ஹம்துன் அஷ்ரப்

5 மார்., 2009

கதிரவனும்..... காலைப் பனியும்...!!!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 05, 2009 No comments


கடந்த சில நாட்களாகவே பரங்கிப்பேட்டை நகரில் கடும் வெயில் வாட்டி வதைக்கின்றது. இதன் காரணமாக பரங்கிப்பேட்டையின் சிறப்பான உணவு வகைகளில் ஒன்றான நன்னாரி சர்பத் அமோகமாக விற்பனையாகின்றது. மார்ச் மாத தொடக்கத்திலேயே நிலைமை இவ்வாறிருந்தால் கோடைக்காலம் என்றறியப்படும் ஏப்ரல்-மே மாதங்களில் நிலைமை எப்படியோ.? நம்ம அரசியல்வாதிகள் தான் பாவம், மே 13-ல் நடக்க இருக்கும் மக்களவை தேர்தலுக்கு வெயிலில் அலைந்து-திரிந்து மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு பெற வேண்டுமே..!
இதற்கிடையில் காலை-மாலை நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், இரவு நேரத்தில் தொடங்கும் பனி காலை 8 மணி வரை நீடித்து சாலைகளில் பனி மூட்டமாக காட்சியளிக்கின்றது, மேலும் இப்பனியின் காரணமாக குழந்தைகள் காய்ச்சலால் அவதிப்படுகின்றார்கள்.

0 கருத்துகள்: