
அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் முழக்கத்துடன் தொடங்கியது இந்த வருடத் தியாகத் திருநாள் தொழுகை.

நிகழ்வுகள்..பார்த்தது...படித்தது....
PORTONOVO MASJID
This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]
MARINE BIOLOGY
This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]
This is the PORTONOVO LIGHT HOUSE. [...]
#



பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஐந்து இடங்களில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க இருப்பதால் வாக்காளர் சேர்க்கும் பணி மாவட்ட முழுவதும் பல கட்டங்களாக நடத்தப் பட்டது. புதிய வாக்காளரை சேர்க்க ரேஷன் அட்டை, வயதுக்கான சான்றிதழ் உள்ளிட்ட பல விதிமுறைகள் இருந்ததால் பெரும்பாலானோரின் மனு நிராகரிக் கப்பட்டது. இந்நிலையில் நேற்று பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்மத்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி, சலங்காரத்தெரு தொடக்கப் பள்ளி, தேசிய தொடக்கப்பள்ளி, நெடுஞ்சாலைப்பள்ளி ஆகிய ஐந்து இடங்களில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.
முகாமில் ரேஷன் அட் டைக்கு பதில் வி.ஏ.ஓ., சான்றிதழ், வயது சான்றிதழுக்கு தந்தை அல்லது தாய் ஒப்புதல் கடிதம் கொடுத் தால் போதும் என விதிமுறைகள் தளர்த்தப் பட்டதால் நேற்று ஏராளமானோர் புதிய வாக்கா ளர்களாக சேர்க்கப் பட்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் செழியன், வி.ஏ.ஓ., ராஜாராமன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். நடுவீரப்பட்டு: பண் ருட்டி அடுத்த சி.என். பாளையம் கடைவீதியில் உள்ள நடுநிலைப்பள்ளி மையத்தில் போதிய விண் ணப்பங்கள் இல்லாததால் பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில் ஜெராக்ஸ் எடுத்து வந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்தனர்.
நன்றி ; தினமலர்



ஆதர்ஷ் வீட்டு வசதி கழகத்தில் உறவினர்களுக்கு வீடு வழங்குவதில் நடைபெற்ற ஊழல் வழக்கு காரணமாக முதல்வர் பதவியை அசோக்சவான் ராஜினாமா செய்தார். மகாராஷ்டிரா அடுத்த முதல்வர் யார் என்பதில் பிரித்விராஜ் சவான் மற்றும் பாலாசாகேப் விக்கே பாட்டில் ஆகியோரது பெயர்கள் அடிப்பட்டன. இந்நிலையில் மாநில மேலிட பொறுப்பாளர்களான பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் தற்போது மத்திய இணை அமைச்சராக உள்ள பிரித்விராஜ் சவான் பெயரை மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஏகமனதாக பரிந்துரைத்துள்ளனர். பரிந்துரைகளை கேட்டுக்கொண்டு டில்லி திரும்பிய அந்தோணியும், பிரணாபும் இன்று காலையில் டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர். சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த பிரணாப் : மகாராஷ்டிரா காங்., எம்.எல்.ஏ., க்கள் பரிந்துரையை தலைவர் சோனியாவிடம் கூறியதாகவும் அவரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
24 மணி நேரத்தில் அதிரடி : பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று துவங்குவதற்கு முன்னர் ஆதர்ஷ் ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய மகா., முதல்வர் அசோக் சவான், காமன்வெல்த் ஊழல் புகாரில் சிக்கிய சுரேஷ் கல்மாடி ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து அந்தோணி , பிரணாப் மும்பை பயணம், மகா., காங்., எம்.எல்.ஏ., க்கள் கூட்டம் , டில்லியில் சோனியாவுடன் சந்திப்பு, என 24 மணி நேரத்தில் பரபரப்பு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ராகுல் கணிப்பு : மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் "தூய்மை'யானவராக இருப்பார். அவர் திறமையற்றவராக இருக்கும்பட்சத்தில், உடனடியாக திரும்பப்பெறப்படுவார்.இவ்வாறு ராகுல் கூறியிருந்தார். இந்நிலையில் பிருதிவிராஜ் சவான் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளது காங்., அரசியல் வட்டாரத்தில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. காங்கிரஸ் மேலிடம், சவானின் மத்திய அமைச்சர் பதவியின் அனுபவம் அவருக்கு மாநில அரசை கையாள உதவியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் சவான் திறமைசாலி என பாராட்டியுள்ளது.
பிருதிவிராஜ் பேட்டி : முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக டில்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் பிருதிவிராஜ் சவான். காங்கிரஸ் கட்சி மேலிடம் தன்னை மகாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்கும் படி கேட்டுக்கொண்டதாகவும், அந்த வேண்டுகோளை தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறினார். கூட்டணி கட்சிகள் ஆதரவு நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இன்று மாலை மும்பை செல்வதாக கூறினார். பிரதமர் மன்மோகன்சிங் மத்திய இணை அமைச்சர் பொறுப்புக்களில் இருந்து தன்னை விடுவித்துவிட்டதாக கூறினார்.
நாளை பதவியேற்பு : இன்று மாலை மும்பை செல்லும் பிருதிவிராஜ் சவான் , கவர்னர் சங்கரநாராயணனை சந்திப்பார் என தெரிகறிது. நாளை அவர் முதல்வராக பதவியேற்றுக்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன..
நன்றி : தினமலர்
பி.எஸ்.என்.எல். போன் கட்டணத் தொகையை வசூலிக்க வாடிக்கையாளர் மையம் செயல்படுகிறது. அங்கு ரொக்கமாகவும், காசோலையாகவும் பெறப்படுகிறது. தற்போது பில் தொகையை ரொக்கமாக பெறும் நவீன எந்திரம் ஒன்றை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஏ.டி.எம். எந்திரம்போல் இந்த எந்திரத்தில் செல்போன் அல்லது டெலிபோன் எண்ணை அழுத்தினால் கட்டணம் எவ்வளவு என்பதை காட்டும். அந்தத் தொகையை எந்திரத்தில் போட்டு விடவேண்டும். அதை ஏற்றுக் கொண்டு ரசீதை வழங்கும்.
உடற்பயிற்சி செய்துவந்தால், கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட பலநோய்கள் அண்டாது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வறிஞர் ஹன்னா ஆரெம் என்பவர் தன் ஆய்வுகளின் படி, வாரத்துக்கு சுமார் இரண்டரை மணி நேரமாவது உடல் பயிற்சி செய்யும் பெண்களை கர்ப்பப் பை புற்றுநோய் தாக்குவதில்லை என்று கூறியுள்ளார்.
பொதுவாக, நாற்பது வயதுக்கு மேல் பெண்களை மிரட்டும் நோய்களில் தலையாய இடம் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு உரியது. இந்த நோயைத் தடுக்க வாரத்துக்கு சுமார் இரண்டரை மணி நேரமாவது உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்று ஹன்னா ஆரெம் கூறுகிறார்.
மேலும் குண்டான பெண்கள் கூட உடல் பயிற்சி செய்தால் கர்ப்பப்பை புற்றுநோயைத் தவிர்க்க முடியும் என்று சுமார் 6,000 பெண்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் அறிய முடிந்திருக்கிறது.
உடற் பயிற்சி என்று தனியாக நேரம் ஒதுக்கி செய்ய முடியாவிட்டாலும் கடுமையாக உடல் உழைப்பு செய்கிறவர்களுக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் வராது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அத்துடன் புற்றுநோய் மட்டும் அல்லாமல் வேறு சில நோய்களையும் உடற் பயிற்சி தடுக்கிறது என்கிறார் ஹன்னா.




தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைபெய்துவருகிறது.POLICE - 243224G.H - 253996AMBULANCE - 253800FIRE - 243303E.B - 253786BSNL - 243298GAS OFFICE - 243387POST OFFICE - 243203