.டிம் க்ரெட்ஸ்மர் என்ற அந்த மாணவன் தான் முன்பு பயின்ற ஆல்பர்வில்லே மேல்நிலைப் பள்ளிக்கு புதன் கிழமை காலை 9.30 மணிக்குச் சென்றான். பள்ளி வளாகத்தில் இருந்த மாணவர்களை அவர்களின் தலையைக் குறிவைத்துச் சுட்டான். இதில் எட்டுச் சிறுமிகள், ஒரு சிறுவன் மற்றும் மூன்று ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். அந்தப் பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு மாணவன் காவல்துறைக்குத் தகவல் தந்ததை ஒட்டி காவலர்கள் பள்ளிக்கு வந்தனர். பள்ளியிலிருந்து தப்பிச் சென்ற அவன் வழியில் ஒருவரைக் கொன்று விட்டு, வழியிலிருந்த ஒரு காரைக் கடத்திச் சென்றான். அந்த காரின் டிரைவரை பணயக் கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டான்.பள்ளியிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வென்டிங்கன் என்னும் ஊருக்கு வந்தான். அங்கு தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியில் இருந்த கார் விற்பனை நிலையத்தில் இருவரைக் கொலை செய்தான். காவலர்கள் அவனைச் சுற்றி வளைத்து அவனது காலை நோக்கிச் சுட்டனர். கீழே விழுந்த அவன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மரணமடைந்ததாகக் காவல்துறை கூறுகிறது.அந்த மாணவனின் வீட்டைச் சோதனையிட்டதில் அவனது வீட்டில் சமார் 16 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.ஜெர்மனியில் மாணவர்கள் பள்ளிகளில் இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த 2006 ஆம் ஆண்டு ஒரு மாணவன் 11 பேரை சுட்டுக் கொன்றான். 2002ஆம் ஆண்டில் பள்ளி ஒன்றில் ஒரு மாணவன் 17பேரைச் சுட்டுக் கொன்றான்.
நன்றி; இந்நேரம்

திடீர் மழை : 40 செம்மறி ஆடுகள் பலி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 12, 2009 No comments


புதுச்சத்திரம் அருகே திடீர் மழையால் 40 செம்மறி ஆடுகள் இறந்தன. கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர்காட்டுச்சாகை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர், 300க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். மேய்ச்சலுக்காக புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு கிராம வயல் வெளியில் செம்மறி ஆடுகளை தங்க வைத்து, மேய்த்து வந்தார். நேற்று முன்தினம் பெய்த திடீர் மழையில், செம்மறி ஆடுகள் மழையில் நனைந்தன.

நேற்று காலை திடீரென 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் இறந்தன. இதனால் பெரியப்பட்டு கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பெரியப்பட்டு ஊராட்சி தலைவர் கஸ்தூரி பரங்கிப்பேட்டை கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்தார். கால்நடை டாக்டர் சங்கர் நேரில் சென்று பார்வையிட்டார். திடீர் மழை காரணமாக உஷ்ணம் அதிகரித்தும், குளிர் தாங்கமுடியாமலும் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆடுகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் ஆடுகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


நன்றி: தினமலர் 12-03-2009