ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

31 டிச., 2010

ரூ.80 லட்சம் கோடியைத் தாண்டும் இந்திய ஊழல்கள்!

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, டிசம்பர் 31, 2010 No comments


ஆண்டின் இறுதியில் வழக்கமாகப் பார்க்கப்படும் செய்தி கண்ணோட்டமாக இதனைப் பார்க்க முடியாது... மக்களின் வியப்பு, கோபம், விரக்தி, வெறுப்பு என மோசமான உணர்வுகள் அத்தனையையும் வென்றுவிட்ட சமாச்சாரம் இது. அதுதான் இந்திய ஊழல்கள். எதில் சர்வதேசத்துக்கு சவால் விடுகிறோமோ இல்லையோ... ஊழல்களில் உலக நாடுகள் போட்டி போட முடியாத அளவுக்கு முன்னேறி வருகிறது நாடு. கூடிய சீக்கிரம் ஊழல் தேசங்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானை அடித்து வீழ்த்திவிடுவோம் என்று எதிர்ப்பார்க்கலாம்... காரணம் ஓரிரு கோடிகளிலிருந்து ஓரிரு லட்சம் கோடிகள் என ஊழலில் புரமோஷன் பெற்றிருக்கிறது இந்தியா.

இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா... ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு பெரிதாக பேசப்பட்டு வரும் 2 ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த் விளையாட்டு, ஐபிஎல், வங்கித்துறை, எல்ஐசி முறைகேடுகள் மட்டுமல்லாமல், கடந்த 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மொத்த மதிப்பு இது.

பத்திரிகைகள் / இணையங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தரப்பட்டுள்ள மதிப்பீடுதான் இது. நிஜத்தில் இதைவிட அதிகமாகவும் இருக்கலாம் ஆனால் நிச்சயம் குறைவாக இருக்க வாய்ப்பில்லை!

இந்த 12 ஆண்டுகளாக நடந்த ஊழல்களில் மட்டுமல்ல, இந்திய சரித்திரத்தின் உச்சகட்ட ஊழல் என்றால் அது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளும் அதற்கு பிரதிபலனாக அதிகாரத்திலிருந்தவர்கள் அமுக்கிய பெரும் தொகையும்தான்.

இதோ அந்த ஊழலில் சில 'துளிகளை' இங்கே பார்க்கலாம்:

1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76 லட்சம் கோடி

இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது: 'இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு' ('The spectrum scam has put 'all other scams to shame!'.)

2. சத்யம் மோசடி -ரூ 14000 - 25,000 கோடி:

இவ்வளவுதான் ஊழல் நடந்தது என்று இன்னும் கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்!

இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது.

இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ.

சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்!

3. எல்ஐசி - வங்கித் துறை கடன் ஊழல் - மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை!

மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. காரணம்... இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கைமாறியதுதான்.

இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

வங்கித் துறை - எல்ஐசி ஊழலில் கைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி என்கிறது சிபிஐ.

4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி)

லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் 'ஜுஜுபி'தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம்.

அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர்.

2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.

5. ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி)

ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி.

பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ 40000 கோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி)

கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை.

7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி)

தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.


8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி)

ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ 1000 கோடி.

9. உர - சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி)

உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு - ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).

10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி) 

பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி... என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.

இவை தவிர மேலும் சில ஊழல்களும் இந்த 12 ஆண்டுகளில் நடந்துள்ளன.

2010 ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், சிஆர் பன்சாலி நிதித்துறை ஊழல் (1300 கோடி), இந்திய பங்கு வெளியீட்டு ஊழல் ரூ 1000 கோடி, அப்துல் கரீமின் முத்திரைத் தாள் மோசடி ரூ 500 கோடி, ஜார்கன்ட் மருத்துவ உபகரண மோசடி ரூ 130 கோடி, போலி சொஸைட்டிகளை உருவாக்கி செருப்பு தைக்க கடன் பெற்ற ஊழல் ரூ 1000 கோடி, தினேஷ் டால்மியாவின் பங்குச் சந்தை ஊழல் ரூ 595 கோடி, ஆர் பி ஜி குழுமத்தின் வீரேந்திர ரஸ்தோகி செய்த 43 கோடி ஊழல், யுடிஐ வங்கியின் ரூ 32 கோடி ஊழல், மரம் நடுவதன் மூலம் பெரிய லாபம் பார்க்கலாம் என்று கூறி பெரும் பணம் வசூலித்து நாமம் போட்ட உதய் கோயலின் ரூ 210 கோடி ஊழல், சஞ்சய் அகர்வாலின் ரூ 600 கோடி மோசடி... இப்படி பட்டியல் நீள்கிறது.

இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஓரிருவருக்குத்தான் தண்டனை அறிவிக்கப்பட்டது. மற்ற பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மக்களின் பலருக்கு இந்த ஊழல்களில் பெரும்பாலானவை மறந்தே போய்விட்டது. 

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஊழல்களைப் படித்த பிறகு, "இது எப்போ நடந்தது?" என்று கேட்கிற அளவுக்கு மரத்துப் போயிருக்கிறார்கள். அதிகார வர்க்கம் இதற்காகத்தானே ஆசைப்பட்டது... அனுபவிக்கட்டும். இப்போதைக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை.
நன்றி;

பெண்ணை கற்பழித்த இஸ்ரேல் முன்னாள் அதிபர்;

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, டிசம்பர் 31, 2010 No comments


இஸ்ரேல் முன்னாள் அதிபர் மொஷே கத்சவ் (65). கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை இவர் அதிபராக இருந்தார். அப்போது 2-க்கும் மேற்பட்ட பெண்ணை கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது. மேலும், கடந்த 1990-ம் ஆண்டு இவர் மந்திரியாக இருந்தார்.
 
அப்போது தனது பெண் உதவியாளரை மிரட்டியும், தாக்கியும் கற்பழித்ததாகவும் தெரிகிறது.  இந்த குற்றச்சாட்டுகளுக்காக கத்சவ் கைது செய்யப்பட்டார். அவர் மீது டெல் அவிவ் நகரில் உள்ள மாவட்டக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அதிபர் கத்சவ் மீதான கற்பழிப்பு புகார் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
 
இந்த வழக்கின் மீதான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இஸ்ரேலில் கற்பழிப்பு குற்றத்துக்கு 4 ஆண்டுகள் முதல் 16 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வழங்கப்படும். ஆனால் கத்சவுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படலாம் என்று தெரிகிறது. துக்க நாள் கற்பழிப்பு வழக்கு நிரூபிக் கப்பட்ட முன்னாள் அதிபர் மீது தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதயாகு கருத்து தெரிவித்துள்ளார்.
 
இஸ்ரே லுக்கும், அங்கு வாழும் மக்களுக்கும் இது ஒரு துக்க நாளாகும் என கூறியுள்ளார். இதற்கிடையே, மாவட்ட கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளதாக கத்சவின் வக்கீல்கள் தெரிவித்துள்ள னர்

அமைச்சருக்கு நன்றி..!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, டிசம்பர் 31, 2010 No comments

பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் கூடுதலாக இரண்டு மருத்துவர்களை நியமித்தமைக்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் அருள்முருகன் பிரசுரம் வெளியிட்டுள்ளார்

காசோலையை தொலைத்த வங்கி.!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, டிசம்பர் 31, 2010 No comments

 கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த வியாபாரி முகமது சத்ருதீன். திண்டுக்கல்லைச் சேர்ந்த முனியாண்டி என்பவர், வணிகம் தொடர்பாக முகமது சத்ருதீனுக்கு, 6-8-2008 தேதியிட்ட ரூ. 80 ஆயிரத்துக்குக் காசோலை (திண்டுக்கல் யூனியன் பேங்க் ஆப் இந்தியா காசோலை) வழங்கினார். அதை சத்ருதீன் 4-12-2008-ல் பண்ருட்டி பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்தார்.

வழக்கமாக 7 முதல் 10 தினங்களில் காசோலைகள், கலெக்ஷனுக்குச் சென்று, வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு விடும். ஆனால் சத்ருதீன் தொடர்ந்து வங்கிக்குச் சென்று விசாரித்தும், அந்த காசலைக்கான பணம் அவரது கணக்குக்கு வந்து சேரவில்லை. பணம் இல்லாததால் சத்ருதீனுக்கு வியாபாரம் செய்ய முடியாத நிலையும், பலரிடம் வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
 
இது தொடர்பாக கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை பொதுச் செயலர் நிஜாமுதீன் மூலமாக, விவரம் கேட்டு பண்ருட்டி பாரத ஸ்டேட் வங்கிக்குக் கடிதம் அனுப்பியும், வங்கியில் இருந்து எந்த பதிலும் கிடைக்க வில்லை. எனவே நுகர்வோர் நீதிமன்றத்தில் சத்ருதீன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கணேசன், உறுப்பினர்கள் கலையரசி ராமதாஸ், பாண்டியன் ஆகியோர் விசாரித்தனர்.

 பண்ருட்டி பாரத ஸ்டேட் வங்கி, சத்ருதீனின் காசோலையை திண்டுக்கல் பாரத ஸ்டேட் வங்கிக்கு அனுப்பியதாகவும், திண்டுக்கல் பாரத ஸ்டேட் வங்கி 9-12-2009 அன்று தமக்குக் கிடைத்த கவரில் கடிதமோ, காசோலையோ இல்லை என்று தெரிவித்ததாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
 இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு கூறப்பட்டது.

 காசோலை விஷயத்தில் பண்ருட்டி பாரத ஸ்டேடே வங்கி எவ்வித தொடர் நடவடிக்கையும் எடுக்காதது சேவைக் குறைபாடு ஆகும். எனவே பாதிக்கப்பட்ட சத்ருதீனுக்கு பண்ருட்டி பாரத ஸ்ட்டேட் வங்கி நஷ்டஈடாக ரூ. 10 ஆயிரம், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 2 ஆயிரம், 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று, நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

 தொலைந்து போன காசோலையைக் கண்டுபிடிக்க, பண்ருட்டி பாரத ஸ்டேட் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும், இது தொடர்பாக 2 மாதத்தில் சத்ருதீனுக்கு பதில் அளிக்க வேண்டும், அப்படி வங்கி செய்யத் தவறினால், சட்டப்படி வங்கி மீது சத்ருதீன் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

 இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சத்ருதீன் சார்பில், கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவைப் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் ஆஜராகி வாதாடினார்

மருத்துவர்கள் தேவை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, டிசம்பர் 31, 2010 No comments

இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே -க்கு எதிரான சுவரொட்டி, வெள்ள நிவாரணம் விரைந்து வழங்க கோரி சுவரொட்டி போன்றவற்றினை அவ்வப்போது வெளியிட்டு வந்த பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் கோ.அருள் முருகன், இம்முறை தனது சக பேரூராட்சி மன்ற உறுப்பினர் நடராஜனுடன் இணைந்து பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பணி குறித்து சுவரொட்டி வெளியிட்டுள்ளார்.

படக் கருவியும் படைக் கலனே!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, டிசம்பர் 31, 2010 No comments

த்தியக் கிழக்கு என்றழைப்பார்கள் அந்தப் பகுதியை.

உலகப் பிரச்சினைகளின் மையமாக இருப்பதாலும், பெரும்பாலான யுத்தங்களுக்கு கிழக்காக இருப்பதாலும் அவ்விதம் சொல்லப்படுவதும் ஒருவகையில் பொருத்தமே.  அங்கே நாடற்றவர்களின் நாடான பஃலஸ்தீனில்   வயது பேதமின்றி கையில் கிடைத்த ஆயுதங்களை ஆக்ரமிப்பாளர்களுக்கெதிராக ஏந்தியிருக்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள். அதே நாட்டின்  மாய் மஸ்ரி (Mai Masri) என்கிற பெண்மணி ஏந்தியதோ படக்கருவியை!

மத்தியக் கிழக்கின் ஒவ்வொரு காலநிலையையும் உலகமே உன்னித்துப்பார்க்க இவருடைய ஆவணப்படங்கள் ஜன்னலைப் போல் அமைந்து வந்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல.

கடந்த 30 ஆண்டுகளாக லெபனானில் இஸ்ரேல் நிகழ்த்திய அத்துமீறல்களை; லெபனானின் உள்நாட்டு யுத்தங்களை; 2000ல் பஃலஸ்தீன் கண்ட ‘இன்திஃபாதா’ என்னும் பேரெழுச்சியை; - இப்படி ஒன்றையும் விடாமல் ஆவண(ப்பட)மாக்கி வைத்திருந்தாலும், மாய் மஸ்ரியுடைய நோக்கம் யுத்தத்தையும் அதன் இடிபாடுகளையும் படம் பிடிப்பதல்ல;  மாறாக, அக்கட்டத்தில் இருக்கிற (அ) இல்லாமற் போகிற மனிதத்தன்மை, நாளாந்திர வாழ்க்கை, தினசரி இழப்புகள், கவலைகள், தோன்றி மறையும் (அ) மறைந்து தோன்றும் நம்பிக்கைகள் ஆகியவையே இவருடைய கோணம்.

யுத்தத்துடனும், யுத்தத்தின் போதும் அவற்றின் இருமுனைகளில் உள்ள பாமர மக்களின்  அசந்தர்ப்பமான சூழல்களை மாய் வெளிப்படுத்துகிறார். ஓய்வு ஒழிச்சலின்றி தான் காணும் அகதி முகாம்கள், அரசியல் மாற்றங்கள், நம்பிக்கையையும், பயத்தையும் வெளிப்படுத்தும் சின்னஞ்சிறுசுகள், பெண்கள் என்று பதிவு செய்கிற மாய் தம் வாழ்க்கை மிகுந்த பொறுமையும் அலைக்கழிப்பும் நிரம்பியது.  ஆனாலும் மாய் நம்பிக்கை இழப்பதாக இல்லை.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற படவிழா ஒன்றில், மாய் மஸ்ரியுடையதும், அவர் கணவர் லெபனீய இயக்குநர் ழான் ச்சாமோன் உடையதுமான படங்கள் திரையிடப்பட்டு கெளரவம் அளிக்கப்பட்டன.

“நீண்ட காலமாக ஆக்ரமிப்பில் உள்ள ஊரிலிருந்து வருகிறேன்” என்ற மாய் மேலும் சொன்னார்: “நான் (இப்போது) வாழ்ந்து வருவதும், ஒரு யுத்த பூமியில் (லெபனானில்) தான். அரசியல் படுகொலைகள், உள்நாட்டு கலகங்கள், எழுச்சி முழக்கங்கள் எல்லாம்தான் என் வாழ்வினூடாகக் கண்டு வருகிறேன்”.

மத்தியக் கிழக்கின் சிறந்த ஆவணப்பட இயக்குநராகத் திகழும் மாய் ஃபலஸ்தீனியத் தந்தைக்கும் அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவர்.  1982ல் இஸ்ரேல் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் லெபனானின் ஷாட்டிலா  நகரில் ஃபலஸ்தீனிய அகதிமுகாம்களில் அரக்கத்தனத்துடன் கொத்துக்கொத்தாய் செய்த கொலைகளை, வன்புணர்வுகளைப் பார்த்திருக்கிறார்.

“அந்தக் கொடுஞ்சம்பவத்துக்குப் பின்னர் நாங்கள் தெருக்களில் சென்றபோது எங்கும் துயரமும் ஓலமுமாயிருந்தது. வாழ்வின் மிக மோசமான தருணம் அது. எங்கு பார்த்தாலும் மரணத்தின் கோரமுகம். அப்போதுதான், திடீரென்று ஒன்றுமறியா குழந்தைகளின் சிரிப்பொலி கேட்டேன்.  குண்டுகள் துளைத்திருந்த சுவர்களுக்குப் பின்னாலிருந்து  நம்பிக்கைக் கீற்று மிளிர அந்தப் பிஞ்சுகளின் முகங்கள் தெரிந்தன. இறந்து கிடந்தவர்களெல்லாம் வாழத் திரும்பிவிட்டதைப் போன்றிருந்தது எனக்கு! அப்போது தான் படங்கள் எடுப்பதைத் தீர்மானித்தேன்” என்கிறார் மாய்.  “ அதன் மூலம் தான் ஆறுதல் தேடிக்கொள்கிறேன்”

“தொடக்கத்தில் 1980களில் படமெடுப்பது அத்தனை எளிதாக இல்லை. உளவாளிகளையும் (போர்)விமானங்களையும் பார்க்கும் பார்வையினையே படக்கருவிகள் மீதும் மக்கள் வைத்திருந்தார்கள். ‘இன்திஃபாதா’ என்னும் பேரெழுச்சி நிலையின் போது அந்த அச்சம் அகன்றது. ஒரு புரிந்துணர்வு அரும்பியது”

தன்னுடைய படங்களின் மூலம் வரும் லாபத்தை அகதி முகாம்களிலுள்ள குழந்தைகளின் படிப்புதவித் தொகையாகத் தந்து உதவி வருகிறார் மாய். “குழந்தைகளே மாற்றத்தின் விசை! அவர்கள் தன்னியல்பானவர்கள். சார்பற்றவர்கள், கற்பனாசக்தி நிரம்பியவர்கள்”

ஃபலஸ்தீனிய அகதிமுகாம்களில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞியாக இருந்த காலங்களையும் நினைவு கூர்கிறார் மாய். “படம் எடுப்பவளாக, இப்போது நான் எதிர்கொள்ளும் அபாயங்களும் மிக யதார்த்தமானவை. துப்பாக்கிச்சூடுகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள், அதுவுமில்லாமல் கலவரக்காரர்கள் இவற்றினூடே தான் என் காமிராவும் பயணிக்க வேண்டியிருக்கிறது”

“இந்தக் காமிரா கூட ஓர் ஆயுதம் தான்”  தனது படக்கருவியைச் சுட்டிக்காட்டுகிறார் மாய்.

“என்னிடமில்லாத வலிமையை இதன் மூலமே நான் பெறுகிறேன்” என்கிற மாய் ஒரு ஆவணப்பட இயக்குநராக மாற்று வழிகளையும் யோசித்துவைத்திருக்கிறார்.  தனது சொந்த ஊரான நபுலஸ்ஸுக்கு முதன்முறை மாய் சென்றிருந்தபோது அங்கு ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.  பதுங்கிப் பதுங்கி பாதுகாப்பாக படம் பிடித்தேன். சூழலுக்கேற்ப நடந்துகொண்டேன். ஆவணப்படத்துக்கான கதைக்கருவை யோசிக்கத் தேவையேயில்லாமல் அங்கே நிலைமையே அதுவாக இருந்தது”
தனது ஆவணப்பட ஆக்கங்களில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஃபலஸ்தீன் பற்றிய பிம்பத்தையே குறிப்பிடுகிறார் மாய்.  “உதுமானிய ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சி, கடைசியாக இஸ்ரேலின் ஆக்ரமிப்பு என்று காலாகாலத்துக்கும் அது நிழல்தேசமாகவே இருக்கிறது – அநாதரவானவர்களின் பூமியாக; மக்களே இல்லாமல் போகும் தேசமாக!

“ஒவ்வொரு ஃபலஸ்தீனியரிடத்திலும் ஒரு திரைப்படக் கரு இருக்கிறது. அவரவர்க்கு நிகழ்ந்த சம்பவங்களையும், செவியுற்றதையும் ஒவ்வொருவரும் மனதில் திரும்பத்திரும்ப ஓட்டிப்பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்” என்று மாய்-யின் கூற்று தான் எத்தனை உன்னிப்பானது!
விருது பெற்ற மாய் மஸ்ரியுடைய ஆவணப்படங்கள் யாவும் உண்மையின் தேடலாய் அமைந்தவையே. ஆனால் அவை யுத்தம் பற்றியதல்ல. மிக மோசமான சூழலிலும் இளைஞர்களின் கனவுகள், வாழத் தலைப்படும் நம்பிக்கைகள், அன்பின் சிரிப்பு ஆகியவற்றையே அப்படங்கள் பேசுகின்றன.

“யுத்தம் மக்களிடம் அவர்களின் நல்ல பக்கத்தையும், மோசமான தன்மையையும் வெளிக்கொணர்வதாக அமைகிறது”  என்கிற மாய் மஸ்ரியுடைய இந்தப்படங்கள் ஏற்படுத்திய விளைவுகள் ஆச்சரியமானவை. ஒரு ஜப்பானிய இசையமைப்பாளர் இவருடைய படங்களைப் பார்த்துவிட்டு அகதிமுகாம் குழந்தைகளுக்கு இசைக்கருவிகள் அனுப்ப விரும்பினார். இவருடைய “33 நாள்கள்” படம் பார்த்த ஒரு இஸ்ரேல் தம்பதியினர் கண்கலங்கினார்கள். இதே படத்தை ஆம்ஸ்டர்டாமில் பார்த்த இஸ்ரேலிய பெண் இயக்குநர் ஒருவர் பித்துபிடித்தாற் போல மழையில் இரவு முழுக்க அலைந்து திரிந்திருக்கிறார். இப்படம் தந்த உந்துதலில் அதே இயக்குநர் “அர்னாவின் குழந்தைகள்” என்கிற திரைப்படத்தை எடுத்திருக்கிறார். இத்தாலியில் ஓர் ஊமைச் சிறுவன் “33 நாள்கள்” படத்தைப் பார்த்துவிட்டு, குமுறிப் பேசத் தொடங்கியிருக்கிறான்.
இப்படியாக, தனது போராயுதமான படக்கருவியால் உயிர்களைப் போக்கிடச் செய்யாமல் இதயங்களைத் தட்டி எழுப்புவதை மாய் செய்து வருகிறார் எனும் போது அது பாராட்டப்படவேண்டிய செயலல்லவா!
கட்டுரை: இப்னு ஹம்துன்
நன்றி;
http://www.satyamargam.com

29 டிச., 2010

ஜனவரி 10ல் வாக்காளர் இறுதிப் பட்டியல்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், டிசம்பர் 29, 2010 No comments




வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜனவரி 10ஆம் தேதி வெளியிடப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
1.1.2011ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத்திருத்தம் 25.10.2010 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது.
வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத்திருத்தம், 2011ன் இறுதிப் பட்டியல்கள் 05.01.2011 அன்று வெளியிடப்படுவதாக இருந்தன.
எனினும், சமீபத்தில் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் பாதிக்கப்பட்டதால் இந்திய தேர்தல் ஆணையம் இறுதிப்பட்டியல்கள் வெளியிடும் தேதியினை தற்போது மாற்றியமைத்துள்ளது. இறுதிப் பட்டியல்கள் 10.01.2011 அன்று வெளியிடப்படும். இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

28 டிச., 2010

மரணத்தின் விளிம்பில் தவிக்கும் காஸா நோயாளிகள்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், டிசம்பர் 28, 2010 No comments

கடந்த நான்கு வருட காலமாக சர்வதேச மனித உரிமைகளை மீறும் வகையில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்டுவரும் காஸா மீதான சட்டவிரோத முற்றுகையினால், காஸா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பலதரப்பட்ட நோயாளிகள் பெரும் இன்னல்களை அனுபவித்துவருகின்றனர் என காஸா மருத்துவ வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.

காஸாவில் உள்ள மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், எக்ஸ்ரே கருவிகளுக்குரிய உதிரிப்பாகங்கள் முதலான அத்தியாவசியமான மருத்துவ உபகரணங்களை அனுமதிக்க இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை தடைவிதித்துள்ள காரணத்தினால் சிறுவர், பெண்கள், வயோதிகர் என்ற பாகுபாடின்றி காஸா நோயாளிகள் பெரிதும் துன்புறுவதாகவும், அவசர சிகிச்சையளிக்கப்பட வேண்டிய நூற்றுக்கணக்கான நோயாளிகள் மரணத்தின் விளிம்பில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருப்பதாகவும் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2007 ஜூன் முதல் காஸா கரையோரப் பிராந்தியங்களும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து போதிய மருந்து வகைகளைப் பெற்றுக்கொள்ளும் வழியின்றி காஸா மருத்துவமனைகளில் உள்ள புற்றுநோயாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகித் துன்புற்றுவருகின்றனர்.
இதேவேளை, 2008 டிஸம்பர் மாதம் காஸா மீதான இஸ்ரேலிய காட்டுமிராண்டித் தாக்குதல் இடம்பெற்று சரியாக இரண்டு வருடங்கள் நிறைவுற்ற நிலையில், 300 குழந்தைகள் உட்பட 1400 அப்பாவிப் பலஸ்தீனர்களின் உயிர்களைக் காவுகொண்டு, 5000 க்கும் அதிகாமானோர் படுகாயமடைந்த துர்ப்பாக்கிய நிகழ்வை நினைவுகூறும் பல்வேறு நிகழ்ச்சிகள் உலகின் பல பாகங்களிலும் இடம்பெற்றன.
காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புத் தாக்குதலின் விளைவாக சுமார் 4000 பலஸ்தீன் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. நாட்டின் கீழ்க்கட்டமைப்பு வசதிகள் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டன. ஏராளமான குழந்தைகளும் பெண்களும் பல்வேறு உளவியல் பாதிப்புகளுக்கு உட்பட்டு இன்றுவரை துன்புற்றுவருகின்றனர். சுமார் மூன்று வாரகாலம் தொடர்ந்த இஸ்ரேலிய அத்துமீறல் யுத்தத்தினால் சுமார் 50,000 பலஸ்தீனர்கள் வீடற்ற அகதிகளாய் முகாம்களில் வசித்துவருகின்றனர்.
உலக நாடுகள் மற்றும் ஐ.நா. வாக்குறுதியளித்தபடி முறையான மீள்கட்டுமான முயற்சிகள் இன்னுமே முற்றுப்பெறாத நிலையில், பலஸ்தீன் பொதுமக்களின் நாளாந்த சுமுக வாழ்வையே கேள்விக்குறியாக்கும் வகையில் இன்னுமே ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படாமல் தொடரும் இஸ்ரேலிய முற்றுகை குறித்து உலகளாவிய மனிதநேய மற்றும் மனித உரிமைகள் அமைப்புகள் பல தொடர்ந்தும் தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றமையும் இஸ்ரேலிய உற்பத்திப் பொருட்கள், சேவைகளைத் தொடர்ந்து பகிஷ்கரிப்புச் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

27 டிச., 2010

கிராமத்தில் புகுந்த முதலை ....

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், டிசம்பர் 27, 2010 No comments




சிதம்பரத்தை அடுத்த ஜெயங்கொண்டம் கிராமத்தில் எட்டு அடி நீளமுள்ள ஒரு முதலை புகுந்தது.சமீபத்தில் பெய்ந்த மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட அந்த முதலை, அருகில் உள்ள குளத்துக்குள் இறங்கியது. குளத்தில் குளிக்க சென்ற சிலர், நீரில் மிதந்து திரிந்த முதலையை கண்டதும் பயந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையறிந்த கிராமத்தினர் அந்த குளத்தை சுற்றிலும் திரண்டனர்.
கிராமத்துக்குள் முதலை புகுந்தது குறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் நீண்ட நேரமாக போராடி முதலையை பிடித்தனர். சுமார் 250 கிலோ எடையுள்ள அந்த முதலை வக்காரமாரி நீர்த்தேக்கத்தில் விடப்பட்டது.

25 டிச., 2010

இந்திய பாஸ்போர்ட்டை தொலைத்தவர்களின் கவனத்திற்கு

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, டிசம்பர் 25, 2010 1 comment



இந்தியாவில் தொலைத்துவிட்டால் என்ன செய்வது:


1. முதலில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். கொடுத்ததன் பயனாய் கிடைக்கும் முதல் தகவல் அறிக்கை (FIR) அவசியம் தேவை.



2. அ) இந்த முதல் தகவல் அறிக்கையின் மூன்று நகல்கள்






இ) கடவுச்சீட்டு தொலைந்து போக காரணம், இடம், நேரம் போன்றவற்றை விவரிக்கும் கடிதம்



ஈ) தொலைந்த கடவுச்சீட்டிற்கு மாற்றாய் புதிய கடவுச்சீட்டு வழங்குமாறு கடவுச்சீட்டு அலுவலருக்கு வேண்டுகோள் கடிதம்.



உ) தொலைந்து போன கடவுச்சீட்டின் நகல்




இவற்றுடன் தொலைந்த/பழுதடைந்த கடவுச்சீட்டிற்கு மாற்றாய் புதியது வழங்கக்கோரும் விண்ணப்ப படிவத்தையும் (Duplicate Passport in lieu of lost, damaged or stolen passport) முழுமையாக பூர்த்தி செய்து பாஸ்போர்ட் ஆபீஸில் சமர்பிக்க வேண்டும். பழைய பாஸ்போர்டின் நகல்கள் இருந்தால் மாற்று வழங்குவது சற்று விரைவாக நடக்கும்.




அதோடு இதே விண்ணப்பத்தில் முகவரி மாற்றம், திருமணம், குழந்தைகள் மற்றும் இன்னபிற விவரங்களில் மாற்றங்கள் இருந்தால் அதையும் குறிப்பிடலாம். அதோடு ECNR பழைய பாஸ்போர்டில் கொடுக்கப்பட்டிருந்தால், அதையும் அதற்குண்டான பகுதியில் குறிப்பிடவேண்டும். ECNR உக்கு தேவையான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.





மேற்குறிப்பிட்டவற்றோடு, புதிய கடவுச்சீட்டு வேண்டும்போது சமர்பிக்க வேண்டியஆவணங்களையும் சமீபத்திய புகைப்படங்களையும் இணைக்க வேண்டும்.




இவற்றோடு மாற்றுக் கடவுச்சீட்டிற்கான கட்டணத்தையும் (தற்போது ரூ. 2500) செலுத்த வேண்டும்.




மேற்சொன்னவற்றை பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் இருந்தால் நேரடியாகவோ, மாவட்ட தலைநகரங்களில் இருக்கும் குறிப்பிட்ட அரசு அலுவலகங்களிலோ,விரைவுத்தபால் நிலையங்களிலோ சமர்ப்பிக்கலாம்.




தத்கால் முறையில் அவசரமாக மாற்றுக் கடவுச்சீட்டு தேவைப்பட்டால் அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் மட்டுமே நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். (இது முந்தைய விதி. தற்போது மாறியிருப்பதாக சொல்கிறார்கள். இதை confirm செய்ய வேண்டும்)தத்கால் முறையில் விண்ணப்பம் செய்வதற்கு அவசரத் தேவைக்கான எவ்விதமான சான்றும் சமர்பிக்கத் தேவையில்லை.



வெளிநாட்டில் தொலைந்துவிட்டால் என்ன செய்வது?




மாதிரிக்காக இங்கே செல்லவும்



சேதமடைந்த (damaged) கடவுச்சீட்டுகளுக்கு காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை தேவையில்லை (obviously! :)). தற்போதைய கடவுச்சீட்டின் நகலுடன் அசலும் சமர்ப்பிக்க படவேண்டும். அதோடு Duplicate Passport in lieu of lost, damaged or stolen passport படிவத்தை பூர்த்தி செய்து புதிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.



மேலதிக விவரங்களுக்கு இங்கே செல்லவும்....



நன்றி;http://adiraipost.blogspot.com

23 டிச., 2010

சாணக்கிய அரசியல்வாதி..!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், டிசம்பர் 23, 2010 No comments


கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன்(92)  காலமானார்.  கேரளா மாநிலத்தில் 4 முறை முதல்வராக இருந்தவர் கருணாகரன் என்கிற பெருமைக்குறிய மனிதர்.  காங்கிரஸின் மூத்த தலைவரான இவர் மத்திய அமைச்சராகவும் இருந்தவர்.


காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை ஏற்பட்டதால் கடந்த 10ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் கடந்த சில நாள்களுக்கு முன் அவரது உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் ஆனந்தபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கருணாகரனுக்கு நேற்று காலை பக்கவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. எனினும் இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் இயக்கம் சீராக இருந்தது. அவரது உடல் நிலையை ஆனந்தபுரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.




1991ல் ராஜிவ் படுகொலைக்குப் பின், தேர்தலில் நாடு முழுவதும் அதிக இடங்களில் காங்., வெற்றி பெற்றது. கருணாகரன் மீண்டும் முதல்வரானார். கருணாகரன் முதல்வராக இருந்த போது, 1993 முதல் 1995 வரையான காலத்தில், அந்தோணி தலைமையிலான அதிருப்தி கோஷ்டியினர், கருணாகரனுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அப்போது நரசிம்மராவ் அந்தோணி பிரிவை ஆதரித்ததால், கருணாகரன் 1995 மார்ச் 19ல் பதவி விலக நேரிட்டது. மூன்று முறை (1995, 1997 மற்றும் 2004) ராஜ்யசபாவுக்கும், இரு முறை (1998, 1999) லோக்சாபாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995ல் மத்திய தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். 


கட்சி விரோத நடவடிக்கைக்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர், 2005ல் தேசிய இந்திரா காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார். நீண்ட காலம் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த கருணாகரனின் பலமாக அவரது சாதுர்ய அரசியல் சதுரங்கக் காய் நகர்த்தலின் சாணக்கியத்திலேயே அமைந்திருந்தது. எனினும் கட்சிக்குள் பிரிவுகள் ஏற்படுத்தி அதன் மூலம் தன் அரசியல் விருப்பங்களை பூர்த்தி செய்து கொண்டவர் என்றும் பலரால் விமர்சிக்கப்பட்டார் கருணாகரன். எனினும் தேசிய காங்கிரஸ் ஒரு சாணக்கிய அரசியல்வாதியை இழந்துவிட்டது.


22 டிச., 2010

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், டிசம்பர் 22, 2010 No comments

ஹக்காசாஹிப் தெரு - கலிமா நகர் அருகே, மர்ஹும் முஹம்மது காசிம் அவர்களின் மகனாரும், மர்ஹும் அப்துல் கரீம் அவர்களின் மருமகனும், சாஹுல் ஹமீது, யூசுப் அலி, ஜாபர் அலி, ஆகியோர்களின் தகப்பனாரும், தெசன், அன்சாரி ஆகியோர்களின் மச்சானுமாகிய டீ கடை அப்துல்லாஹ் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தர்கா அடக்கஸ்தலத்தில்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

20 டிச., 2010

விபத்து..நால்வர் மரணம்.

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், டிசம்பர் 20, 2010 1 comment

கடலூர்-சிதம்பரம் நெடுஞ்சாலையில் செம்மாங்குப்பம் (சிப்காட்) அருகே இன்று காலையில் ஏற்பட்ட சாலைவிபத்தில் பள்ளிமாணவிகள் உட்பட நால்வர் மரணமடைந்தனர்.

கடலூரில் உள்ள கல்விநிலையங்களில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்துவருகின்றனர் இவர்கள் தினந்தோறும் வேன்களில் பள்ளிகளுக்கு சென்றுவருவது வழக்கம்.

அரையாண்டு தேர்வு நடந்துவரும் நிலையில் காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு மாணவிகளை ஏற்றிச்சென்ற ஓரு வேனும், அருகே உள்ள தொழிற்ச்சாலை பணிக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற வேனும் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் மரணமடைந்தனர். பலியான மாணவிகளில் இருவர் சகோதரிகள் என்பது குறிப்பிடதக்கது.காயமடைந்த மாணவிகள் கடலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

19 டிச., 2010

எளிமையான ஆனால் சிறப்புமிக்க விழா...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, டிசம்பர் 19, 2010 No comments







அது ஒரு எளிமையான விழா, ஆனால் சிறப்புமிக்க விழாவாக அமைந்திருந்தது எனலாம், அது நேற்று மாலை ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நினைவு மினி மஹாலில் சிங்கை தொழிலதிபர், சமூக சேவகர் S.M. ஜலீல் அவர்களுக்கு பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஜக்கிய ஜமாஅத் சார்பாக நடைப்பெற்ற பாராட்டு விழா.

ஜமாஅத் - பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில், மீராப்பள்ளி இமாம் முஜீபுர் ரஹ்மான் உமரி கிராஅத் ஓதி கூட்டத்தினை துவக்கி வைத்தார்.

தலைமையுரையாற்றிய ஜமாஅத் தலைவர்  M.S.முஹம்மது யூனுஸ், பரங்கிப்பேட்டைக்கு மட்டுமின்றி அருகிலுள்ள பல்வேறு ஊர்களிலுள்ள முஸ்லிம் சமுதாய மக்களின் வாழ்வியல் முன்னேற்றம், உயர்கல்விக்காக சகோதரர் S.M.ஜலீல் ஆற்றிவரும் பணிகளை பட்டியலிட்டார், மேலும் உயர்கல்விக்காக தொழிலதிபர் H.M.ஹனிபா ஆற்றிவரும் பணிகளுக்காகவும் ஊர் மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்தார்.

பரங்கிப்பேட்டையிலுள்ள பள்ளிவாசல் நிர்வாகங்கள், பல்வேறு அமைப்புகள், சார்பாக பொன்னாடை அணிவித்து தங்களின் அன்பினை வெளிப்படுத்தினர்.

இறுதியாக ஏற்புரை நிகழ்த்திய S.M.ஜலீல் தனது உரையில், இளைஞர்கள் - பெரியோர்கள் குர்ஆன் ஓதுவதற்கு வசதியாக மக்தப்கள் ஏற்படுத்தவேண்டுமென்றும், தனது நீண்ட நாள் விருப்பமான பரங்கிப்பேட்டை நகரில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு மருத்துவமனை அமைக்க வேண்டும், அதற்கான உதவிகளை செய்யவும் தான் தயாராக இருப்பதாகவும் இக்கூட்டத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி கூறியது, கூட்டத்திற்கு வந்திருந்தோரை நெகிழ வைத்தது. இதுப்போன்ற நல்ல உள்ளங்களுக்கு சொந்தக்காரர்கள் நம்மிடையே பல்கி பெருக வேண்டும். அதுவே சமூக முன்னேற்றத்திற்கான வலுவான கட்டமைப்பினை உருவாக்கி தரும்.

கூட்டத்தில் தொழிலதிபர் H.M.ஹனிபா, பரங்கிப்பேட்டையிலுள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள், பைத்துல்மால், கிரஸண்ட நல்வாழ்வு சங்கம், இஸ்லாமிய கல்வி வளர்ச்சி மையம், முஸ்லீம் லீக், தமுமுக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகளும், பொதுமக்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.