ஹம்துன் அஷ்ரப்

31 டிச., 2010

பெண்ணை கற்பழித்த இஸ்ரேல் முன்னாள் அதிபர்;

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, டிசம்பர் 31, 2010 No comments


இஸ்ரேல் முன்னாள் அதிபர் மொஷே கத்சவ் (65). கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை இவர் அதிபராக இருந்தார். அப்போது 2-க்கும் மேற்பட்ட பெண்ணை கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது. மேலும், கடந்த 1990-ம் ஆண்டு இவர் மந்திரியாக இருந்தார்.
 
அப்போது தனது பெண் உதவியாளரை மிரட்டியும், தாக்கியும் கற்பழித்ததாகவும் தெரிகிறது.  இந்த குற்றச்சாட்டுகளுக்காக கத்சவ் கைது செய்யப்பட்டார். அவர் மீது டெல் அவிவ் நகரில் உள்ள மாவட்டக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அதிபர் கத்சவ் மீதான கற்பழிப்பு புகார் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
 
இந்த வழக்கின் மீதான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இஸ்ரேலில் கற்பழிப்பு குற்றத்துக்கு 4 ஆண்டுகள் முதல் 16 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வழங்கப்படும். ஆனால் கத்சவுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படலாம் என்று தெரிகிறது. துக்க நாள் கற்பழிப்பு வழக்கு நிரூபிக் கப்பட்ட முன்னாள் அதிபர் மீது தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதயாகு கருத்து தெரிவித்துள்ளார்.
 
இஸ்ரே லுக்கும், அங்கு வாழும் மக்களுக்கும் இது ஒரு துக்க நாளாகும் என கூறியுள்ளார். இதற்கிடையே, மாவட்ட கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளதாக கத்சவின் வக்கீல்கள் தெரிவித்துள்ள னர்

0 கருத்துகள்: