ஹம்துன் அஷ்ரப்

18 டிச., 2010

புகையை தவிப்பீர் நலமுடன் வாழ்வீர்...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, டிசம்பர் 18, 2010 No comments


மச்சி வாட ஒரு தம் போட்டுட்டு வரலாம் இன்று நிறைய இடங்களில் நண்பர்களிடம் ஒலிக்கும் வார்த்தைகளில் ஒன்று. புகை நமக்கு பகை, புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்ன சொன்னாலும், எப்படி விளம்பரப்படுத்தினாலும் இன்று புகை பிடிப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. புகைப்பழக்கம் ஒழிக்க முடியாத ஒன்று புகை பிடிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும் உடலுக்கு தீங்கான விசயம் என்று. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் புகைபிடிப்பவர்கள் பார்த்து புகைப்பதை விட்டால் தான் புகையை ஒழிக்க முடியும்.

முக்கியமாக இளைய சமுதாயம் நிறைய புகைப்பழக்கத்தை ஆரம்பிக்கின்றனர் இதற்கு காரணம் அவர்களின் வருவாய். படிக்கும் போது அவ்வப்போது திருட்டு தம் அடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள் அதே வேலைக்கு செல்லும் போது தைரியமாக அடிப்பார்கள் கேட்டர்ல் சம்பாரிக்கறமல்ல இது தான் பதிலாக இருக்கும்.

புகைக்க ஆரம்பிக்க சில காரணம்

1. நண்பர்கள் அவன் பிடிக்கிறதை பார்த்து நாமும் குடித்தால் என்பதால்

2.சினிமாவில் நடிகர்கள் புகைபிடிப்பதை ஒரு ஸ்டைலாகவும், அதை வீரமாகவும் காட்டுவதால் இவர்களும் ஆரம்பித்து விடுகின்றனர்.
3.வீட்டில் அப்பா குடிப்பதை தினமும் பார்க்கும் போது நாமும் குடிச்சா என்ன

4.சக நண்பர்களிடம் நானும் குடிப்பேன் என பெருமை பீத்துவதற்காக
5.வேலைல டென்சனா இருக்குது அதனால குடிச்சேன் என்பது

6.தம் அடிச்சாதான் சுறுசுறுப்பா இருக்கமுடியும் என்ற நினைப்பு
இப்படி பல தேவையில்லாத காரணங்களுக்காகத்தான் புகை பிடிக்கன்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சப்பை கட்டுவது. புகை பிடித்தால் எனக்கு அது நடந்தது இது நடந்தது என யாரும் சொல்ல முடியாது.

புகையை தவிப்பீர் நலமுடன் வாழ்வீர்...
கடந்த வருடம் என் நண்பன் இறந்த புகை பழக்கத்தால் கேன்சர் வந்து இறந்தார் அவரைப்பற்றிய எங்கள் நண்பர்களுடன் பேசியதால் அவர் நினைவாக இப்பதிவு...

0 கருத்துகள்: