ஹம்துன் அஷ்ரப்

8 டிச., 2010

மலைப்பாம்பு...

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், டிசம்பர் 08, 2010 No comments


மலைப்பாம்பு உட்பட 4 பாம்புகளை தோள் பைக்குள் மறைத்து விமானத்தில் கொண்டு வந்தவரை தரையிறங்கியதும் அபுதாபி விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். இதை அறிந்து, விமானத்தில் பயணித்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.
இந்தோனேசியா & ஐக்கிய அரேபு எமிரேட்டுக்கு இடையே சென்ற இத்திஹாத் விமானத்தில் பாம்புகளை ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். அபுதாபி விமான நிலைய அதிகாரிகள் அவர் வைத்திருந்த தோள் பையை சோதனை செய்ததில். அதில் மலைப்பாம்பு உட்பட 4 பாம்புகள் இருந்தன. மேலும் அவர் வைத்திருந்த பெட்டியில் 2 கிளிகள் மற்றும் 1 அணில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.


விமானத்தில் அவற்றில் ஏதாவது வெளியேறி இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று உடன் பயணித்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். எப்படி இதை பரிசோதிக்காமல் விமானத்தில் ஏற அனுமதித்தனர் என்று வியப்பு தெரிவித்தனர்.

0 கருத்துகள்: