ஹம்துன் அஷ்ரப்

5 மார்., 2009

தெருமுனை பிரச்சார கூட்டம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 05, 2009 No comments

தி.மு.க.அரசின் நிதி நிலை அறிக்கை சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் பரங்கிப்பேட்டை சஞ்சீவிராயர் கோவில் தெருவில் நடைப்பெற்றது. ஒன்றிய செயலாளரும் ஊராட்சி ஒன்றியபெருந் தலைவருமான முத்துபெருமாள் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாண்டியன், வரவேற்புரையாற்றினார்.தலைமை கழக பேச்சாளர் வரகூர் காமராஜ் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். கருவறையில் இருந்து கல்லறை வரை மக்களின் தேவை அறிந்து நலதிட்டங்களை அறிவித்து மக்களுக்காகவே உழைக்கக்கூடிய ஆட்சி கலைஞர் தலைமையிலான இந்த அரசு தான் என்றும், இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளின் படி இடஓதுக்கீடு கொடுத்ததும்,மேலும் அமைச்சரைவையில் முஸ்லிம்களை அமைச்சர்களாக்கி அழகு பார்ப்பதும் கலைஞர் தலைமையிலான இந்த அரசுதான் என்றார். எனவே வர இருகின்ற மக்களவை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ், துணை தலைவர் செழியன், வழக்கறிஞர் தங்கவேல், மாவட்ட பிரதிநிதி முனவர் ஹூஸைன், காண்டீபன், பைசல், அன்சாரி, அஷ்ரப் அலி, பாவாஜான், ஹபிபூர்ரஹ்மான் மற்றும் தி.மு.க முன்னோடிகள் கலந்துக்கொண்டனர்.

0 கருத்துகள்: