ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

10 ஏப்., 2009

மேகம் மூட்டத்துடன் ...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, ஏப்ரல் 10, 2009 No comments

கடந்த சில தினங்களாக மக்களை வாட்டி வதைத்த வெயில் இன்று காணாமல்போக, காலைமுதல் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது குளிர்ந்த காற்றும் அடிக்கதொடங்கியது. பகலில் தூறலாக மக்களை நனைத்த மழை பிற்பகலில் சற்றே வேகம்காட்ட [...]

17 மார்., 2009

வினோத குரங்கு ?

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், மார்ச் 17, 2009 No comments

..ச்சேச்சே..உங்க ஊருக்கு வந்தது (?) நான் இல்லே நான் சுத்த சைவம், உங்க ஊருக்கு வந்து பிரியாணில்லாம் சாப்பிட நம்மால் முடியாது.ஆமாம், நேத்து சாயங்காலம் அவரு பார்த்தாராம், செல்போன எடுத்துட்டு வந்து போட்டோ எடுக்குறத்துகுள்ள ஓடிடிச்சாம், இவரு வூட்டு மாடிலே தான் தங்கி இருந்திச்சாம்" இப்படி மணிக்கொருதரம் மெருகூட்டப்படும் கலவையான கருத்துக்களுடன், பரங்கிப்பேட்டை பகுதி பரபரப்பின் பிடியில் ஆழ்ந்து போய் இருக்கின்றது, [...]

15 மார்., 2009

ஜமாத் நிர்வாகிகள்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, மார்ச் 15, 2009 No comments

[...]

14 மார்., 2009

ரோ(ஓ)டு போட்டாச்சு...!!!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, மார்ச் 14, 2009 No comments

தமிழ் கூறும் நல்லுலகத்தில் புதியதாக ஆராய்சி செய்து கண்டுபிடிக்கப்பட்ட பல சொலவடைகளில் இதுவும் பிரசித்தி பெற்ற ஒன்று தான், அது என்ன தெரியுமா?"கோடு போட சொன்னால் போதும் ரோடே போட்டுவிடுவார்கள்" என்பது தான்அதன் பரிணாம வளர்ச்சி தானோ, என்னவோ தெரியவில்லை, பரங்கிப்பேட்டை காஜியார் தெருவில் ரோடு போட சொன்னால் ஓடு போடுகிறார்கள்.மழைக்காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை முதல் படத்திலும்,குளிர் காலத்தில் காஜியார் [...]

12 மார்., 2009

சிறுபாண்மை இனத்தினர்காக அனைவர்க்கும் கல்வி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 12, 2009 No comments

கடலூர் மாவட்டத்தில் சிறுபாண்மை இனத்தினர்காக அனைவர்க்கும் கல்வி என்னும் நோக்கத்தில் சிறப்பு மையம் ஒன்று துவக்கப்பட்டது.நமதூர் பரங்கிபேட்டையில் கடந்த மூன்று வருடங்களாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனது பணத்தை செலவு செய்து சிறப்பாக இலவச டியூஷன் நடத்தி வந்த நண்பர்கள் பி என் ஒ (friendspno) அமைப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகையாக ரூபாய் 1000 அவருக்கு வழங்க [...]

ஜெர்மனியில் 17 வயது மாணவன் சுட்டு 15 பேர் பலி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 12, 2009 No comments

ஜெர்மனியில் 17 வயது மாணவன் ஒருவன் தன்னுடைய பழைய பள்ளி வளாகத்திற்கு துப்பாக்கியுடன் சென்று 15 பேரைச் சுட்டுக் கொன்றான். இச்சம்பவம் ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.டிம் க்ரெட்ஸ்மர் என்ற அந்த மாணவன் தான் முன்பு பயின்ற ஆல்பர்வில்லே மேல்நிலைப் பள்ளிக்கு புதன் கிழமை காலை 9.30 மணிக்குச் சென்றான். பள்ளி வளாகத்தில் இருந்த மாணவர்களை அவர்களின் தலையைக் குறிவைத்துச் சுட்டான். இதில் எட்டுச் சிறுமிகள், ஒரு சிறுவன் மற்றும் மூன்று ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். அந்தப் பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு மாணவன் [...]

திடீர் மழை : 40 செம்மறி ஆடுகள் பலி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 12, 2009 No comments

புதுச்சத்திரம் அருகே திடீர் மழையால் 40 செம்மறி ஆடுகள் இறந்தன. கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர்காட்டுச்சாகை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர், 300க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். மேய்ச்சலுக்காக புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு கிராம வயல் வெளியில் செம்மறி ஆடுகளை தங்க வைத்து, மேய்த்து வந்தார். நேற்று முன்தினம் பெய்த திடீர் மழையில், செம்மறி ஆடுகள் மழையில் நனைந்தன.நேற்று [...]

11 மார்., 2009

இறப்புச்செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், மார்ச் 11, 2009 No comments

பரங்கிபேட்டையை சேர்ந்த வாகன ஓட்டுனரும் ஜானி பாய் அவர்களின் மகனார் பொத்தி என்கிற செய்யது அஹ்மது அவர்கள் இன்று .மர்ஹுமாகிவிட்டார்கள். அன்னாரின் பிழைகளை அல்லாஹ் மன்னித்து சொர்க்கத்தை தந்தருள சகோதரர்கள் பிரார்த்தனை செய்யுமாறு கோருகிறோம். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊ [...]

10 மார்., 2009

மாறிவரும் வானிலை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், மார்ச் 10, 2009 No comments

மாறிவரும் வானிலை பரங்கிப்பேட்டையில் குளுமையை ஏற்படுத்த, ரியாதிலோ கடும் மணற்புயல். வாகனத்தில் செல்பவர்களுக்கு எதிரே உள்ளது/வருவது தெரியாத அளவுக்குகடும் மணற்காற்று வீசுகிறது.வெளியே தலைகாட்ட முடியவில்லை.இதனால் சில, பல விமான சேவைகளும் விலக்கப்படலாம் என்று தெரிகிறது.இந்த மணற்புயலைப் போல கடந்த வருடங்களில் கண்டதில்லை என்று ரியாத் வாழ் தமிழர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.நன்றி;செய்திmypno.blogspot [...]

மழைக்காலம் ?!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், மார்ச் 10, 2009 No comments

அக்னி வெயிலாக இருக்குமோ என மக்களை சந்தேககொள்ளும் படி சில தினங்களாக (நன்னாரி சர்பத்,மற்றும் பல குளிர் பானங்களை நாடும்படி) தன் வேலையை காட்டிய வெயில் யாரிடமும் சொல்லாமல் திடீரென ஜகா வாங்கியது. நேற்றில்லிருந்து மப்பும் மந்தரமாக காட்சியளித்த வானிலை இன்று காலை வெளுத்துவாங்கியது.தென்கிழக்கு வங்கக் கடலில்,இலங்கைக்கு (பாவம் இலங்கை, போர் ஒரு பக்கம், புயல் ஒரு பக்கம்) அப்பால் குறைந்த காற்றழுத்த தாழ்வு [...]

9 மார்., 2009

மூடப்பட்டிருக்க வேண்டும் டாஷ்மார்க்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், மார்ச் 09, 2009 No comments

நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 10ம் தேதி அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட் டிருக்கும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி வரும் 10ம் தேதி அனைத்து மதுபான கடைகளும், மதுபானம் அருந்தும் இடங்களும் மூடப்பட்டிருக்க வேண் டும். டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில் லரை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர் கள் 10ம் தேதி அனைத்து மதுபான [...]

மழையும்-மனசும்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், மார்ச் 09, 2009 No comments

கடந்த சில தினங்களாக மக்களை வாட்டி வதைத்த வெயில் இன்று காணாமல்போக, காலைமுதல் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது குளிர்ந்த காற்றும் அடிக்கதொடங்கியது. பகலில் தூறலாக மக்களை நனைத்த மழை பிற்பகலில் சற்றே வேகம்காட்டினாலும் , மழையை ரசிக்கும் மூடில் மக்கள் இல்லை காரணம்;சுமார் மூன்று மணியளவில் கச்சேரித்தெருவில் குழந்தை ஓன்று கிணற்றில் விழுந்ததாக எழுந்த வதந்தியும், அதனையடுத்து அதிகளவில் பயணிகளை ஏற்றிவந்த டெம்போ [...]

கவிழ்ந்தது டெம்போ..

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், மார்ச் 09, 2009 No comments

மாசி மகம் தீர்த்தவாரியை முன்னிட்டு முட்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இன்று காலை முதல் பரங்கிப்பேட்டை கடற்கரையை நோக்கி மக்கள் வெள்ளம் கரைப்புரண்டது. இத்திருவிழாவில் கலந்துக்கொள்வதற்காக, டெம்போ டிராவலரில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி வந்த வாகனம் ஒன்று பரங்கிப்பேட்டை பஸ் நிலையம் அருகே கவிழ்ந்தது, இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர், அவர்களை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி பரங்கிப்பேட்டை [...]

7 மார்., 2009

தள்ளு வண்டி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, மார்ச் 07, 2009 No comments

தள்ளு வண்டி அரசு பேருந்துக்கள் சரிவர பராமரிப்பு இல்லாததால் பயணிகளால் தள்ளப்படும் நிலையில் உள்ள ஒரு பேருந்து.இடம் : பரங்கிப்பேட்டை சஞ்சீவிராயர் கோவில் த [...]

5 மார்., 2009

உண்ணாவிரதம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 05, 2009 No comments

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தாத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மார்ச் 10ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அதிமுக தலைவி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு [...]

தெருமுனை பிரச்சார கூட்டம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 05, 2009 No comments

தி.மு.க.அரசின் நிதி நிலை அறிக்கை சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் பரங்கிப்பேட்டை சஞ்சீவிராயர் கோவில் தெருவில் நடைப்பெற்றது. ஒன்றிய செயலாளரும் ஊராட்சி ஒன்றியபெருந் தலைவருமான முத்துபெருமாள் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாண்டியன், வரவேற்புரையாற்றினார்.தலைமை கழக பேச்சாளர் வரகூர் காமராஜ் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். கருவறையில் இருந்து கல்லறை வரை மக்களின் தேவை அறிந்து நலதிட்டங்களை அறிவித்து [...]

கதிரவனும்..... காலைப் பனியும்...!!!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 05, 2009 No comments

கடந்த சில நாட்களாகவே பரங்கிப்பேட்டை நகரில் கடும் வெயில் வாட்டி வதைக்கின்றது. இதன் காரணமாக பரங்கிப்பேட்டையின் சிறப்பான உணவு வகைகளில் ஒன்றான நன்னாரி சர்பத் அமோகமாக விற்பனையாகின்றது. மார்ச் மாத தொடக்கத்திலேயே நிலைமை இவ்வாறிருந்தால் கோடைக்காலம் என்றறியப்படும் ஏப்ரல்-மே மாதங்களில் நிலைமை எப்படியோ.? நம்ம அரசியல்வாதிகள் தான் பாவம், மே 13-ல் நடக்க இருக்கும் மக்களவை தேர்தலுக்கு வெயிலில் அலைந்து-திரிந்து மக்களை [...]

4 மார்., 2009

தமிழக அரசு அழைப்பு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், மார்ச் 04, 2009 No comments

ஹஜ் பயணம் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு.ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்கள், வரும் 5ம் தேதி முதல் தமிழக ஹஜ் கமிட்டி அலுவலகத்தில் விண்னப்ப மனுக்களை பெற்றுக் கொல்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் 31.3.09விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்.தமிழக ஹஜ் கமிட்டி , ரோஸி டவர் (மூன்றாம் தளம்) எண்; 13, மகாத்மா காந்தி சாலை,நுங்கம் [...]

3 மார்., 2009

இலவச பயிற்சி பெறலாம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், மார்ச் 03, 2009 No comments

சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.வேலையில்லாத சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்.வேலையில்லாத சிறுபான்மையின் மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கும் சிறுபான்மையின் இளைஞர்கள் பயிற்சிபெற தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தமிழக அரசின் நிதி உதவியோடு [...]

2 மார்., 2009

தபால் நிலையத்தில் இனி மருந்துகள் வாங்கலாம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், மார்ச் 02, 2009 No comments

இந்திய தபால் தந்தி துறை ரூ.500 கோடி நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், இந்த நஷ்டத்தை சரிகட்டுவதற்காக அத்யாவசிய மருந்துகளையும், பிற பொருட்களையும் தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து வந்தது.வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இத்திட்டம் நடைமுறை ப்படுத்தப்படலாமென்று தெரிகிறது. தமிழகத்தில் உள்ள 9,124 கிராமங்களில் உள்ள தபால் நிலையங்களிலும் இத்திட்டம் [...]

1 மார்., 2009

புத்தக கண்காட்சி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, மார்ச் 01, 2009 No comments

சிதம்பரத்தில் அரிமா சங்கம் சார்பாக 6வது புத்தக கண்காட்சிதுவங்கியது. சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில் அமைக்கபட்டுள்ள இந்த புத்தக திருவிழாவில்பல் வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளனவரும் 8ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைப்பெறும்.தொடக்கவிழாவில் பேராசிரியை.பர்வீன் சுல்தானா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அண்ணா மலை பல்கலைக்கழக துணைவேந்தர் திரு, [...]

அரசு மருத்துவமனையில்...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, மார்ச் 01, 2009 No comments

உள்ளாட்சிதுறை அமைச்சர் திரு,மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு, பால், பழம், பிரட். வழங்கப்பட்டதுஓன்றிய பெருந்தலைவர் முத்துபெருமாள், பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ், பேரூராட்சி மன்ற துனை தலைவர் செழியன்தி.மு.க. நகரசெயலாளர் பாண்டியன், இளைஞர் அணி முனைவர் ஹீசைன், பைசல், கவுன்சிலர்கள் பாவாஜான், ஹாஜா கமால்,அபாகான்,தி.மு.க. முன்னோடிகள் [...]

28 பிப்., 2009

குறைகிறது கட்டணங்கள்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, பிப்ரவரி 28, 2009 No comments

மார்ச் 1-ஆம் தேதி முதல் பி.எஸ். என்.எல். நிறுவனம் லேண்ட்லைன் மற்றும் வில் போன்களின் கட்டணத்தை நிமிடத்துக்கு 33 காசுகளாகவும், எஸ்.டி.டி. கட்டணத்தை நிமிடத்துக்கு 50 காசுகளாகவும் குறைக்கிறது.இத்தகவலை மாநிலங்களவையில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தெரிவித்தார்.இந்தியா கோல்டன் 50 என்ற புதிய திட்டம் மூலம் பிரீபெய்டு மொபைல் சந்தாதாரர்களுக்கு எஸ்.டி.டி. [...]

27 பிப்., 2009

தயக்கம் ஏன்! எழுதப் பழகுங்கள்!!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 27, 2009 No comments

இஸ்லாத்திற்கு எதிராக பனிப்போர் நடந்துக்கொண்டிருக்கிறது. மேற்கத்தியர்களும் மற்றும் அறிவுஜீவியாக தன்னைக் காட்டிக் கொள்பவர்களும் இஸ்லாத்திற்கெதிராக நடத்தும் எழுத்து மற்றும் கருத்துப்போரை பார்க்கும்போது அந்த பனிப்போர் உச்சத்தை அடைந்துவிட்டதோ என்று எண்ண தோன்றுகிறது.அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களையும் செய்தி படிப்பவர்களையும் இந்த மீடியா முஸ்லிம்கள் தீவிரவாதிகள்தான் என நம்ப வைத்திருக்கிறது. எறும்பு [...]

26 பிப்., 2009

ஆர்ப்பாட்டம்...இது...ஆர்ப்பாட்டம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், பிப்ரவரி 26, 2009 No comments

பரங்கிப்பேட்டை பெண்கள் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற ஒழுக்க சீர்கேடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக கண்டண ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.நகர செயலாளர் G.வல்லரசன் தலைமை தாங்கினார்,கடலூர் மாவட்ட செயலாளர் திரு,T.மணி வாசகம் கண்டண உரையாற்றினார்.நகர செயலாளர் பேசுகையில், ஆசிரியர்களை மாணவர்கள் மாதா பிதா குரு தெய்வம் எனசொல்வார்கள் ஆனால் அந்த ஆசிரியர்களோ, மாணவிகள் முன்னால் அருவறுக்கதக்க முறையில் சண்டையிட்டுள்ளார்கள். [...]

ஊழல்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், பிப்ரவரி 26, 2009 No comments

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 2 இலட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி மகேஷ்வரி இந்த தீர்ப்பை அளித்தார். பின்னர் 50 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகை அளித்ததைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப் பட்டார்.150 பக்கங்கள் கொண்டிருந்த இந்த வழக்கின் தீரப்பை வாசித்த நீதிபதி மகேஷ்வரி, [...]

23 பிப்., 2009

ஆசிரியரா இவர் ???

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், பிப்ரவரி 23, 2009 No comments

நமதூர் பரங்கிப்பேட்டை பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் இரு ஆசிரியர்களிடையே ஏற்பட்ட வாய் தகராறு மோதலில் முடிந்தது அதில் ரவிச்சந்திரன் என்கிற ஆசிரியர் ராஜேந்திரன் என்ற ஆசிரியரால்(?) மிகவும்கடுமையாக சித்தரவதை செய்யப்பட்டு தாக்கப்படார்.இந்த சம்பவம் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் முன்னிலையில் நடந்ததுதான் கொடுமையிலும்,கொடுமை. +2, தேர்வு நெருங்கிவரும் நிலையில் மாணவிகள் எதிரில் காட்டுமிராண்டி தனமாய் நடந்துக்கொண்ட [...]

22 பிப்., 2009

பதவியேற்ப்பு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 22, 2009 No comments

இன்று காலை 10.30,மணியளவில் ஜாமியா மஸ்ஜித் மீராப்பள்ளியில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பதவியேற்பு விழா நடைப்பெற்றதுவிழாவில் ஜனாப்,B.ஹமீது கெளஸ் அவர்கள் முன்னிலை வகித்தார். ஜனாப், கலிமா,K.ஷேக் அப்துல் காதர்(நவாப்ஜான் நானா) தலமையேற்க்க, ஹாஜி,அப்துல் சமது ராஷதி கிராத் ஓதினார்.ஜமாத் சார்பாக அமைக்கப்பட்ட தேர்தல் குழு தலைவர் ஜனாப்,ஹாஜி.Y. அஜிஸ் மியான் அவர்கள் தலைவருக்கு பதவிபிரமாணம் செய்துவைத்தார்.தலைவர் [...]

21 பிப்., 2009

மாற்றம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, பிப்ரவரி 21, 2009 No comments

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர்கள்,மற்றும் துனை ஆய்வாளர்கள் வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு மாற்றப்பட்டனர்.நமதூர் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த துனை ஆய்வாளர் திரு,மதிவாணன். ரெட்டிச்சாவடிக்கு மாற்றப்பட்டார்,இவருக்கு பதிலாக குமராட்சியில் பணிபுரிந்த திரு,செல்வராஜ் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிய உள்ளார்.மேலும் திருப்பாதிரிபுலியுரில் [...]

விடிவு காலம் பிறக்குமோ?

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, பிப்ரவரி 21, 2009 1 comment

நீங்கள் புகைப்படத்தில் பார்ப்பது பரங்கிப்பேட்டை பேருராட்சியில் ஆறாவது வார்டில் இருக்கும் காஜியார் தெரு. இந்த தெரு நீண்ட நாட்களாக கவனிக்கப்படாமல் ரோடுகள் மிகவும் மோசமானநிலையில் இருக்கிறது. இரு சக்கரவாகணங்களில் செல்பவர்கள் முதற்கொண்டு, ரோட்டில் நடந்து செல்பவர்கள் வரை அனைவருக்கும் இந்த ரோடு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.மழைக்காலங்களில் இந்த ரோட்டில் குளம் ஒன்று உருவாகிவிடும்.பரங்கிபேட்டையில் பல்வேறு [...]

போட்டாச்சு ரோடு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, பிப்ரவரி 21, 2009 No comments

பல மாதங்களாக கவனிக்கப்படாமல் இருந்து வந்த வாத்தியாப்பள்ளி ரோடு சமிபத்தில் நெடுஞ்சாலைதுறையால் கவனிக்கப்பட்டு ரோடுபோடும் பணிநடைப்பெற்றுவருகிறது.இன்னும் ஒரிரு தினங்களில் இப்பணி நிறைவடையும் போல் தெரிகிறது. [...]

20 பிப்., 2009

நன்றி அறிவிப்பு....

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 20, 2009 No comments

சமீபத்தில் நடைப்பெற்ற இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் தமக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு தங்களுது நன்றியை தெரிவித்துக்கொண்டனர். [...]

Pages 261234 »