ஹம்துன் அஷ்ரப்

5 டிச., 2010

வீராணம் ஏரி.....!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, டிசம்பர் 05, 2010 No comments

:வீராணம் ஏரியில் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் வீராண ஏரியில்லிருந்து தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது.கடலூர்  மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் இம் மாவட்டத்தில் உள்ள ஓடைகள் வழியாக வீராணம் ஏரிக்கு பல்லாயிரம் கன அடி நீர் வந்தது. ஏரியின் மொத்த கொள்ளவான 1,465 மில்லியன் கன அடியில் 960.20 மில்லியன் கன அடி மட்டுமே இருப்பு வைக்கப்பட்டது. இந் நிலையில்.நீர் வரத்து அதிகரித்ததால், வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடை மற்றும் சேத்தியாத்தோப்பு மதகு வழியாக 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதால் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் 1,343 மில்லியன் கன அடி வரை ஏரியின் நீர் மட்டம் உயர்ந்தது.பின்னர் மழையின் தீவிரம் குறைந்தும் ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் ஓடை வழியாக ஒரே  அளவில் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

மீண்டும் மழை பெய்யும் என எதிர்பாக்கபட்ட நிலையில் ஏரியின் நீர் மட்டத்தை முற்றிலுமாக குறைக்க மாவட்ட நிர்வாகம்  முடிவு செய்தனர். அதன்படி கடந்த இரண்டு தினங்களாக நீர் வெளியேற்றப்பட்டதால் ஏரியின் நீர் மட்டம் 763.20 மில்லியன் கன அடியாக குறைந்தது. நேற்று காலை காலை முதல் வெள்ளியங்கால் ஓடை மதகு மூடப்பட்டது.வீராணம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டதால்சுற்றுவட்டார கிராமங்களில் புகுந்த வெள்ள நீர் படிப்படியாக குறைந்து வருகிறது.

0 கருத்துகள்: