ஹம்துன் அஷ்ரப்

20 டிச., 2010

விபத்து..நால்வர் மரணம்.

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், டிசம்பர் 20, 2010 1 comment

கடலூர்-சிதம்பரம் நெடுஞ்சாலையில் செம்மாங்குப்பம் (சிப்காட்) அருகே இன்று காலையில் ஏற்பட்ட சாலைவிபத்தில் பள்ளிமாணவிகள் உட்பட நால்வர் மரணமடைந்தனர்.

கடலூரில் உள்ள கல்விநிலையங்களில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்துவருகின்றனர் இவர்கள் தினந்தோறும் வேன்களில் பள்ளிகளுக்கு சென்றுவருவது வழக்கம்.

அரையாண்டு தேர்வு நடந்துவரும் நிலையில் காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு மாணவிகளை ஏற்றிச்சென்ற ஓரு வேனும், அருகே உள்ள தொழிற்ச்சாலை பணிக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற வேனும் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் மரணமடைந்தனர். பலியான மாணவிகளில் இருவர் சகோதரிகள் என்பது குறிப்பிடதக்கது.காயமடைந்த மாணவிகள் கடலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

1 கருத்துகள்:

இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.