ஹம்துன் அஷ்ரப்

10 மார்., 2009

மழைக்காலம் ?!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், மார்ச் 10, 2009 No comments




அக்னி வெயிலாக இருக்குமோ என மக்களை சந்தேககொள்ளும் படி சில தினங்களாக (நன்னாரி சர்பத்,மற்றும் பல குளிர் பானங்களை நாடும்படி) தன் வேலையை காட்டிய வெயில் யாரிடமும் சொல்லாமல் திடீரென ஜகா வாங்கியது.
நேற்றில்லிருந்து மப்பும் மந்தரமாக காட்சியளித்த வானிலை இன்று காலை வெளுத்துவாங்கியது.
தென்கிழக்கு வங்கக் கடலில்,இலங்கைக்கு (பாவம் இலங்கை, போர் ஒரு பக்கம், புயல் ஒரு பக்கம்) அப்பால் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக நம்ம ரமணன் சார், ஓலி-ஓளி வழியாக ஊரு உலகுக்கு சொன்னார்.
நிஷா வோ அல்லது உஷா வோ மறுப்படியும் ஊருக்கு வராம இருந்தா சரிதான்.

0 கருத்துகள்: