ஹம்துன் அஷ்ரப்

27 டிச., 2010

கிராமத்தில் புகுந்த முதலை ....

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், டிசம்பர் 27, 2010 No comments




சிதம்பரத்தை அடுத்த ஜெயங்கொண்டம் கிராமத்தில் எட்டு அடி நீளமுள்ள ஒரு முதலை புகுந்தது.சமீபத்தில் பெய்ந்த மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட அந்த முதலை, அருகில் உள்ள குளத்துக்குள் இறங்கியது. குளத்தில் குளிக்க சென்ற சிலர், நீரில் மிதந்து திரிந்த முதலையை கண்டதும் பயந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையறிந்த கிராமத்தினர் அந்த குளத்தை சுற்றிலும் திரண்டனர்.
கிராமத்துக்குள் முதலை புகுந்தது குறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் நீண்ட நேரமாக போராடி முதலையை பிடித்தனர். சுமார் 250 கிலோ எடையுள்ள அந்த முதலை வக்காரமாரி நீர்த்தேக்கத்தில் விடப்பட்டது.

0 கருத்துகள்: